செய்திகள் :

ஜனநாயகன்: `தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள்' - ராகுல் காந்தி

post image

விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுவருகிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் அறிவித்திருக்கிறது.

ஜனநாயகன் | விஜய்

இது அரசியல் ரீதியாக பழிவாங்கும் செயல் என்று சிலர் விமர்சனம் செய்துவரும் நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி மாணிக்கம் தாக்கூர், ``வழக்கமாக எதிக்கட்சியினரை அடக்குவதற்கு அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகளைத்தான் ஆயுதங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்த லிஸ்ட்டில் சென்சார் போர்டும் சேர்ந்து கொண்டது. இதன்மூலம் சினிமாவையும், அதன் கருத்துகளையும் கட்டுப்படுத்தப் பார்க்கின்றனர்." என்றார்.

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, ``ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது  தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படுகிற  தாக்குதல். அரசியல் காரணங்களுக்காக படம் முடக்கப்படுவது ஆபத்தானது. அமலாக்கத்துறை, சி.பி.ஐ ,வருமானவரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது." என்றார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் மேலிட நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி, கிரிஷ் ஜோடங்கர் உள்ளிட்டோரும் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கின்றனர். அந்த வரிசையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இணைந்திருக்கிறார். இது தொடர்பாக ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், ``தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தைத் தடுக்கும் முயற்சி, தமிழ் கலாசாரத்தின் மீதான ஒரு தாக்குதலாகும். திரு.மோடி, தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`பாண்டிச்சேரி மக்களின் குரலாக நமது மக்கள் முன்னேற்ற கழகம் ஒலிக்கும்' - பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா

பாண்டிச்சேரி ( pondichery ) யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று `நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின்' தலைவர் ( NMMK ) ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் நடந்த மாநில மாநாட்டில் தீர்மானம் நிற... மேலும் பார்க்க

TVK Vijay: `கரூர் சம்பவம் குறித்து எங்கள் புகார்களைக் கொடுத்திருக்கிறோம்' - சி.டி.ஆர்.நிர்மல் குமார்

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழ்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சம்பவம் குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதன் அங்கமாக தமிழக வெற்றிக் ... மேலும் பார்க்க

Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம்

தேர்தல்ல இதெல்லாம் நடந்திச்சா, இப்படிஎல்லாம் நடந்திச்சா என நிறைய சம்பவங்கள் கொட்டி கிடக்கிறது. இன்னைக்கு கட்சி பாட்டுகளையே `வைப்' செய்யும் இளம் வாக்காளர்களுக்கு இதெல்லாம் சொல்ல வேண்டியது அவசியம். அது ... மேலும் பார்க்க

ஈரானுடன் வணிகமா? ட்ரம்ப் போட்ட 25% வரி; மீண்டும்‌ இந்தியாவுக்குப் பாதிப்பு; மொத்தம் எவ்வளவு வரி?

கடந்த ஜூன் மாதம், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடந்தது. அப்போது ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது.இதனால், கடந்த சில மாதங்களாக, ஈரான், அமெரிக்காவிற்கு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.இ... மேலும் பார்க்க

மும்பை தேர்தல்: திணறும் தாக்கரே சகோதரர்கள்; தாராவியைத் தக்கவைக்க தமிழ் வேட்பாளர்கள் தீவிரம்!

மும்பை மாநகராட்சிக்கு வரும் 15ம் தேதி நடக்கும் தேர்தல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பா.ஜ.க-சிவசேனா(ஷிண்டே) கூட்டணி தனியாகவும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் அவரது சித்தப்பா மகன் ராஜ்... மேலும் பார்க்க

தேமுதிக: `எல்லா பக்கமும் ஒரு துண்டு!' - தப்பு கணக்கால் சரிந்த வாக்கு | கூட்டணி சர்க்கஸ் 01

குழம்பி நிற்கும் காங்கிரஸ். ரீல் ஓட்டும் பிரேமலதா. 'மெகா கூட்டணி' என மணற் கோட்டை கட்டும் எடப்பாடி. கூட்டணி வலுவாக இருக்கிறது என தினசரி அலாரம் போல அலறும் திமுக. கூட்டணிக்காக காத்திருக்கிறது தவெக. கடந்த... மேலும் பார்க்க