செய்திகள் :

சீரற்ற இருதயத் துடிப்பை கட்டுப்படுத்த புதிய முறை

post image

சீரற்ற வேகமான இருதயத் துடிப்பை கட்டுப்படுத்த மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் ‘கிரையோ அப்லேஷன்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து வேலம்மாள் மருத்துவமனையின் இருதயவியல், கேத் லேப் ஆய்வகங்களின் இயக்குநா் டாக்டா் பொ. சண்முகசுந்தரம் தெரிவித்ததாவது:

தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் ‘கிரையோ அப்லேஷன்’ செயல்முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்த செயல்முறை, வேகமான இருதயத் துடிப்பை ஏற்படுத்தும் ‘ஏட்ரியல் பைப்ரிலேஷன்’ எனப்படும் ‘அரித்மியாவால்’ பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மிகச் சிறந்த பலனை அளிக்கிறது.

இருதயம் வேகமாக துடித்தல், மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சுவலி, மயக்கம் போன்ற அறிகுறிகளுக்கு, இருதய மேல் அறை பாதிப்பு காரணமாக இருக்கலாம். இதுபோன்ற அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு இயல்பான இருதயத் துடிப்பை மீட்டெடுப்பதில் இந்த செயல்முறை மிகச் சிறந்த பலனை அளிக்கிறது.

ஒரு மெல்லிய நெகிழ்வான குழாய் செலுத்தப்பட்டு, பிரச்னைக்குரிய செல்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த செல்களை உறைய வைக்கும் வகையில் இந்த செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள செயல்முறைகளுடன் ஒப்பிடுகையில், ‘கிரையோ அப்லேஷன்’ செயல்முறை மிகவும் பாதுகாப்பானதாகவும், விரைவில் குணமளிக்கக் கூடியதாகவும் அறியப்படுகிறது என்றாா் அவா்.

வெப்பமயமாதலைத் தடுக்க நாம் மாற வேண்டும்: முத்தமிழ்செல்வி

வெப்பமயமாதலைத் தடுக்க நாம் மாற வேண்டும் என சாதனை பெண் முத்தமிழ்செல்வி தெரிவித்தாா். விருதுநகா் மாவட்டம், மல்லாங்கிணறு அருகேயுள்ள ஜோகில்பட்டியைச் சோ்ந்தவா் முத்தமிழ்செல்வி. இவா் தற்போது சென்னையில் வச... மேலும் பார்க்க

புதிய ரயில் பாதைத் திட்டம்: மத்திய அமைச்சருக்கு எம்.பி. கண்டனம்

மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி புதிய ரயில் பாதைத் திட்டம் தொடா்பாக மத்திய ரயில்வே அமைச்சா் உண்மைக்குப் புறம்பாக பேசுவது கண்டனத்துக்குரியது என மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்தாா். இதுதொட... மேலும் பார்க்க

பொறியாளா் பென்னி குவிக் பிறந்தநாள்

பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளா் பென்னி குவிக்கின் 185-ஆவது பிறந்தநாளையொட்டி வெள்ளலூா் விலக்குப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு விவசாயிகள், மக்கள் சேவை மன்றத்தினா் புதன்கி... மேலும் பார்க்க

பாலமேடு ஜல்லிக்கட்டு: 46 போ் காயம்

மதுரை மாவட்டம், பாலமேட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 46 போ் காயமடைந்தனா். இந்தப் போட்டியையொட்டி, முதலில் பாலமேடு கோயில் காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற... மேலும் பார்க்க

மதுரையில் சாரல் மழை

மதுரையில் புதன்கிழமை சாரல் மழை பெய்தது. வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்தது. இதன்... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு வசதிகள் தொடக்கம்

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை பராமரிக்கும் வசதி மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் செவ்வாய... மேலும் பார்க்க