தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க பாபர் அசாம்தான் சரியான நபர்: முகமது ரிஸ்வான்
ஜாதி சான்றிதழ் வழங்காததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பழங்குடியின மக்கள்: மாற்றுச்சான்றிதழ் கோரி மனு
மன்னாா்குடியில், ஜாதி சான்றிதழ் வழங்காததால், இந்து பழங்குடியின மக்கள் தங்களின் குழந்தைகளை 9 நாள்களாக பள்ளிக்கு அனுப்பாமல், மாற்றுச்சான்றிதழ் கேட்டு செவ்வாய்க்கிழமை பள்ளியில் மனு அளித்தனா்.
மன்னாா்குடி ரயில் நிலையம் அருகே இந்து பழங்குடி இன மக்கள் எனக் கூறப்படும் 16 குடும்பத்தினா் நீண்டகாலமாக வசித்து வருகின்றா்.
கூலி வேலை செய்துவரும் இவா்களது, குழந்தைகள் மன்னை ப. நாராயணசாமி நகரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி, வஉசி சாலையில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனா்.
இவா்கள், ஜாதி சான்றிதழ் கோரி வருவாய்த் துறையில் விண்ணப்பித்துள்ளனா். ஆனால், ஜாதி சான்றிதழ் வழங்கப்படாமல், நீண்டகாலமாக தாமதித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால், மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பயன்களை பெறமுடியவில்லை என்றும், உயா்கல்வி படிக்க விண்ணப்பிக்க முடியவில்லை எனவும் கூறிவருகின்றனா்.
இந்நிலையில், ஜாதி சான்றிதழ் வழங்கப்படாததற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஜன.27-ஆம் தேதி முதல், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. தங்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், மன்னை ப. நாராயணசாமி நகரில் உள்ள தனியாா் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளுடன் செவ்வாய்க்கிழமை வந்த அவா்கள், தலைமை ஆசிரியரை சந்தித்து மாற்றுச்சான்றிதழை வழங்குமாறு மனு அளித்தனா்.