செய்திகள் :

சென்னை: கவரிங் நகைக்காக மூதாட்டி கொலை - முதியவர் கைதான பின்னணி!

post image

சென்னை பெரிய நொளம்பூர், சித்தார்த் நகர், வெள்ளாளர் தெருவில் தனியாக வசித்து வந்தவர் மேரி (79). 14.12.2025-ம் தேதி இரவு மூதாட்டி மேரி ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக அவரின் மகன் எல்கீஸ் என்பவர் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மூதாட்டி மேரியின் சடலத்தை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் மேரியைக் கொலை செய்தது பெரிய நொளம்பூரைச் சேர்ந்த முதியவர் ஏழுமலை, (70) எனத் தெரியவந்தது. இதையடுத்து ஏழுமலையை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.

முதியவர் ஏழுமலை

முதற்கட்ட விசாரணையில் மூதாட்டி மேரிக்கும் கைது செய்யப்பட்ட ஏழுமலைக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்ததும் அதில் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது. சம்பவத்தன்று பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த ஏழுமலை, மூதாட்டி மேரியை கையால் தாக்கியதோடு அவரின் தலையை தரையில் மோதியிருக்கிறார். இந்த கொடூர தாக்குதலில் நிலைகுலைந்த மேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பிறகு மேரி அணிந்திருந்த நகைகளை ஏழுமலை திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்தது. ஏழுமலையிடமிருந்து பறிமுதல் செய்த மேரியின் நகைகளை ஆய்வு செய்த போது அவை கவரிங் எனத் தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து நொளம்பூர் போலீஸார் கூறுகையில், ``வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மேரி, எப்போதும் தங்க நகைகளை அணிந்திருந்தார். அதை நோட்டமிட்ட அதே ஏரியாவைச் சேர்ந்த முதியவர் ஏழுமலை, மேரியை மிரட்டி நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கிறார். மேரியிடமிருந்து நகைகளை பறிக்க ஏழுமலை முயன்றபோது அதற்கு மூதாட்டி மேரி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த ஏழுமலை, மேரியை சரமாரியாக தாக்கி அவர் அணிந்திருந்த கம்மல்கள், செயின்களைப் பறித்திருக்கிறார். இந்த கொடூர தாக்குதலில் மேரி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். மேரியை கொலை செய்து நகைகளைப் பறித்த ஏழுமலை மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்திருக்கிறோம். மேரி அணிந்திருந்த நகைகள் கவரிங் என்று தெரியவந்திருக்கிறது. கவரிங் நகைக்காக இந்தக் கொலை நடந்ததா என விசாரித்துக் கொண்டிருக்கிறோம்" என்றனர்.

Bengaluru: பார்ட்டியில் குறுக்கிட்ட போலீஸ்; பைப் வழியாக தப்ப முயன்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

பெங்களூருவில் கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கிய பார்டியில் சச்சரவு ஏற்பட்டதால் ஞாயிறு அதிகாலை ஹோட்டலுக்கு காவல்துறையினர் வந்துள்ளனர். அதிர்ச்சியில் காவலர்களிடமிருந்து தப்பிக்க வடிகால் குழாய் வழியாக கீழே ... மேலும் பார்க்க

மர்ம மரணம்: மனைவியுடன் சடலமாக மீட்கப்பட்ட பிரபல ஹாலிவுட் இயக்குநர்; தீவிர விசாரணையில் காவல்துறை!

'தி பிரின்சஸ் பிரைட்', 'திஸ் இஸ் ஸ்பைனல் டேப்', 'வென் ஹாரி மெட் சாலி', 'மிசரி' மற்றும் 'எ ஃபியூ குட் மென்' போன்ற பல கிளாசிக் படங்களை இயக்கியவர் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ராப் ரெய்னர். இவரும், இவர்... மேலும் பார்க்க

`பைனான்ஸ்' வழக்கறிஞரிடம் கடன் கேட்ட ஆசாமி; 17 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து ஓட்டம் - நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம், பறக்கையைச் சேர்ந்தவர் அகஸ்தீசன். வழக்கறிஞரான இவர், தனது சகோதரருடன் இணைந்து பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம், சிவா என்ற பெயரில் ஒருவர் அவருடன் அறிமுகமானார்... மேலும் பார்க்க

111 போலி நிறுவனங்கள், ரூ.1000 கோடி மோசடி; வெளிநாட்டில் இருந்து இயக்கிய சைபர் கும்பல் - CBI அதிர்ச்சி

நாடு முழுவதும் இணையத்தள குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆன்லைன் போலி பங்குவர்த்தகம், வேலை வாய்ப்பு, எம்.எல்.எம் என பல்வேறு வழிகளில் இணையத்தள மோசடிகள் நடந்து வருகிறது. இதில் பொத... மேலும் பார்க்க

Sydney: யூத நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி!

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் பான்டி (Bondi) கடற்கரையில் இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்... மேலும் பார்க்க

”விளையாட்டு விடுதியில் 9ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை”- 4 பள்ளி மாணவர்கள் மீது போக்சோ வழக்கு

தஞ்சாவூர் மேம்பாலம் அருகே அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த மைதானத்தில் விளையாட்டு பயிற்சி பெறும் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்... மேலும் பார்க்க