செய்திகள் :

சி.எஸ்.கே அணிக்கு வாஷிங்டன் சுந்தர் வர வாய்ப்புள்ளதா?- வெளியான தகவல் என்ன?

post image

2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலமானது வரும் டிசம்பர் இரண்டாவது வாரம் நடைபெற இருக்கிறது.

இதனிடையே நவம்பர் 15 ஆம் தேதிக்குள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியிலிருந்து விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும், தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட வேண்டும் என ஏற்கெனவே ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்திருந்தது.

இதன் காரணமாக இன்னும் சில தினங்களில் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கப்போகும் மற்றும் வெளியேற்றப் போகும் வீரர்களின் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர்

அதற்கு முன்னதாக வீரர்களின் டிரேடிங் முறையும் நடைமுறையில் உள்ளதால் ஒரு சில நட்சத்திர வீரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இடம் மாறுவார்கள் என்றும் பேசப்பட்டு வந்தது.

அதிலும் குறிப்பாக நட்சத்திர வீரர்கள் சிலர் டிரேடிங் செய்ய வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வந்த நிலையில் குஜராத் அணியிலிருந்து தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் சி.எஸ்.கே அணிக்காக டிரேடிங் முறையில் கொண்டுவரப்படுவார் என்று கூறப்பட்டு வந்தது.

சிஎஸ்கே அணியில் இருந்து ஓய்வு பெற்று வெளியேறிய அஸ்வினுக்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரைக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் வாஷிங்டன் சுந்தரை சிஎஸ்கேவுடன் டிரேடிங் செய்யும் யோசனையை குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஏற்க மறுத்துவிட்டதாகவும் இந்த முடிவை சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் குஜராத் நிர்வாகம் ஏற்கெனவே தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

குஜராத் அணியின் தலைமை பயிற்சியாளரான ஆஷிஷ் நெஹ்ரா தமிழக வீரர்கள் மீது ஏகப்பட்ட நம்பிக்கையை வைத்துள்ளார்.

அதன் காரணமாகவே குஜராத் அணியில் சாய் சுதர்சன், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் போன்ற திறமையான வீரர்கள் உள்ளனர்.

ஆஷிஷ் நெஹ்ரா
ஆஷிஷ் நெஹ்ரா

மற்ற வீரர்களை காட்டிலும் சில கோடிகளில் மட்டுமே அவர்கள் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக வாங்கப்பட்டாலும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர்களை வெளியேற்ற ஆஷிஷ் நெஹ்ரா விரும்ப மாட்டார் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக வாஷிங்டன் சுந்தர் சி.எஸ்.கே அணிக்கு வருவது கடினம் என்றே தெரிகிறது.

``2005 உலகக் கோப்பைல 2-ம் இடம் வந்தப்போ ரூ. 1,000 கொடுத்தாங்க" - வைரலாகும் மிதாலி ராஜ் பேட்டி

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நேற்று முன்தினம் (நவம்பர் 2) முடிந்த முடிந்த ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் முதல்முறையாகச் சாம்பியன் பட்டம் வென்று அரை நூற்றா... மேலும் பார்க்க

'150 ரூபாய் டிக்கெட்டை 25000 ரூபாய்க்கு வாங்கிருந்தாங்க' - கிரிக்கானந்தாவின் உலகக்கோப்பை அனுபவம்

முதல் முறையாக ஒரு ஐ.சி.சி கோப்பையை வென்றிருக்கிறது இந்திய பெண்கள் அணி. எல்லா பக்கமிருந்தும் அந்த அணி பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு கிடைத்திருக்கும் ஆதர... மேலும் பார்க்க

சக்கர நாற்காலியில் வந்த பிரதிகா ராவலுக்கு மெடல் வழங்காதது ஏன்? ஐசிசி விதிமுறைகள் கூறுவது என்ன?

மகளிர் கிரிக்கெட்டில் அரை நூற்றாண்டு காலமாக இந்தியாவின் கனவாக மட்டுமே இருந்த உலகக் கோப்பை நேற்று முன்தினம் நனவானது.தென்னாப்பிரிக்காவும், இந்தியாவும் தங்களின் முதல் உலகக் கோப்பையை ஏந்த நவி மும்பையில் ம... மேலும் பார்க்க

ICC-ஐ விட அதிக பரிசுத் தொகையை அறிவித்த BCCI; கூடுதலாக சூரத் வைர வியாபாரியின் சர்ப்ரைஸ் கிஃப்ட்!

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அரை நூற்றாண்டுக் கனவை நிறைவேற்றியிருக்கிறது.நவி மும்பையில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் த... மேலும் பார்க்க

`வரலாறு படைக்கப்பட்டுள்ளது' - ரஜினி முதல் விஜய் வரை பிரபலங்களின் வாழ்த்து

ICC Women's Cricket World Cup இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நேற்றைய தினம் (நவம்பர் 2) 13வது ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. நம் பெண்களின் வெற்றிக்கு நாடு முழுவதுமிருந்... மேலும் பார்க்க

World Cup: "ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை" - சச்சின் முதல் மிதாலி ராஜ் வரை லெஜண்ட்ஸ் பெருமிதம்!

இந்திய மகளிர் அணி தங்களது முதல் உலகக் கோப்பையை வென்றுள்ள சூழலில் சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி வரை கிரிக்கெட் லெஜண்ட்ஸ் தங்கள் பெருமிதத்தையும் பூரிப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். World Cup வென... மேலும் பார்க்க