செய்திகள் :

சென்னை: திமுக முன்னாள் எம்.பி-யின் காரை சேதபடுத்திய வழக்கு - தலைமறைவான அதிமுக நிர்வாகி!

post image

சென்னை வேளச்சேரி செக் போஸ்ட் நேரு நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவர் தி.நகர் ஹபிபுல்லா சாலையில் தி.மு.க-வின் முன்னாள் எம்.பி ஜெயதுரைக்குச் சொந்தமான ஆயுர்வேத மருத்துவமனையில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், 13.1.2026-ம் தேதி சௌந்திரபாண்டியார் அங்காடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது,

``நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். கடந்த 13-ம் தேதி மாலையில் மருத்துவமனைக்கு 30 பேர் கொண்ட கும்பல் வந்தது. அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள், மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு எங்கள் மருத்துவமனையின் உரிமையாளரின் காரை உடைத்து சேதப்படுத்தினர்.

சேதப்படுத்தப்பட்ட முன்னாள் எம்.பியின் கார்

அதை தடுக்க முயன்ற ஊழியர்களிடம், `உங்க ஓனர் சங்கை அறுத்துவிடுவேன், தீ வைத்துக் கொளுத்திவிடுவேன்' எனக் கூறியதோடு அவரை அவதூறாக அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பேசினார்கள். தொடர்ந்து, `எங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள், உங்கள் ஓனரின் தம்பி வேலுமணியின் ஆட்கள்' எனக் கூறி எனக்கும் என்னுடைய ஓனருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸார், 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் வேலுமணி உள்பட 30 பேர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக போலீஸார் சேர்த்தனர்.

அதைத் தொடர்ந்து போலீஸார், சம்பவத்தில் ஈடுபட்ட வேலுமணியின் கார் டிரைவரான சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரைக் கைதுசெய்தனர். மற்றவர்களை போலீஸார் தேடிவருகிறார்கள்.

இது குறித்து புகார் அளித்த ராஜேஸ்வரனிடம் பேசியபோது, ``சி.சி.டி.வி ஆதாரங்களுடன் புகாரளித்தும் டிரைவர் தங்க பாண்டியன் மீது மட்டும் போலீஸார் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். மற்றவர்களை போலீஸார் கைது செய்யவில்லை. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. எனக்கும் என்னுடைய ஓனருக்கும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார்.

சேதமடைந்த கார்

இது குறித்து சௌந்தரபாண்டியனார் போலீஸாரிடம் கேட்டதற்கு, ``புகாரளித்த ராஜேஸ்வரனின் ஓனர் ஜெயதுரை, தி.மு.கவின் முன்னாள் எம்.பியாக இருந்தவர். ஜெயதுரையின் தம்பி வேலுமணி, அ.தி.மு.கவில் தி.நகர் வடக்கு பகுதி செயலாளராக இருக்கிறார். அதோடு வடபழனியில் பிரபலமான மருத்துவமனை ஒன்றையும் நடத்தி வருகிறார். அண்ணன் தம்பிக்குள் நடந்து வந்த மோதல் இந்தளவுக்கு வெடித்திருக்கிறது. சி.சி.டி.வி ஆதாரங்கள் அடிப்படையில்தான் வேலுமணியின் டிரைவர் தங்கபாண்டியனை கைது செய்திருக்கிறோம். மற்றவர்கள முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார்கள். நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

இதுதொடர்பாக வேலுமணியிடம் விளக்கம் கேட்க அவரைத் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை.

திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் - தருமபுரி அதிர்ச்சி!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் எழிலரசி, கணவருடன் ஏறட்ட கருத்து வேறுபடு காரணமாக 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.கைதுஇந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த அய்யப்பன் எ... மேலும் பார்க்க

திருச்சி: அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் மீட்பு - திருச்சி போலீஸ் அதிரடி!

திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி விக்னேஷ் - சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சுகன்யாவிடம் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் பேசி பழகி, பி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இளைஞர்களைக் குறிவைத்து போதை ஊசிகள் விற்பனை; மூவரைக் கைதுசெய்த போலீஸ்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து சிலர் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், குற்... மேலும் பார்க்க

கேரளாவில் வீடு புகுந்து 50 சவரன் தங்கநகைகள் கொள்ளை; நெல்லை இளைஞர்கள் சிக்கியது எப்படி?!

கேரள மாநிலம், பந்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 21-ம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.... மேலும் பார்க்க

`விஷத்தின் சுவை என்ன?' - சிறுமிகளின் விபரீத எண்ணத்தில் பறிபோன 4 உயிர்; நடந்தது என்ன?

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்புரா என்ற இடத்திற்கு அருகில் உள்ள மோடி பிகா என்ற இடத்தை சேர்ந்த 4 மைனர் பெண்கள் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 12 முதல் 15 வயதுட்ப... மேலும் பார்க்க

பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த காதலி; நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காதலன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ.படித்து வந்த 24 வயது பெண் தனது தந்தையுடன் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்வதற்காக சென்றார். வேலை முடிந்தவுடன் தனது தந்தையிடம் தனது நண்பர் பியூஷ் தனோடியாவின் ... மேலும் பார்க்க