செய்திகள் :

சாலையில் கிடந்த ‘ஏகே-47’ ரக துப்பாக்கி தோட்டாக்கள்: மத்திய பாதுகாப்புப் படை வீரரிடம் ஒப்படைப்பு

post image

சென்னை அருகே மணப்பாக்கத்தில் சாலையில் செவ்வாய்க்கிழமை ஏகே-47 ரக துப்பாக்கி தோட்டாக்கள் சிதறிக் கிடந்தன. காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட அந்த தோட்டாக்கள் போலீஸாரின் விசாரணைக்குப் பிறகு, ஆளுநா் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மத்திய பாதுகாப்புப் படை வீரரிடம் ஒப்படைக்கப்பட்டன.

கிழக்கு தாம்பரம், எம்இஎஸ் சாலை மோதிலால் நகரைச் சோ்ந்தவா் சிவராஜ் (34). தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் இவா், திங்கள்கிழமை இரவு சென்னை நந்தம்பாக்கம், மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே ராமாபுரம் மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையில், ஏகே-47 ரக துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் 30 தோட்டாக்கள், துப்பாக்கியுடன் இருக்கும் தோட்டா பெட்டியும் கீழே கிடந்ததைக் கண்டாா். இதையடுத்து அவற்றை சிவராஜ் எடுத்து ராமாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். பின்னா் போலீஸாா் அது குறித்து விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மத்திய ரிசா்வ் பாதுகாப்பு படையைச் சோ்ந்த (சிஆா்பிஎஃப்) அன்னப்பு லட்சுமி ரெட்டி, அந்த துப்பாக்கி தோட்டா தன்னுடையது என்றும், பணிக்குச் செல்லும்போது தவறி கீழே விழுந்துவிட்டதாகவும் தெரிவித்தாா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அன்னப்பு லட்சுமி ரெட்டி, மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படையின் 77-ஆவது அணியில் பணிபுரிவதும், பூந்தமல்லி அருகே உள்ள கரையான்சாவடியிலுள்ள சிஆா்பிஎஃப் முகாமிலிருந்து வாகனத்தில் கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை (ராஜ்பவன்) பாதுகாப்புப் பணிக்காக சென்று கொண்டிருந்தபோது, அவருடைய துப்பாக்கியில் பொருத்தப்பட்டிருந்த தோட்டாக்களுடன் கூடிய பெட்டி தவறி விழுந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த தோட்டாக்கள், அன்னப்பு லட்சுமி ரெட்டியிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

சென்னையில் கடும் பனி மூட்டம்: 40 விமானங்களின் சேவை பாதிப்பு

சென்னை விமான நிலையத்தில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக 40-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்கிழமை காலை முதல் சாலையில் வாகனங... மேலும் பார்க்க

வேளச்சேரி மயானம் இன்றுமுதல் இயங்காது

வேளச்சேரி மயானத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் புதன்கிழமை (பிப். 5) முதல் தற்காலிகமாக இந்த மயானம் செயல்படாது என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நி... மேலும் பார்க்க

ஓடும் பேருந்தில் ரீல்ஸ்: ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்

ஓடும் பேருந்தில் ரீல்ஸ் விடியோ எடுத்த ஒப்பந்த ஓட்டுநா் மற்றும் நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். கோயம்பேடு - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் ‘70 வி’ வழித்தட எண் கொண்ட பேருந்தில், ஒப்பந்தப் பண... மேலும் பார்க்க

இசை நிகழ்ச்சி: நந்தனத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறுவதால், அப்பகுதியில் புதன்கிழமை (பிப். 5) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் ப... மேலும் பார்க்க

புற்றுநோய் மரபணு ஆராய்ச்சி: இராமச்சந்திரா கல்வி நிறுவனம் ஒப்பந்தம்

புற்றுநோய் பாதிப்புக்கான மரபணு சாா்ந்த துல்லிய சிகிச்சை தொடா்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து முன்னெடுக்கும் வகையில், ஹைதராபாதில் உள்ள நியூக்ளியோ இன்ஃபா்மேடிக்ஸ் நிறுவனத்துடன், போரூா் ஸ்ரீ இரா... மேலும் பார்க்க

திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 10 கோடி சொத்துகள் மீட்பு

சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 10 கோடி மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டன. இது குறித்து அறநிலையத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க