டார்கெட் Greenland: "நான் முந்தவில்லை என்றால் சீனாவும், ரஷ்யாவும்.!" - ட்ரம்ப் எ...
சேலத்தில் மருத்துவ மாணவி கொலை; காதல் விவகாரமா? தந்தையைத் தேடும் போலீஸ்! - நடந்தது என்ன?
சேலத்தை அடுத்த சித்தர்கோயில் அருகில் தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பாரதி நகரைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகள் வர்ஷினி (22) இறுதியாண்டு படித்துவந்தார்.
இவர், கல்லூரி அருகே உள்ள நல்லாம்பட்டிநாயக்கன்பட்டியில் லட்சுமணன் என்பவரின் அடுக்குமாடி வீட்டில் சக மாணவிகளுடன் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை காலை வர்ஷினி தங்கியிருந்த அறையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த இரும்பாலை போலீஸார் விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் அவரது அறை வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், வர்ஷினியின் தந்தை வரதராஜன், அவரைப் பார்க்க வந்து சென்றதும், அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததும் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வர்ஷினியின் தாய் உஷாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சேலம் வந்த அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது.
உஷாவுக்கும் வேறொருவருக்கும் நடைபெற்ற திருமணத்தில் வர்ஷினி பிறந்துள்ளார். அவர் பிறந்த சில ஆண்டுகளில் உஷாவின் கணவர் அவரை விட்டு பிறிந்த நிலையில், வரதராஜுவை உஷா இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். நெசவுத் தொழிலாளியான வரதராஜன், உஷாவை திருமணம் செய்துகொண்டபின் வர்ஷினியை தனது குழந்தையாகவே வளர்த்து வந்துள்ளார்.
வர்ஷினி மீதான பாசம் காரணமாக உஷாவும் வரதாஜனும் வேறு குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வர்ஷினி, ஆண் ஒருவருடன் பழகி வந்தது பெற்றோருக்கு தெரியவந்தது. அண்மையில் ஆண் ஒருவருடன் வர்ஷினி ஒன்றாக இருக்கும் புகைப்படம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.
அது வரதராஜனுக்கு தெரியவரவே, அந்த நபர் யார்? என விசாரித்தபோது, அவர் திருநெல்வேலி வி.கே.புரத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், அவருக்குத் திருமணாகி 2 குழந்தைகள் உள்ளதும் தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த வரதராஜன் வர்ஷினியிடம் அந்த ஆண் நண்பருடனான பழக்கத்தை கைவிடுமாறு கூறியுள்ளார்.

படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறியுள்ளார். ஆனால், அதனை வர்ஷினி ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது. அந்த ஆண் நண்பரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு திருநெல்வேலிக்கு சென்ற வர்ஷினி வீட்டுக்குச் செல்லாமல் மீண்டும் அந்த ஆண் நண்பருடன் வெளியே சென்றுள்ளார்.
இதையறிந்த வரதராஜன் சேலத்துக்கு வந்துள்ளார். மகள் தங்கியிருந்த அறைக்குச் சென்ற அவர், திருமணமானவரை திருமணம் செய்தால் வாழ்க்கை வீணாகிப்போய்விடும் என அறிவுரை கூறியுள்ளார். ஆனால், வர்ஷினி விடாப்பிடியாக அவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என கூறியுள்ளார்.
இதனால், கோபம் அடைந்த வரதராஜன் மகளை கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டு, கதவை வெளிப்புறமாக தாழிட்டுவிட்டு சென்னைக்குச் தப்பிச் சென்றிருக்கு வாய்ப்புள்ளது' என்று உஷாவிடம் விசாரித்த போலீஸார் தெரிவித்தனர்.
அவரது மனைவி உஷாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், சேலம் சென்றுவிட்டு சென்னைக்குச் செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து காவல் ஆய்வாளர் சின்னதங்கம் தலைமையிலான தனிப்படை போலீஸார் வரதராஜனைப் பிடிக்க சென்னை விரைந்துள்ளனர். வரதராஜனைப் பிடித்த பின்னரே இக்கொலைக்கான முழுக்காரணம் என்னவென்று தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.



















