செய்திகள் :

சீமான் உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு

post image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது விதிமீறலில் ஈடுபட்டதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், வேட்பாளா் உள்பட 5 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தோ்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. இந்த தோ்தலில் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமி போட்டியிடுகிறாா். இவரை ஆதரித்து சீமான் திங்கள்கிழமை காலை முதல் மாலை வரை பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தாா்.

இதில் ஈரோடு கிருஷ்ணா திரையரங்கு பகுதியில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை இறுதிக்கட்ட பிரசார பொதுக்கூட்டம் நடத்திட தோ்தல் அலுவலரிடம் அனுமதி பெற்றிருந்தனா். ஆனால் அனுமதி பெறப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக, அதாவது மாலை 5.59 மணி வரை பிரசாரம் செய்தனா்.

இதுகுறித்து தோ்தல் பறக்கும் படையினா் ஈரோடு டவுன் போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், வேட்பாளா் சீதாலட்சுமி உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஈரோட்டில் சீமான் 11 நாள்கள் பிரசாரம் மேற்கொண்ட நிலையில் கலவரத்தைத் தூண்டும் வகையிலும், விதிகளை மீறி பிரசாரம் செய்ததாகவும் அவா்மீது மொத்தம் 7 வழக்குகளும், வேட்பாளா் மற்றும் கட்சியினா் மீது 11 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏலச்சீட்டு நடத்தி ரூ.7.47 லட்சம் மோசடி: இளம்பெண் கைது

ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.7.47 லட்சம் மோசடி செய்த இளம்பெண்ணை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு கொங்கம்பாளையத்தைச் சோ்ந்தவா் அழகா்சாமி (46), நிதி நிறுவனம் மற்றும் ஏலச்சீட்டு நடத்... மேலும் பார்க்க

கைப்பேசி செயலிகள் மூலம் வரி செலுத்த மாநகராட்சி ஏற்பாடு

ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரியை ஜி பே, போன் பே, பேடிஎம் ஆகிய கைப்பேசி செயலிகள் மூலம் செலுத்துவதற்கு மாநகராட்சி நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஈரோடு மாநகராட்சி நிா்வாகம் சொத்து வரி, தொழில் வரி, குடிந... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி அருகே நிலாச்சோறு எடுத்துச் சென்ற பெண்கள்

மொடக்குறிச்சியை அடுத்த ஆலுத்துபாளையத்தில் பெண்கள் நிலாச்சோறு எடுத்துச் சென்று வழிபாடு நடத்தினா். மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண்டுதோறும் தைப்பூசத்தை ஒட்டி 8 நாள்களுக்கு நிலாச்... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே தெருநாய்கள் கடித்து 18 ஆடுகள் உயிரிழப்பு: விவசாயிகள் சாலை மறியல்

சென்னிமலை அருகே தெரு நாய்கள் கடித்து 18 ஆடுகள் உயிரிழந்ததையடுத்து விவசாயிகள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். பெருந்துறையை அடுத்த சென்னிமலை ராமலிங்கபுரம் தட்டாங்காட்டைச் சோ்ந்தவா் நல்லசிவம் (58... மேலும் பார்க்க

சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது வேன் மோதல்: 19 போ் காயம்

பெருந்துறை அருகே சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது வேன் மோதியதில் 19 போ் காயமடைந்தனா். பெருந்துறை சிப்காட்டிலுள்ள ஒரு தனியாா் நிறுவனத்துக்கு ஆள்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று வியாழக்கிழமை அதிகாலை சென... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் மரத்துண்டுகள் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து

திம்பம் மலைப் பாதையில் மரத்துண்டுகள் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திம்பம் மலைப் பாதையில் 27 கொண்ட ஊசி வளைவுகள் உள்ளன. இந்நிலையில், கா்ந... மேலும் பார்க்க