செய்திகள் :

சென்னை: வங்கியில் வேண்டுமென்றே 1,156 கிராம் நகைகளை தவறவிட்ட முன்னாள் பெண் ஊழியர் - அதிர்ச்சி பின்னணி

post image

சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் கிளை மேலாளராக அகமது காதிரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், 05.12.2025-ம் தேதி பணியிலிருந்தபோது மணிபர்ஸ் ஒன்று கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்தார். உடனே அதை எடுத்து பார்த்தபோது அதில் 1,34,95,000 ரூபாய் மதிப்புள்ள 1156.50 கிராம் தங்க நகைகள் இருந்தன. உடனே வங்கியிலிருந்த சக ஊழியர்களிடம் கிளை மேலாளர் அகமது விசாரித்தார்.

பின்னர் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமரா பதிவை அவர் ஆய்வு செய்தார். அப்போது பர்தா அணிந்த பெண், ஒருவர் மணிபர்ஸை தவற விட்டது தெரியவந்தது. அந்த பெண் யாரென்று தெரியவில்லை. அதனால், தங்க நகைகள் இருந்த மணிபர்ஸ் குறித்த தகவலை வங்கியில் உள்ள மேலதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டு அதை பாதுகாப்பாக வைத்திருந்தார். 5 நாள்களாகியும் அந்த நகைகளைத் தேடி யாரும் வரவில்லை. அதனால் அந்த நகைகள் யாருடையது என்பதை கண்டுபிடிக்க வங்கி மேலாளர் சென்னை மத்திய குற்றப்பிரிவு EDF-3 புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கைது
கைது

விசாரணையில் அந்த தனியார் வங்கியில் ஏற்கனவே வேலை பார்த்த பத்மபிரியா என்பவர்தான் நகைகளை தவற விட்டது தெரியவந்தது. உடனே அவரைப் பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``நகைகளை தவற விட்ட வங்கியின் முன்னாள் ஊழியர் பத்மபிரியா மீது வங்கி லாக்கரில் வைத்திருந்த வாடிக்கையாளரின் நகைகளைத் திருடியது தொடர்பாக ஏற்கெனவே மத்திய குற்றப்பிரிவில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் சிறைக்குச் சென்ற பத்மபிரியா, ஜாமீனில் வெளியில் வந்திருந்தார். லாக்கரில் இருந்து ஏற்கனவே திருடிய தங்க நகைகளை வங்கியில் யாருக்கும் தெரியாமல் திரும்ப வைத்துவிட பத்மபிரியா திட்டமிட்டிருக்கிறார். இதற்காகவே தன்னை யாரும் அடையாளம் கண்டுக்கொள்ள கூடாது என்பதற்காக பர்தா அணிந்து வங்கிக்கு வந்திருக்கிறார். பின்னர், லாக்கரில் திருடிய நகைகளை வைக்க முடியாததால் அதை வங்கியிலேயே விட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் பத்மபிரியா நினைத்தது ஒன்று அங்கு நடந்தது ஒன்று. அவர் விட்டுச் சென்ற தங்க நகைகள் குறித்து எங்களிடம் கிளை மேலாளர் புகாரளித்தால் அது தொடர்பாக விசாரித்து பத்மபிரியாவை கைது செய்திருக்கிறோம். தொடர்ந்து வங்கி அதிகாரிகளுடன் சேர்ந்து பத்ம பிரியாவின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம்'' என்றனர்.

மகனைக் காப்பாற்ற `நரபலி' கொடுக்கப்பட்ட மகள் - ரத்தத்தை எடுத்து சடங்கு... அதிரவைத்த தாய்!

ஜார்க்கண்ட் மாநிலம், ஹசரிபாக் பகுதியில் பெண் ஒருவர் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அப்பெண், உடல் நலமில்லாத தன்னுடைய மகனைக் காப்பாற்ற சொந்த மகளை நரபலி கொடுத்துள்ளார். ரேஷ்மி... மேலும் பார்க்க

ரூ.80 லட்சம் சம்பளம், ரகசிய திருமணம், ஏ.ஐயால் பறிபோன வேலை: கணவர் தற்கொலையால் மனைவியும் விபரீத முடிவு

பெங்களூருவில் இரண்டு நாட்களுக்கு முன்பு சாப்ட்வேர் தம்பதி ஒன்று தற்கொலை செய்து கொண்டது. பெங்களூருவில் உள்ள கோதனூர் என்ற இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் பானு ரெட்டி(32), பிபி ஷா... மேலும் பார்க்க

அம்பேத்கர் சிலை அவமதிப்பு; கிருஷ்ணகிரியில் பரபரப்பு; காவல்துறை தீவிர விசாரணை

அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்தால்​ கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டுமென்று மக்கள் போராட்டத்தில்... மேலும் பார்க்க

சென்னை: டெல்லி நபரைச் சந்திக்க வந்தவருக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக பெண் நிர்வாகிகள்- போலீஸில் புகார்!

நாமக்கல் மாவட்டம், பாப்பம்பாளையம், கோம்பை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கோகில் ஆனந்தம் (45). இவர். பா.ஜ.க-வின் சமூக ஊடகப் பிரிவில் நாமக்கல் மேற்கு மாவட்ட துணைத் தலைவராக உள்ளார். அதோடு ரியல் எஸ்டேட் தொழ... மேலும் பார்க்க

திருவள்ளூர்: தவெக மா.செ, பூந்தமல்லி வேட்பாளர் மீது பாலியல் புகார் - அவரின் மனைவி சொல்வதென்ன?

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தவெக-வின் மகளிரணி நிர்வாகி ஒருவர், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, ``கடந்த 8.6.2025-... மேலும் பார்க்க

குவைத்: அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் தாக்குதல்; முதுகுளத்தூர் வாலிபர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது அணிக்குருந்தன் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் சந்தான செல்வம் (37).இவருக்கு கெளசல்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள... மேலும் பார்க்க