செய்திகள் :

சென்னை: இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டல்; இன்ஸ்டா பிரபலம் கைது!

post image

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டா மூலம் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சைஜூ (23) என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பைக் ரேஸரான இவர், அதுதொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாவில் தொடர்ந்து பதிவேற்றி வந்ததால் அவரை சிலர் பின்தொடர்ந்து வந்திருக்கிறார்கள். அதில் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும், சைஜூ பதிவிடும் வீடியோக்களுக்கு கமெண்ட்ஸ்களை தெரிவித்து வந்திருக்கிறார். அதைத்தொடர்ந்து சென்னை இளம்பெண்ணுடன் சைஜூ போனில் நட்பாக பேசி பழகி வந்திருக்கிறார். பின்னர் இந்த நட்பு காதலாக மலர்ந்திருக்கிறது. அதன்பிறகு இருவரும் வீடியோ காலில் மணிக்கணக்கில் பேசி வந்திருக்கிறார்கள்.

ஆபாச வீடியோ

இந்தநிலையில் இளம்பெண்ணை உருக, உருக காதலிப்பதாக நடித்த சைஜூ, நீயும் நானும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என இளம்பெண்ணை மூளைச்சலவை செய்திருக்கிறார். முதலில் சம்மதிக்காத இளம்பெண்ணை, நீ என்னை நம்பவில்லையா என கேட்டிருக்கிறார் சைஜூ. அதன்பிறகே இளம்பெண்ணும் காதலன் சைஜூவை நம்பி, வீடியோ காலில் நிர்வாணமாக பேசி வந்திருக்கிறார். அதை மற்றொரு செல்போனில் வீடியோவாக எடுத்த சைஜூ, தன்னுடைய சுயரூபத்தை இளம்பெண்ணிடம் காண்பித்திருக்கிறார். உன்னுடைய நிர்வாண வீடியோ, படங்கள் எல்லாம் என்னிடம் இருக்கிறது. அதை சமூகவலைதளத்தில் வெளியிடாமலிருக்க நான் கேட்கும் பணத்தை நீ எனக்கு அனுப்ப வேண்டும் என சொல்லி மிரட்டியிருக்கிறார். வெளியில் தெரிந்தால் அவமானம் எனக் கருதிய இளம்பெண், சைஜூ கேட்ட பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார். இந்த வகையில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை இளம்பெண்ணை மிரட்டி பறித்த சைஜூ, மீண்டும் பணம் கேட்டு தொல்லைக் கொடுத்திருக்கிறார். அதனால், இளம்பெண், விவரத்தை குடும்பத்தினரிடம் கூறியதோடு தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து புகாரளித்தார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸாரை விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டார். இளம்பெண் கொடுத்த ஆதாரங்கள் அடிப்படையில் சைஜூவை போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் புகார் கொடுத்த இளம்பெண் மட்டுமல்லாமல் இன்னும் சிலரை சைஜூ ஏமாற்றியது தெரியவந்தது. அதனால் குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய சைஜூவின் இரண்டு செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்ததோடு அவரால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் எனவும் விசாரித்து வருகிறார்கள். விசாரணைக்குப்பிறகு பைக் ரேஸர் சைஜூவை கைது செய்து தாம்பரம் மத்திய குற்றபிரிவு போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர் விஷம் அருந்தி தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி

தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், நிரந்தர பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் நடந்த போராட்டத்தில் பெர... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம் - மனைவி கையை வெட்டிய முதியவர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகேயுள்ள நாடோடியின குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (65). இவரின் மனைவி லட்சுமி (60). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். பிள்ளைகள் மூவரும் திருமணமாகி ... மேலும் பார்க்க

வேலூர்: கடந்த ஓராண்டில் 184 குட்கா வழக்குகள் - 220 பேர் கைது; வங்கிக் கணக்குகள் முடக்கம்!

வேலூர் மாவட்டத்தில், போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது மாவட்டக் காவல்துறை. அதன்படி, 2025 ஜனவரி 1-ம் தேதி தொடங்கி, 2026 ஜனவரி 12-ம் தேதியான நேற்று முன்தினம்... மேலும் பார்க்க

வேலூர்: யானை தந்தங்களுடன் சிக்கிய 3 இளைஞர்கள் - கிணறு வெட்ட பூதம் கிளம்பியதுபோல நீடிக்கும் குழப்பம்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள பாஸ்மார்பெண்டா மலை கிராம வனப்பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் 7 வயது ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்துக் கிடந்தது. அதைத்தொடர்ந்து, நவம்பர் மாதம்... மேலும் பார்க்க

`அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை' - மோடி குறித்து கேள்வி; இங்கிலாந்து டாக்டருக்கு நிகழ்ந்தது என்ன?

இங்கிலாந்தில் டாக்டராக இருப்பவர் சங்க்ராம் பாட்டீல். மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் என்ற இடத்தை சேர்ந்த சங்க்ராம் பாட்டீல் பல ஆண்டுகளாக இங்கிலாந்தில் வாழ்ந்து குடியுரிமை பெற்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டா... மேலும் பார்க்க

தெலங்கானா : `கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம்' என 500 தெருநாய்களை கொன்ற பஞ்சாயத்து தலைவர்கள்

தெலங்கானாவில் கடந்த டிசம்பர் மாதம் பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் போட்டியிட்டவர்கள் தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் தெருநாய்கள் மற்றும் குரங்குகள் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்று குறிப்ப... மேலும் பார்க்க