செய்திகள் :

சென்னை: அதிகாலையில் இளம்பெண் கொடூரக் கொலை; மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டு தப்பிய நபர்

post image

பெங்களூருவைச் சேர்ந்தவர் ரேஷ்மா (29). இவரின் கணவர் அசோக். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக ரேஷ்மா, கணவர் அசோக்கைப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், ரேஷ்மா, தன்னுடைய அத்தை மகன் விஜி என்பவருடன் பழகி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேஷ்மாவுக்கும் அவரின் அத்தை மகன் விஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ரேஷ்மாவை மிரட்டி விட்டு விஜி சென்றிருக்கிறார்.

இதையடுத்து ரேஷ்மா, தன்னுடைய தோழிகளை வீட்டுக்கு வரவழைத்து தூங்கியிருக்கிறார். சம்பவத்தன்று அதிகாலையில் ரேஷ்மா தங்கியிருந்த வீட்டின் கதவை விஜி தட்டியிருக்கிறார். ஜன்னல் வழியாகப் பார்த்த ரேஷ்மா கதவைத் திறக்கவில்லை.

சடலமாக ரேஷ்மா

இந்தச் சமயத்தில் ஜன்னல் வழியாக கையை உள்ளே விட்ட விஜி, கதவைத் திறந்து உள்ளே சென்றிருக்கிறார். அப்போது இந்த நேரத்தில் எதற்காக நீ வந்தாய் என ரேஷ்மா சண்டை போட, விஜி மறைத்து வைத்திருந்த மிளகாய்ப் பொடியை ரேஷ்மா அவரின் தோழிகளின் முகத்தில் வீசியிருக்கிறார். அதனால் நிலை குலைந்த பெண்கள், அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த விஜி, ரேஷ்மாவைச் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த ரேஷ்மா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த ரேஷ்மாவின் தோழிகள், சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கொலை செய்யப்பட்ட ரேஷ்மா உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக உள்ள விஜியைத் தேடி வருகிறார்கள்.

இந்தக் கொலை குறித்து நம்மிடம் பேசிய சங்கர் நகர் போலீஸார், ``ரேஷ்மாவை கொலை செய்த விஜியைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தனிப்படை போலீஸார் விஜியை நெருங்கி விட்டனர். அவரிடம் விசாரித்தால்தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும்" என்றனர்.

"என் மகன் அமைதியானவன்" - மும்பை ரயிலில் பயணிகள் முன்னிலையில் வாலிபர் குத்திக்கொலை; கதறிய தாய்

மும்பை புறநகர் ரயிலில் எப்போதும் கூட்டம் நிரப்பி வழியும். அதுவும் காலை மற்றும் மாலை நேரங்களில் புறநகர் ரயில்களில் ஏறி இறங்குவது என்பது நினைத்து பார்க்க முடியாத காரியம். குறிப்பாக மும்பையில் மேற்கு ரயி... மேலும் பார்க்க

ஈமு கோழி திருட்டு புகார் விவகாரம்: 17 ஆண்டுகள் கழித்து ஆய்வாளருக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வந்த ஓர் ஈமு கோழி பண்ணையில், 2009-ம் ஆண்டு சில கோழிகள் காணாமல் போய்விட்டன. இந்நிலையில், அதுபற்றி கொடுக்கப்பட்ட புகார... மேலும் பார்க்க

மது கேட்டு தொல்லை கொடுத்த மனைவி – விஷம் கொடுத்து கொன்ற கணவர் | கோவையில் அதிர்ச்சி

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கரவழி மாதாப்பூர் அருகில் உள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (28). இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில், கணவரை பிரிந்து தனியாக வசித்து வந... மேலும் பார்க்க

வருங்கால கணவனை கொலை செய்யும் முன்பு காதலனுடன் ஹோட்டலில் சதி: சிக்னல் கொடுத்தவுடன் தள்ளிவிட்ட காதலன்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இரண்டு நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஷியா கோயல் என்பவர் தனது வருங்கால கணவன் கேதன் அகர்வால் என்பவரை மலை உச்சியில் இருந்து 400 அடி பள்ளத்தில் காதலன் துணையோடு தள்ளிவிட்டு கொலை ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; பரபரக்கும் கரூர்!

தமிழக முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரும், தி.மு.க முக்கிய புள்ளியுமான ஏ.வ.வேலு தொடர்புடைய சென்னை வீடு உள்ளிட்ட 13 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலைய... மேலும் பார்க்க

கம்பம்: கணவரை இழந்த பெண்ணிடம் அத்துமீறல்; தலைமறைவான தவெக நிர்வாகி

கம்பத்தைச் சேர்ந்த 38 வயது பெண்ணின் கணவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் தவெக நிர்வாகியும் ஆட்டோ டிரைவருமான ஆசிக்பாபு என்ற பாபு ... மேலும் பார்க்க