`எடப்பாடிதான் எங்கள் தலைவர்; மாற்றுக் கருத்து இல்லை’ - வேலுமணி அணியில் இருந்து த...
'டி.ஆர்.பி. ராஜா வருத்தப்பட்டு பேசினார்; இது தெரிந்தால் சீட் வேண்டாம் என.!' - எம்.எல்.ஏ காமராஜ்
மன்னார்குடி எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காமராஜ், த.வெ.கவுக்கு ஆதரவு தெரிவித்ததால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரை கட்சியில் இருந்து நீக்கினார்.
இந்நிலையில் முன்னாள் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா குறித்து எம்எல்ஏ காமராஜ் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அரசியல் கூட்டம் ஒன்றில் பேசிய எம்எல்ஏ காமராஜ், "எல்லா கட்சியினர் உடனும் எனக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சில இடங்களில் வருத்தப்பட்டு பேசினார்.

எனக்கே அது சங்கடமாகி, அவருக்கு ஃபோன் செய்து பேசினேன். இப்படி நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தெரிந்திருந்தால் நான் சீட் வேண்டாம் என்றே போயிருப்பேன்.
அரசியலுக்கு அப்பாற்பட்ட நம்ம உறவு அப்படியே தொடரட்டும். 100 ஆண்டுகாலம் ஆனாலும் நீங்கள் செய்த பணியை வேறு யாராலும் இந்தத் தொகுதிக்கு செய்ய முடியாது.
நீங்கள் கொண்டு வந்த பணிகளை எள்ளளவும் நாங்கள் மாற்ற மாட்டோம் என நேரடியாக அவரிடம் ஃபோனில் கூறினேன். அவர் மன்னார்குடிக்காக நிறைய திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்" என்று டி.ஆர்.பி. ராஜா குறித்து பெருமையாக பேசியிருக்கிறார்.
















