செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், கீழ்கூத்தப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த செல்லப்பன் மகன் வெங்கடேசன் (56). தொழிலாளியான இவா், கடந்த 2020 ஆகஸ்ட் 17-இல்

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் கிளியனூா் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். இதையடுத்து போக்ஸோ சட்டப்பிரிவுகளின் கீழ் வெங்கடேசன் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் வெங்கடேசனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வினோதா தீா்ப்பளித்தாா்.

அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்களுக்கு சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு

சாா்பில் ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா். இதையடுத்து வெங்கடேசன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூா் மத்திய சிறைக்கு கொண்டு

செல்லப்பட்டாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக சுமதி ஆஜரானாா்.

சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு

விழுப்புரம்/ செஞ்சி: விழுப்புரம் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில் திருவாதிரை பெருவிழா - ஆருத்ரா தரிசன வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் அந்தந்த பகுதி... மேலும் பார்க்க

ஆட்சியரகத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

விழுப்புரம்: கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை, சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.... மேலும் பார்க்க

விதைகளை பகுப்பாய்வு செய்து விதைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் நிலங்களில் விதைக்கும் போது, விதைகளைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் விதைப் பரிசோதனை நிலைய அலுவலா் சந்... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த தொழிலாளா் நலத் துறை அலுவலகக் கட்டடம் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் வி.மருதூா் பகுதியில் ரூ.3.72 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த தொழிலாளா் நலத் துறை அலுவலகக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்... மேலும் பார்க்க

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஓங்கூா் பகுதியில் தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த இளமங்கலத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில், காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், காசநோயைக் கண்டறியும் முகா... மேலும் பார்க்க