செய்திகள் :

சாத்தூர்: 'தனியார் கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்' - கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

post image

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எதிர்க்கோட்டை, எட்டகாப்பட்டி ஊராட்சியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

"இப்பகுதியில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. கல்குவாரியால் கிராமத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. கல்குவாரிக்காக வெடி வைக்கும் போது கிராமத்தில் உள்ள வீடுகளில் பிரச்னை ஏற்படுகிறது.

இதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன என ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருக்கிறோம்.

இந்தக் கல்குவாரிக்கு எனத் தனியான பாதை ஏதும் இல்லாததால் கிராமத்தின் பொதுப் பாதையைப் பயன்படுத்தி அதையும் சேதப்படுத்துகிறார்கள்" என இக்கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மனு அளித்த கிராம மக்கள்
மனு அளித்த கிராம மக்கள்

கல்குவாரிக்கு கருத்து கேட்பு கூட்டத்தில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கிராமத்திற்கே சம்பந்தமில்லாத வேறு ஊரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து கல்குவாரி வேண்டுமெனக் கோரிக்கை வைக்க வைத்தார்கள். அதனால் கிராம மக்களுக்கும், அவர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது.

அதேபோல் கிராம சபை கூட்டத்திலும் கல்குவாரிக்கு எதிராக சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

இக்குறைதீர் கூட்டத்தில் தனியார் கல்குவாரிக்கு வழங்க இருக்கும் உரிமத்தை ரத்து செய்யக் கோரி 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

டெல்லி குண்டு வெடிப்பு: ``எந்த ஆதாரமும் இல்லை'' - 3 மருத்துவர்களை விடுவித்த NIA

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை (10-ம் தேதி) நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தொடர்பு... மேலும் பார்க்க

மதுரை: ``குப்பை மேடாக காட்சியளிக்கும் கிருதுமால் நதி; நோய் பரவும் அபாயம்'' - மக்கள் அச்சம்

மதுரை சப்பாணி கோயில் தெரு, மீனாட்சி தியேட்டர் அருகில் உள்ள கிருதுமால் ஆற்றின் அருகில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆற்றின் குப்பைகளை இருபுறமும் குவித்து வைத்து சென்... மேலும் பார்க்க

கோவை: 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா - எப்படி இருக்கு? | Photo Album

கோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்கா... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி: புதர் மண்டி, சிதிலமடைந்து காட்சியளிக்கும் ஏரிப் பூங்கா - புனரமைப்பு செய்யப்படுமா?!

சேலம் மாவட்டம், மூன்று‌ ரோடு அருகில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு பள்ளப்பட்டி ஏரிப் பூங்கா தற்போது பழுதடைந்து புனரமைப்பு பணிகளை எதிர்நோக்கி காத்திருக்கிறது.பள்ளப்பட்டி ஏரியை... மேலும் பார்க்க

``தொகுதிக்கு 500 வாக்குகள் காலியானால் என்ன நடக்கும்?'' - SIR குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி

2021 சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் பெற்று அமைச்சரானார் ஐ. பெரியசாமி. திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருக்கிறார்கடந்த ஆகஸ்ட் ... மேலும் பார்க்க

"தூய்மைப் பணியாளர்களுக்கான தேவையை திராவிட மாடல் அரசு படிப்படியாக செய்யும்"- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.சென்னை கலைவாணர் அரங்கத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணிய... மேலும் பார்க்க