செய்திகள் :

சாலமன் பாப்பையா: "அனாதை பிள்ளைகளாக நாங்கள் நிற்கிறோம்"- மனமுடைந்து அழுத பாரதி பாஸ்கர்

post image

மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா உடல்நலக்குறைவால் நேற்று(செப்.11) காலமானார்.

அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

இந்நிலையில் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பாரதி பாஸ்கர், " அவர் எங்கள் எல்லோருக்கும் ஒன்றை தான் சொல்லிக்கொடுத்தார்.

சாலமன் பாப்பையா
சாலமன் பாப்பையா

நமது பேச்சு, செயல், சிந்தனை எல்லாம் எளியவர்கள், வறியவர்கள், குரலற்றவர்கள் அவர்களுக்காக இருக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொடுத்தார்.

எவ்வளவு பெரிய உச்சாணிக் கொம்பில் இருந்தாலும் அவரை விட எளிமையான மனிதரை இந்த உலகத்தில் பார்க்க முடியாது. அவருடைய 85 வயதுக்கு பிறகும் கூட அவருடன் புகைப்படம் எடுக்க யாராவது வந்தால் எழுந்து நின்று வணக்கம் சொல்லிவிட்டு தான் புகைப்படம் எடுத்துக்கொள்வார்.

உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தமிழ் மக்களையும் அவர் அவ்வளவு நேசித்தார். தமிழ் இலக்கியத்திற்காகவும், திருக்குறளுக்காகவும் அவர் செய்தவை பல காலங்களுக்கு இருக்கும். அவரது மறைவினால் நாங்கள் கலங்கி நிற்கிறோம். நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை.

பாரதி பாஸ்கர்
பாரதி பாஸ்கர்

அனாதை பிள்ளைகளாக நாங்கள் இப்போது நிற்கிறோம். இத்தனை நாள் எங்களுக்கு வழிகாட்டினார். அவருடைய புகழ் எல்லாவற்றையும் எங்களுடையதாக மாற்றினார். அவருடைய பிள்ளைகளாகிய நாங்கள் திசை தெரியாமல் நிற்கிறோம்" என்று அழுதபடி மனமுடைந்து பேசியிருக்கிறார்.

சாலமன் பாப்பையா: "சில நேரங்களில் கோபப்படுவேன். இது சரியில்லை என்று... ஆனால் அவர்.!"- கலங்கிய ராஜா

மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா உடல்நலக்குறைவால் நேற்று(செப்.11) காலமானார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசு மரியாதையுடன் ... மேலும் பார்க்க

பட்டிமன்றத்தை வீட்டின் வரவேற்பறைக்குக் கொண்டு வந்த 'ஆசிரியர்'! – சாலமன் பாப்பையா நினைவுப் பதிவு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

``கலங்கி நிற்கிறேன்... ஒரே இருளாக இருப்பது போல இருக்கிறது" - கண்ணீருடன் பாரதி பாஸ்கர்

பிரபல தமிழ் அறிஞரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா அவர்களின் திடீர் மறைவு தமிழ் உலகையும், அவரது ரசிகர்களையும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 90.மதுரை திருமங்கலம் அருக... மேலும் பார்க்க

சாலமன் பாப்பையா: "செப்டம்பர் 11 தமிழுக்கு நல்லநாள் இல்லை போலும்..!" - கவிஞர் வைரமுத்து உருக்கம்

பட்டிமன்றம் மூலம் மக்கள் மனதைக் கவர்ந்த சாலமன் பாப்பையா உடல்நலக் குறைவால் இன்று (செப்.11) காலமானார். அவருக்கு வயது 90. அவரது மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கவிஞ... மேலும் பார்க்க

சாலமன் பாப்பையா: ' தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு' - பிரபலங்கள் இரங்கல்

பட்டிமன்றம் மூலம் மக்கள் மனதைக் கவர்ந்த சாலமன் பாப்பையா உடல்நலக் குறைவால் இன்று (செப்.11) காலமானார். அவருக்கு வயது 90. அவரது மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிக... மேலும் பார்க்க

அன்பு பெரியோர்களே, அருமைத் தாய்மார்களே.. விடை பெற்றார் சாலமன் பாப்பையா

அன்பு பெரியோர்களே, அருமைத் தாய்மார்களே எனத் தன் காந்தக் குரலால் கால் நூறாண்டுக்கும் மேலாக தமிழ் மக்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்த ஓய்வுபெற்ற பேராசிரியரும் பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உட... மேலும் பார்க்க