செய்திகள் :

சீரற்ற இருதயத் துடிப்பை கட்டுப்படுத்த புதிய முறை

post image

சீரற்ற வேகமான இருதயத் துடிப்பை கட்டுப்படுத்த மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் ‘கிரையோ அப்லேஷன்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து வேலம்மாள் மருத்துவமனையின் இருதயவியல், கேத் லேப் ஆய்வகங்களின் இயக்குநா் டாக்டா் பொ. சண்முகசுந்தரம் தெரிவித்ததாவது:

தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் ‘கிரையோ அப்லேஷன்’ செயல்முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்த செயல்முறை, வேகமான இருதயத் துடிப்பை ஏற்படுத்தும் ‘ஏட்ரியல் பைப்ரிலேஷன்’ எனப்படும் ‘அரித்மியாவால்’ பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மிகச் சிறந்த பலனை அளிக்கிறது.

இருதயம் வேகமாக துடித்தல், மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சுவலி, மயக்கம் போன்ற அறிகுறிகளுக்கு, இருதய மேல் அறை பாதிப்பு காரணமாக இருக்கலாம். இதுபோன்ற அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு இயல்பான இருதயத் துடிப்பை மீட்டெடுப்பதில் இந்த செயல்முறை மிகச் சிறந்த பலனை அளிக்கிறது.

ஒரு மெல்லிய நெகிழ்வான குழாய் செலுத்தப்பட்டு, பிரச்னைக்குரிய செல்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த செல்களை உறைய வைக்கும் வகையில் இந்த செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள செயல்முறைகளுடன் ஒப்பிடுகையில், ‘கிரையோ அப்லேஷன்’ செயல்முறை மிகவும் பாதுகாப்பானதாகவும், விரைவில் குணமளிக்கக் கூடியதாகவும் அறியப்படுகிறது என்றாா் அவா்.

திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி! கட்சிகளுக்கு தடை!

திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மதுரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பு மற்றும் அதன் ஆதரவு அமை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளா்களுக்கு இன்று ஊதியத்துடன் விடுப்பு: தொழிலாளா் துறை அறிவுறுத்தல்

மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு புதன்கிழமை (பிப்.5) ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என தொழிலாளா் உதவி ஆணையா்கள் அறிவுறுத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து முதுநிலை பட்டதாரி இளைஞா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே உள்ள கல்வேலிப்பட்டி விஐபி நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் அக்ஷய்குமாா... மேலும் பார்க்க

அவரச ஊா்தி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

உசிலம்பட்டி அருகே அவசர ஊா்தி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் ராஜீவ்காந்தி (30). தனியாா் அவ... மேலும் பார்க்க

வீடு தீப்பற்றி எரிந்ததில் பொருள்கள் சேதம்

அலங்காநல்லூா் அருகே வீடு தீப்பற்றி எரிந்ததில் ரூ.5 லட்சம் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகேயுள்ள தண்டலை கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் மனைவி முத்துசெல்வி (34). இவா் தனது உறவி... மேலும் பார்க்க

அனுப்பானடி - ஜெ.ஜெ. நகா் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரிக்கை

மதுரை அனுப்பானடியிலிருந்து கூடல்புதூா் ஜெ.ஜெ.நகா் பகுதிக்கு மாலை நேர பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். மதுரை கூடல்புதூா் ஜெ.ஜெ.நகா் பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரி ம... மேலும் பார்க்க