செய்திகள் :

சென்னை: `நம்ம வீடியோக்களை காட்டிவிடுவேன்' - தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி 850 கிராம் நகை, பணம் பறிப்பு

post image

சென்னை, புரசைவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வடமாநிலத்தைச் சேர்ந்த 35 வயது பெண், தன்னுடைய கணவர், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரின் கணவர் தொழிலதிபராக உள்ளார். அதே அடுக்குமாடி குடியிருப்பின் 4வது தளத்தில் சில மாதங்களுக்கு முன்பு வட மாநிலத்தைச் சேர்ந்த சங்கீதா (53) என்பவர், தன்னுடைய இரண்டு மகன்களுடன் வாடகைக்கு குடிவந்தார். ஒரே அடுக்குமாடி குடியிருப்பு என்பதால் தொழிலதிபரின் மனைவியிடம் சங்கீதா அன்பாக பழகி வந்தார்.

அதைத் தொடர்ந்து தொழிலதிபரின் மனைவி, தன்னுடைய குடும்ப விவகாரங்களை சங்கீதாவிடம் பகிரத் தொடங்கினார். அதற்கு சங்கீதா, சில ஆலோசனைகளை கூறி தொழிலதிபரின் மனைவியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

அங்கித்

சங்கீதாவின் வீட்டுக்கு அடிக்கடி தொழிலதிபரின் மனைவி வந்து சென்ற நிலையில் சங்கீதாவின் மகன் திலீப் கீவசரா என்பவருடன் நெருங்கிப் பழகியதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே தொழிலதிபரின் மனைவியின் குடும்ப சூழல் சங்கீதா மூலம் தெரிந்துக் கொண்ட திலீப், அதை கூறியே தொழிலதிபரின் மனைவியிடம் அக்கறையாகவும் அன்பாகவும் பழகத் தொடங்கினார். இந்தத் பழக்கம் நாளடைவில் எல்லை மீறியதாகத் தெரிகிறது. அப்போது தொழிலதிபரின் மனைவிக்குத் தெரியாமல் தன்னுடைய செல்போனில் திலீப், இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோவை எடுத்து வைத்திருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் திலீப், சில காரணங்களைச் சொல்லி தொழிலதிபரின் மனைவியிடம் பணம் கடனாக கேட்டிருக்கிறார். அப்போது திலீப் மீதுள்ள பாசத்தில் தொழிலதிபரின் மனைவியும் பணத்தைக் கொடுத்து உதவியிருக்கிறார்.

அதன்பிறகு திலீப், தன்னை பெரிய பிசினஸ்மேன் எனக் காட்டிக் கொண்டு அவரசமாக வருமான வரி செலுத்த வேண்டும். அதற்கு சில லட்சம் ரூபாய் தேவை என தொழிலதிபரின் மனைவியிடம் கேட்டிருக்கிறார். உடனே அவரும் வீட்டிலிருந்த தங்க நகைகளை திலீப்பிடம் கொடுத்து உதவியிருக்கிறார். இவ்வாறு தொழிலதிபரின் மனைவியிடமிருந்து திலீப், 850 கிராம் தங்க நகைகள், 120 கிராம் வைர நகைகள், இரண்டரை கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் சில லட்சம் ரூபாய் ஆகியவற்றை வாங்கியிருக்கிறார்.

தொழிலதிபரின் மனைவியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அவரின் குடும்பத்தினர் தங்க நகைகள், வைர நகைகள் குறித்து கணக்கு கேட்டிருக்கிறார்கள். உடனே தொழிலதிபரின் மனைவி, விவரத்தை திலீப்பிடம் கூறி கொடுத்த பணம், நகைகளை திரும்ப கேட்டிருக்கிறார். அப்போதுதான் திலீப் தன்னுடைய சுயரூபத்தை வெளியில் காண்பித்திருக்கிறார். என்னிடம் பணமும் நகையும் இல்லை. அதையும் மீறி கேட்டால் நீயும் நானும் தனிமையிலிருந்த வீடியோக்களை உன் குடும்பத்தினரிடம் காண்பித்துவிடுவேன் என மிரட்டத் தொடங்கியிருக்கிறார்.

ஆன்லைன் மூலம் பணத்தை பறித்ததால் சிக்கிய பின்னணி!
கைது

அதனால் இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்த தொழிலதிபரின் மனைவி, ஒரு கட்டத்தில் குடும்பத்தினரிடம் விவரத்தைக் கூறி மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதன்பிறகே வேப்பேரி காவல் நிலையத்தில் தொழிலதிபரின் மனைவி தரப்பில் புகதாரளிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல் தெரிந்ததும் திலீப், வடமாநிலத்துக்கு தப்பிச் சென்றுவிட்டார். தொழிலதிபரின் மனைவியிடமிருந்து நகைகள், பணத்தைப் பறித்ததில் திலீப்பின் அம்மா சங்கீதா, இன்னொரு மகன் அங்கித் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதனால் சங்கீதா, அங்கித்தை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.

பின்னர் அவர்களிடமிருந்து 2 ஐபோன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சங்கீதா, தன்னுடைய மகன் திலீப் மூலம் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தலைமறைவாக இருக்கும் திலீப் மீது ஏற்கெனவே சில குற்ற புகார்கள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இருப்பினும் அவர் கைது செய்யப்பட்ட பிறகே முழு விவரம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

மத்தியப் பிரதேசம்: தேர்வு எழுதும்போது பிரசவம்; கழிவறையில் குழந்தை பெற்ற பள்ளி மாணவி; என்ன நடந்தது?

மத்தியப் பிரதேசத்தில் தற்போது 10வது வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. அங்குள்ள தார் மாவட்டத்தில் இருக்கும் பிதாம்பூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் 17 வயது மாணவி 10வது பொதுத்தேர்வு எழு... மேலும் பார்க்க

பஸ்சில் வந்தவர் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து ரூ.15 லட்சம் கொள்ளை! - 3 பேர் கைது 1 கார் பறிமுதல்!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். சென்னையில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அக்ரம். இவர் தனது தந்தையான அப்துல் ரகுமானிடம், தஞ்சாவூர் மாவட்ட... மேலும் பார்க்க

வேலூர்: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து - கைதுக்கு பயந்து இளைஞன் தற்கொலை

வேலூர் அருகேயுள்ள அரியூர் ஜீவா நகரைச் சேர்ந்த 19 வயது இளைஞன் விக்னேஷ். ப்ளஸ் டூவரை பயன்ற விக்னேஷ் உயர்க்கல்வியைத் தொடராமலும், வேலைக்குச் செல்லாமலும் வீட்டிலேயே இருந்து வந்தாராம். இந்த நிலையில், தனியார... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.42 லட்சம் மோசடி; உதவி பொறியாளர் மீது வழக்கு

தஞ்சாவூர், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் தஞ்சாவூர் மாநகராட்சியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றினார். இவரின் மனைவி செல்வி. இவர்களுக்கு, தஞ்சாவூர் மாநகராட்சியில் உதவி பொறியாளராகப் பணியாற்... மேலும் பார்க்க

ஒடிசா: சுரங்கத்துறை அதிகாரி வீட்டில் சோதனை; அலமாரி, மேசைகளுக்குள் கட்டுக்காட்டாக பணம்; பின்னணி என்ன?

ஒடிசா சுரங்கத்துறை துணை இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒடிசா மாநிலம், கட்டாக் மண்டல சுரங்கத்த... மேலும் பார்க்க

Epstein Files: "என் மிகப்பெரிய தவறு; அதற்கு மன்னிப்புக் கேட்கிறேன்" - என்ன சொல்கிறார் பில் கேட்ஸ்?

அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உர... மேலும் பார்க்க