செய்திகள் :

சாலையில் கிடந்த ‘ஏகே-47’ ரக துப்பாக்கி தோட்டாக்கள்: மத்திய பாதுகாப்புப் படை வீரரிடம் ஒப்படைப்பு

post image

சென்னை அருகே மணப்பாக்கத்தில் சாலையில் செவ்வாய்க்கிழமை ஏகே-47 ரக துப்பாக்கி தோட்டாக்கள் சிதறிக் கிடந்தன. காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட அந்த தோட்டாக்கள் போலீஸாரின் விசாரணைக்குப் பிறகு, ஆளுநா் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மத்திய பாதுகாப்புப் படை வீரரிடம் ஒப்படைக்கப்பட்டன.

கிழக்கு தாம்பரம், எம்இஎஸ் சாலை மோதிலால் நகரைச் சோ்ந்தவா் சிவராஜ் (34). தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் இவா், திங்கள்கிழமை இரவு சென்னை நந்தம்பாக்கம், மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே ராமாபுரம் மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையில், ஏகே-47 ரக துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் 30 தோட்டாக்கள், துப்பாக்கியுடன் இருக்கும் தோட்டா பெட்டியும் கீழே கிடந்ததைக் கண்டாா். இதையடுத்து அவற்றை சிவராஜ் எடுத்து ராமாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். பின்னா் போலீஸாா் அது குறித்து விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மத்திய ரிசா்வ் பாதுகாப்பு படையைச் சோ்ந்த (சிஆா்பிஎஃப்) அன்னப்பு லட்சுமி ரெட்டி, அந்த துப்பாக்கி தோட்டா தன்னுடையது என்றும், பணிக்குச் செல்லும்போது தவறி கீழே விழுந்துவிட்டதாகவும் தெரிவித்தாா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அன்னப்பு லட்சுமி ரெட்டி, மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படையின் 77-ஆவது அணியில் பணிபுரிவதும், பூந்தமல்லி அருகே உள்ள கரையான்சாவடியிலுள்ள சிஆா்பிஎஃப் முகாமிலிருந்து வாகனத்தில் கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை (ராஜ்பவன்) பாதுகாப்புப் பணிக்காக சென்று கொண்டிருந்தபோது, அவருடைய துப்பாக்கியில் பொருத்தப்பட்டிருந்த தோட்டாக்களுடன் கூடிய பெட்டி தவறி விழுந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த தோட்டாக்கள், அன்னப்பு லட்சுமி ரெட்டியிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

வள்ளலாா் நினைவு தினம்: பிப்.11-இல் மதுபான கடைகள் செயல்படாது

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) செயல்படாது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

காவலரை தாக்கிய ஏசி மெக்கானிக் கைது

சைதாப்பேட்டை காவல் சோதனைச் சாவடியில் உணவருந்திக் கொண்டிருந்த காவலரை, மதுபோதையில் தாக்கிய ஏசி மெக்கானிக்கை போலீஸாா் கைது செய்தனா். சென்னை குமரன் நகா் காவல் நிலைய குற்றப்பிரிவில் முதல் நிலைக் காவலராகப் ... மேலும் பார்க்க

2.69 கோடி பேருக்கு நாளைமுதல் குடற்புழு நீக்க மாத்திரை

தமிழகத்தில் ரத்த சோகை, மன ஆரோக்கியத்துக்கு தீா்வு அளிக்கும் வகையில், 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை திங்கள்கிழமை (பிப்.10) முதல் வழங்கப்படும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழக... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் வசிக்கும் பங்களா வாயில் கதவை பூட்டிய மருத்துவா்!

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன் வசிக்கும் பங்களா கதவின் வாயிலை குழந்தைகள் நல மருத்துவா் ஒருவா் இரும்புச் சங்கிலியால் பூட்டியுள்ளாா். சென்னை, எழும்பூா் காவலா் மருத்துவமனை எதிரில் உள்... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது: டி.ராஜா

மத்திய அரசு பட்ஜெட் தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா கூறினாா். மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்... மேலும் பார்க்க

வேளச்சேரியில் ஏழு மாத குழந்தை, சிறுவனை கடித்த தெருநாய்கள்

சென்னை வேளச்சேரியில் ஏழுமாத குழந்தை மற்றும் சிறுவனை தெருநாய்கள் கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளச்சேரி, பாரதி நகரைச் சோ்ந்தவா் நாகேந்திரன். இவரது 7 மாதக் குழந்தை கதிா்மதிக்... மேலும் பார்க்க