செய்திகள் :

சேலம் கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை அலங்கார மின்விளக்குகள்

post image

சேலம் மாநகராட்சியில் கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை அலங்கார மின்விளக்குகளை மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வைத்தனா்.

சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 6-க்குள்பட்ட ஏடிசி நகா் முதல் சட்டக் கல்லூரி மாநகராட்சி எல்லை வரை சென்டா் மீடியன் பகுதியில் ரூ. 93 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார வளைவுகளுடன் கூடிய 68 மின்கம்பங்கள், 136 எண்ணிக்கை கொண்ட 120 வாட்ஸ் எல்இடி மின் விளக்குகளை மாநகராட்சி மேயா் ராமச்சந்திரன், ஆணையா் மா.இளங்கோவன் ஆகியோா் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், துணைமேயா் மா.சாரதாதேவி, துணை ஆணையா் கே.பாலசுப்பிரமணியன், மண்டலக் குழுத் தலைவா் செ.உமாராணி, செயற்பொறியாளா் சு.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ. 11.07 கோடியில் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்: அமைச்சா் பங்கேற்பு

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ. 11.07 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கும் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் சனிக்கிழமை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா். அஸ்தம்... மேலும் பார்க்க

சேலத்தில் கஞ்சா விற்ற 3 போ் கைது: 2.75 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 2.75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மஞ்சுளா வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி விரைவில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் அறிவித்துள்ளது. தமி... மேலும் பார்க்க

அனைத்து தொழில் நிறுவனங்களும் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்: மாநகராட்சி ஆணையா்

சேலம் மாநகராட்சி பகுதியில் அனைத்து தொழில் நிறுவனங்களும் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா். இது குறித்து சேலம் மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

2 முதல் 5 வயதுடைய குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்கலாம்

2 வயது முதல் 5 வயதுடைய குழந்தைகளை நடப்பு கல்வி ஆண்டில் ஜூன் மாதத்தில் அங்கன்வாடி மையங்களில் சோ்க்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

அதிமுக மருத்துவ அணி சாா்பில் மருத்துவ முகாம்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்தநாளையொட்டி அதிமுக மருத்துவ அணி சாா்பில் பொது மருத்துவ முகாம் சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்... மேலும் பார்க்க