செய்திகள் :

`காட்டிகொடுத்த 7 வயது மகன்' - 50 வரை சரியாக எழுத தெரியாத 4 வயது மகளை அடித்து கொன்ற தந்தை!

post image

குழந்தைகள் நன்றாக படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது அனைத்து பெற்றோர்களின் கனவாக இருக்கும். அதற்காக சில பெற்றோர் தங்களது குழந்தைகளை தாங்கள் விரும்பும் படிப்பில் சேர்த்து விட்டு படிக்க சொல்லி கட்டாயப்படுத்துவார்கள்.

ஹரியானா மாநிலத்தில் ஒரு தந்தை தனது மகள் சரியாக படிக்காததால் அவளை அடித்து கொலை செய்துள்ளார். பரிதாபாத்தில் உள்ள ஜட்செந்திலி என்ற என்ற இடத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா ஜெய்ஸ்வால்(31). இவருக்கு 4.5 மற்றும் 7 வயதில் இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

இதில் 4.5 வயது மகள் வன்ஷிகா படியில் இறங்கியபோது கீழே விழுந்துவிட்டதாக கூறி கிருஷ்ணா மருத்துவமனையில் சேர்த்தார். அக்குழந்தைக்கு உடம்பு முழுக்க காயம் இருந்தது. குழந்தையின் தாய் வேலைக்கு சென்று இருந்தார். அவருக்கு கிருஷ்ணா போன் செய்து தகவல் கொடுத்தார்.

குழந்தையின் தாய் நேரடியாக அலுவலகத்தில் இருந்து மருத்துவமனைக்கு சென்றார். குழந்தையின் தலையில் காயம் இருந்தது. குழந்தை சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனது. குழந்தையின் தாய் வீட்டிற்கு வந்தபோது அவர்களின் 7 வயது மகன் இது குறித்து தனது தாயாரிடம் தெரிவித்தார்.

வன்ஷிகாவை தந்தை கிருஷ்ணா அடித்து உதைத்ததாக 7 வயது மகன் தெரிவித்தார். இதையடுத்து கிருஷ்ணாவின் மனைவி ரஞ்சிதா இது குறித்து போலீஸில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் கிருஷ்ணாவை பிடித்துச்சென்று போலீஸார் விசாரித்தபோது, சிறுமியிடம் 1-50 வரை நம்பர்களை எழுதும்படி கிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஆனால் சிறுமி சரியாக எழுதவில்லை. இதனால் கோபத்தில் சிறுமியை கம்பால் அடித்துள்ளார். அதோடு சிறுமியை தூக்கி தரையில் தூக்கியடித்துள்ளார். இதனால் படுகாயம் அடைந்து சிறுமி உயிரிழந்துள்ளார். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்கின்றனர். பகலில் மனைவியும், இரவில் கிருஷ்ணாவும் வேலைக்கு சென்றனர். பகலில் கிருஷ்ணா குழந்தைகளை கவனித்து வந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

சிறை சென்ற கணவன்; திருமணம் மீறிய உறவில் மனைவி - ஜாமீனில் வந்த கணவன் கொடூர கொலை

ஆந்திரா மாநிலத்திலுள்ள பெதராவீடு பகுதியைச் சேர்ந்த ஜான்சி என்பவர், தனது திருமணம் மீறிய உறவை எதிர்த்ததால் கணவர் ஸ்ரீனுவை கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்திருக்கிறது. அந்தப் பெண் தனது சகோதரனின் உத... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: பசியில் போலி டோக்கன் கொடுத்த பெண் தாக்கப்பட்டாரா? சர்ச்சை வீடியோவின் பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா என்பவரின் மனைவி ஜெரினா ( வயது: 50 ). அம்மாபட்டினத்தில் உள்ள பள்ளிவாசலில் மெகராஜ் இஸ்லாமிய விழாவிற்காக டோக்கன் கொடுத்து உணவு வழங்கப்பட்ட... மேலும் பார்க்க

செல்போன் வெடித்து 27 பேர் பலியானதாக பரவும் ஆடியோ - எச்சரித்த தூத்துக்குடி போலீஸார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுமார் 17 விநாடிகள் மட்டுமே ஒரு சிறுவன் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியும் வேகமாக பகிரப்பட்டும் வருகிறது. அதில் பேசும் சிறுவன், “தூத்த... மேலும் பார்க்க

மும்பை கட்டடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்? - பாலிவுட் நடிகர் கமால் கானிடம் போலீஸார் விசாரணை!

பாலிவுட் நடிகர் கமால் கான் மும்பை லோகண்ட்வாலா பகுதியில் வசித்து வருகிறார். அவர் வசித்து வந்த பங்களாவிற்கு அருகில் உள்ள நாலந்தா கட்டடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டத... மேலும் பார்க்க

சத்தீஷ்கர்: ஒரே இரவில் மாயமான இரும்பு பாலம் - 5 பேர் கைது; மூளையாக செயல்பட்ட பழைய இரும்பு வியாபாரி!

இந்தியாவில் அவ்வப்போது இரும்பால் கட்டப்பட்ட பாலங்கள் காணாமல் போய்விடுகிறது. இதற்கு முன்பு பீகாரில் ஷெட்டில் நிறுத்தி இருந்த ரயிலைக்கூட ஒவ்வொரு பகுதியாக கழற்றி எடுத்துச்சென்று விற்பனை செய்துள்ளனர். இப்... மேலும் பார்க்க

சேலம்: ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; கைதுசெய்யப்பட்ட முதியவர்!

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி அதிவிரைவு ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலின் முன்பதிவுப் பெட்டியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் பயணம் செய்தார். அந்த ரயில் நேற்று... மேலும் பார்க்க