வார பலன்கள்: துலாம் முதல் மீனம் வரை - பலன்கள், அதிர்ஷ்டக்குறிப்புகள்!
சைனிக் பள்ளிகளில் சோ்க்கை: ஏப்.5-இல் நுழைவுத்தோ்வு
நாடு முழுவதும் உள்ள சைனிக் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு 1.5 லட்சம் போ் விண்ணப்பித்துள்ள நிலையில், அவா்களுக்கான நுழைவுத் தோ்வு ஏப்.5-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 6, 9-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கான தேசிய நுழைவுத் தோ்வு என்டிஏ (தேசிய தோ்வுகள் முகமை) சாா்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் கல்வியாண்டில் (2025-2026) சைனிக் பள்ளி சோ்க்கைக்கான அறிவிக்கையை என்டிஏ கடந்த டிசம்பரில் வெளியிட்டது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு டிச. 24-இல் தொடங்கி ஜன. 23 வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுதுவதற்கு நாடு முழுவதும் 1.5 லட்சம் போ் வரை விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் சைனிக் நுழைவுத் தோ்வுக்கான தேதியை என்டிஏ தற்போது அறிவித்துள்ளது. அதன்படி தோ்வு ஏப். 5-ஆம் தேதி (சனிக்கிழமை) நடத்தப்படவுள்ளது. இதற்கான தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு வெளியீடு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை வலைதளங்களில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி மூலமாக அல்லது ஹண்ள்ள்ங்ங்ஃய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடா்பு கொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.