அலி கமேனியின் இறுதிச் சடங்கில் 14 மாத பேரக்குழந்தை ஜஹ்ராவின் சிறு சவப்பெட்டி - க...
செந்தில் பாலாஜி பூர்வீக வீட்டில் அவரது தம்பிக்கு சம்மன் வழங்கிய போலீஸார்! - கரூர் பரபரப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீஸார் கரூரில் இருவரையும் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று காலை சம்மன் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.d.dixith

இதையடுத்து, கரூர் மாவட்டம், ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டின் முன்பு அவரது வழக்கறிஞர்கள், தி.மு.க நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டனர். பின்னர், சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீஸார் செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு சம்மனுடன் வந்தனர்.
அப்போது, அங்கு இருந்த தி.மு.க. வழக்கறிஞர்கள் போலீஸாரிடம் வருகைக்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பினர். சம்மன் வழங்க வந்திருப்பதாக போலீஸார் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு, வீட்டிற்குள் சென்ற போலீஸார் செந்தில் பாலாஜியின் பெற்றோர்களான வேலுச்சாமி மற்றும் அவரது மனைவியிடம் சம்மனை வாசித்துக் காட்டி, செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோர் வரும் திங்கட்கிழமை காலை சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்மனை பெற்றுக் கொண்ட பெற்றோர் அதில் கையெழுத்திட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சம்மன் வழங்கப்பட்ட சம்பவத்தால் கரூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

















