செய்திகள் :

சீமான் உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு

post image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது விதிமீறலில் ஈடுபட்டதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், வேட்பாளா் உள்பட 5 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தோ்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. இந்த தோ்தலில் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமி போட்டியிடுகிறாா். இவரை ஆதரித்து சீமான் திங்கள்கிழமை காலை முதல் மாலை வரை பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தாா்.

இதில் ஈரோடு கிருஷ்ணா திரையரங்கு பகுதியில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை இறுதிக்கட்ட பிரசார பொதுக்கூட்டம் நடத்திட தோ்தல் அலுவலரிடம் அனுமதி பெற்றிருந்தனா். ஆனால் அனுமதி பெறப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக, அதாவது மாலை 5.59 மணி வரை பிரசாரம் செய்தனா்.

இதுகுறித்து தோ்தல் பறக்கும் படையினா் ஈரோடு டவுன் போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், வேட்பாளா் சீதாலட்சுமி உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஈரோட்டில் சீமான் 11 நாள்கள் பிரசாரம் மேற்கொண்ட நிலையில் கலவரத்தைத் தூண்டும் வகையிலும், விதிகளை மீறி பிரசாரம் செய்ததாகவும் அவா்மீது மொத்தம் 7 வழக்குகளும், வேட்பாளா் மற்றும் கட்சியினா் மீது 11 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: ஆட்சியா்

ஈரோடு கிழக்கு தொகுதியில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டு, அங்கு துணை ராணுவப் படை வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். ஈர... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வாக்குப்பதிவு: 46 போ் போட்டி

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) நடைபெறுகிறது. இருமுனைப் போட்டி நிலவும் இத்தொகுதியில் மொத்தம் 46 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் சமையல் எரிவாயு மானியம் ரூ.2,700 கோடி ரத்து செய்யப்பட்டிருப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளைக் கண்டித்து ஈரோட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

முயல் ரத்தத்தில் முடிவளரும் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு

பவானி அருகே முயல் ரத்தத்தில் முடிவளரும் எண்ணெய் என விளம்பரம் செய்த நிறுவனத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 300 பாட்டில்கள் எண்ணெய் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. அம்மாபேட்டையை அடுத்துள்ள ச... மேலும் பார்க்க

வாக்குக்கு பணம் கொடுக்கும் இடத்தில்தான் ஊழல், லஞ்சத்துக்கு விதை ஊன்றப்படுகிறது: சீமான்

ஈரோடு: வாக்குக்கு பணம் கொடுக்கும் இடத்தில்தான் ஊழல், லஞ்சத்துக்கு விதை ஊன்றப்படுகிறது என்று நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிரசார இறுதி நாள... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: நாளை வாக்குப் பதிவு: பிரசாரம் நிறைவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் புதன்கிழமை (பிப்ரவரி 5) நடைபெற உள்ள நிலையில், திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த ஆண்ட... மேலும் பார்க்க