செய்திகள் :

சிறை சென்ற கணவன்; திருமணம் மீறிய உறவில் மனைவி - ஜாமீனில் வந்த கணவன் கொடூர கொலை

post image

ஆந்திரா மாநிலத்திலுள்ள பெதராவீடு பகுதியைச் சேர்ந்த ஜான்சி என்பவர், தனது திருமணம் மீறிய உறவை எதிர்த்ததால் கணவர் ஸ்ரீனுவை கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்திருக்கிறது.

அந்தப் பெண் தனது சகோதரனின் உதவியுடன், ஆட்கள் வைத்து கணவரை கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்ததாக காவல் துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

Jhansi & Sreenu
Jhansi & Sreenu

ஸ்ரீனு லாரி டிரைவராக இருந்திருக்கிறார். இவர் 17 ஆண்டுகளுக்கு முன்பு ஜான்சியை திருமணம் செய்திருக்கிறார்.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஸ்ரீனு போதைப் பழக்கங்களுக்கு அடிமையானதால், இரண்டு மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஸ்ரீனு சிறையில் இருந்தபோது ஜான்சி, தனது சகோதரனின் நண்பரான சூர்ய நாராயணாவுடன் திருமணம் மீறிய உறவில் இருந்திருக்கிறார்.

சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த ஸ்ரீனு இந்த உறவை எதிர்த்து, அவர்களை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார்.

இதனால் ஜான்சி தனது கணவரை கொல்ல திட்டமிட்டு, குண்டூரைச் சேர்ந்த நான்கு பேரை ரூ.2 லட்சத்திற்கு வரவைத்திருக்கிறார்.

கத்தி
கத்தி

முதலில் இரண்டு முறை கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்கள். அது தோல்வியில் முடிந்திருக்கிறது.

இறுதியாக பெதராவீடு பகுதியிலுள்ள ஒரு கோவில் அருகே ஸ்ரீனு கண்களில் மிளகாய்ப்பொடி தூவி, கத்தியால் குத்தி சம்பவ இடத்திலேயே கொலை செய்தனர்.

இதையடுத்து, ஜான்சியையும் அவரின் சகோதரனையும் காவல் துறையினர் கைது செய்தனர். மற்ற குற்றவாளிகளை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

`காட்டிகொடுத்த 7 வயது மகன்' - 50 வரை சரியாக எழுத தெரியாத 4 வயது மகளை அடித்து கொன்ற தந்தை!

குழந்தைகள் நன்றாக படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது அனைத்து பெற்றோர்களின் கனவாக இருக்கும். அதற்காக சில பெற்றோர் தங்களது குழந்தைகளை தாங்கள் விரும்பும் படிப்பில் சேர்த்து விட்டு படிக்க சொல்லி ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: பசியில் போலி டோக்கன் கொடுத்த பெண் தாக்கப்பட்டாரா? சர்ச்சை வீடியோவின் பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா என்பவரின் மனைவி ஜெரினா ( வயது: 50 ). அம்மாபட்டினத்தில் உள்ள பள்ளிவாசலில் மெகராஜ் இஸ்லாமிய விழாவிற்காக டோக்கன் கொடுத்து உணவு வழங்கப்பட்ட... மேலும் பார்க்க

செல்போன் வெடித்து 27 பேர் பலியானதாக பரவும் ஆடியோ - எச்சரித்த தூத்துக்குடி போலீஸார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுமார் 17 விநாடிகள் மட்டுமே ஒரு சிறுவன் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியும் வேகமாக பகிரப்பட்டும் வருகிறது. அதில் பேசும் சிறுவன், “தூத்த... மேலும் பார்க்க

மும்பை கட்டடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்? - பாலிவுட் நடிகர் கமால் கானிடம் போலீஸார் விசாரணை!

பாலிவுட் நடிகர் கமால் கான் மும்பை லோகண்ட்வாலா பகுதியில் வசித்து வருகிறார். அவர் வசித்து வந்த பங்களாவிற்கு அருகில் உள்ள நாலந்தா கட்டடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டத... மேலும் பார்க்க

சத்தீஷ்கர்: ஒரே இரவில் மாயமான இரும்பு பாலம் - 5 பேர் கைது; மூளையாக செயல்பட்ட பழைய இரும்பு வியாபாரி!

இந்தியாவில் அவ்வப்போது இரும்பால் கட்டப்பட்ட பாலங்கள் காணாமல் போய்விடுகிறது. இதற்கு முன்பு பீகாரில் ஷெட்டில் நிறுத்தி இருந்த ரயிலைக்கூட ஒவ்வொரு பகுதியாக கழற்றி எடுத்துச்சென்று விற்பனை செய்துள்ளனர். இப்... மேலும் பார்க்க

சேலம்: ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; கைதுசெய்யப்பட்ட முதியவர்!

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி அதிவிரைவு ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலின் முன்பதிவுப் பெட்டியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் பயணம் செய்தார். அந்த ரயில் நேற்று... மேலும் பார்க்க