செய்திகள் :

சென்னையில் பாதியில் நின்ற மெட்ரோ: தடைப்பட்ட மின்சாரம்; பயணிகள் வெளியேற்றம் - என்ன நடந்தது?

post image

இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு சென்றுகொண்டிருந்த மெட்ரோ ரயில், சென்னை சென்ட்ரல் - உயர்நீதிமன்றம் இடையே நடுவழியில் நின்றுள்ளது.

இதற்கு மின்சார கேபிளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தான் காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால், மெட்ரோ ரயில் நகராமல் நின்றதோடு, உள்ளே மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த மெட்ரோ ரயிலில் பயணித்த பயணிகள் பாதுகாப்பாக சுரங்கப் பாதை வழியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மெட்ரோ | சென்னை
மெட்ரோ | சென்னை
இந்த சம்பவம் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...

"தொழில்நுட்ப காரணங்களால், மெட்ரோ ரயில் உயர் நீதிமன்றம் மற்றும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையங்களுக்கு இடையே நின்றுவிட்டது.

உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர். குறிப்பிட்ட அந்த ரயில் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 6.20 மணியளவில் இருந்து வழக்கம்போல மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சிரமத்திற்கு வருந்துகிறோம்". என குறிப்பிட்டுள்ளது.

``ஸ்லீப்பர் கோச்சுக்கும் தலையணை, பெட்ஷீட்'' - பயணிகளுக்கு தெற்கு ரயில்வேயின் புதிய சலுகை என்ன?

சென்னைக்கு ரயிலில் பயணிப்பவர்களுக்கு சூப்பர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே நிர்வாகம். வரும் ஜனவரி 1-ம் தேதி முதல், ஸ்லீப்பர் கோச்சில் சென்னை அல்லது மங்களூருக்கு பயணிப்பவர்களுக்கு பெட்... மேலும் பார்க்க

புனித மண், இயற்கை அழகு… ஆனால் நீடிக்கும் வேதனை: கொடைக்கானலின் பழமை வாய்ந்த கிராமத்தின் மறுபக்கம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தேக்கடி: முல்லைப் பெரியாறு அணை; பசுமை சூழலில் படகு பயணம் | Photo Album

முல்லைப்பெரியாறு அணைமுல்லைப்பெரியாறு அணைமுல்லைப்பெரியாறு அணைமுல்லைப்பெரியாறு அணைமுல்லைப்பெரியாறு அணைமுல்லைப்பெரியாறு அணைமுல்லைப்பெரியாறு அணைமுல்லைப்பெரியாறு அணைமுல்லைப்பெரியாறு அணைமுல்லைப்பெரியாறு அணை... மேலும் பார்க்க

பொங்கல் லீவுக்கு ஊருக்கு போறீங்களா? இன்று முதல் தொடங்கிய ரயில் டிக்கெட் புக்கிங்! | Full Timetable

இன்று முதல் பொங்கல் ரயில் டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு (2026), போகி பண்டிகை 13-ம் தேதி (செவ்வாய்) தொடங்கி காணும் பொங்கல் 16-ம் தேதியோடு (வெள்ளி) முடிகிறது. திங்கள்கிழமை (12-ம் தேதி) ... மேலும் பார்க்க

KYV முடிக்காமல், Fastag பயன்படுத்துவதில் சிக்கலா? இனி கவலை வேண்டாம்; NHAI-ன் புதிய மாற்றங்கள் இதோ!

KYV முடிக்காதவர்களுக்கு ஃபாஸ்ட் டேக் சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தச் சிக்கல்களைக் களையும் விதமாக, ஃபாஸ்ட் டேக் நடைமுறையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது தேசிய ந... மேலும் பார்க்க