செய்திகள் :

சாம்சங் தொழிலாளர்கள் 3 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்: ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

post image

சாம்சங் தொழிலாளர்கள் 3 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததால் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே சாம்சங் இந்தியா தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மூன்று ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றிய வருகின்றனர்.

இங்கு பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள் தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும், ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆண்டு இறுதியில் 1,500-க்கும் அதிகமான தொழிலாளா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். 36 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

இதையும் படிக்க |தங்கத்தில் இப்போது முதலீடு சாத்தியமா?

இதையடுத்து ஒரு மாதத்திற்கு மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் நிறுவன தொழிலாளர்கள், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, அக்.17 (வியாழக்கிழமை) மீண்டும் பணிக்குத் திரும்பினர்.

இந்த நிலையில் தொழிற்சங்கத்தை பதிவு செய்யாத தொழிலாளர் நலத்துறையை கண்டித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் கடந்த மாதம் 27 ஆம் தேதி சிஐடியு தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளான மோகன்ராஜ் சிவனேசன் குணசேகரன் மூன்று பேரை சாம்சங் நிர்வாகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தது.

அனைத்து தொடர்ந்து தற்போது சிஐடியு தொழிற்சங்கத்தில் உள்ள சாம்சங் தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தற்போது சாம்சங் நிறுவனத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

"பிஜாப்பூரில் மிகப்பெரிய வெற்றி": பாதுகாப்புப் படையினருக்கு அமித் ஷா பாராட்டு

புதுதில்லி: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் 31 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதற்காக பாதுகாப்புப் படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவித்துள்... மேலும் பார்க்க

உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்தில் சோ்ந்த 16 இந்தியா்களை காணவில்லை: மத்திய அரசின் அதிர்ச்சி பதில்

புது தில்லி: உக்ரைன் மீதான ரஷிய போரில் அந்நாட்டு ராணுவத்தில் சோ்ந்த இந்தியா்களில் 16 பேரைக் காணவில்லை என ரஷியா தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சா் கீா்த்தி வரதன் சிங் தெரிவித்துள்ளாா்.இது த... மேலும் பார்க்க

மக்களை சந்திக்க யோசிக்கும் எடப்பாடி கருத்து சொல்லக் கூடாது: அமைச்சா் அன்பில் மகேஷ்

திருச்சி: மக்களை சந்திக்க யோசிக்கும் எடப்பாடி கே. பழனிசாமி, ஈரோடு இடைத்தோ்தலில் போட்டியிடாமல் கருத்து சொல்வது கூடாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சியில... மேலும் பார்க்க

தில்லியை பாதுகாப்பானதாகவும், தூய்மையானதாகவும் மாற்றுவோம்: கிரண் பேடி

புது தில்லி: "தில்லியை ஆரோக்கியமானதாகவும், பாதுகாப்பானதாகவும், தூய்மையானதாகவும் மாற்றுவோம்" என்று புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார். தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வ... மேலும் பார்க்க

ஆக்கபூா்வமான எதிா்க்கட்சியாக செயல்படுவோம்: பிரியங்கா கக்கா்

புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளாக தில்லி மக்கள் அளித்த ஆதரவிற்கு ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவி... மேலும் பார்க்க

குடியிருப்பு கட்டடத்தில் தீ! பெண் பலி..ஒருவர் படுகாயம்!

மகாராஷ்டிர மாநிலம் தாணேவிலுள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீயினால் பெண் ஒருவர் பலியானார். மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தாணேவின் எனஐபிஎம் சாலையிலுள்ள சன்ஸ்ரீ குடியிர... மேலும் பார்க்க