செய்திகள் :

தந்தையின் இறுதி சடங்கில் மோதல்! சடலத்தை இரண்டாக பிரிக்கக் கோரிய மூத்த மகன்!

post image

மத்தியப் பிரதேசத்தின் திகம்கார் மாவட்டத்தில் தந்தையின் இறுதி சடங்கில் ஏற்பட்ட மோதலில் அவரது உடலை மூத்த மகன் இரண்டாக பிரிக்கக் கோரிக்கை விடுத்தார்.

திகம்காரின் லிதோராட்டால் கிராமத்தைச் சேர்ந்த தயானி சிங் கோஷ் (வயது 84), நீண்ட நாள்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு அவரது இளைய மகனான தாமோதர் சிங் என்பவருடன் வசித்து வந்த நிலையில், கடந்த பிப்.2 அன்று காலமானார்.

இந்நிலையில், அவரது இறுதி சடங்கு செய்வது குறித்து தாமோதருக்கும் அவரது மூத்த சகோதரரான கிஷன் சிங் என்பவருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. மூத்த மகனான கிஷன் தனக்கு தான் இறுதி சடங்கு செய்யும் உரிமை உள்ளது என்று கூறியுள்ளார்.

ஆனால், தயானி சிங் தனது இளைய மகனான தாமோதரர் தான் தனக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டும் என ஆசைப்பட்டதாக தாமோதரன் கூறியுள்ளார். இதனால், சகோதரர்கள் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தேர்தல் விதிமீறல்: தில்லி முதல்வர் மீது வழக்குப்பதிவு!

இந்த வாக்குவாதம் தொடர்ந்தபோது குடிபோதையில் இருந்த கிஷன் தங்களது தந்தையின் உடலை இரண்டாக வெட்டி இருவரும் தனித்தனியாக இறுதி சடங்கு செய்துக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். இந்த கோரிக்கையால், அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல் துறையினர் இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின்னர், அவரது ஊர் மக்கள் மற்றும் உறவினர்களுடன் விசாரணை நடத்திய போலீஸார் தயானி சிங்கின் இறுதி காலத்தில் அவரை கவனித்துக்கொண்ட அவரது இளைய மகானான தாமோதரருக்கு இறுதி சடங்கு செய்யும் உரிமையை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, அவரது தந்தையின் இறுதி சடங்குகளை தாமோதரர் மேற்கொள்ள, அதற்கு ஒத்துழைக்குமாறு கிஷனுக்கு அறிவுறுத்தப்பட்டது. குடிபோதையில் இருந்த மூத்த மகனின் இந்த செயலினால் அவர்களது கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

"பிஜாப்பூரில் மிகப்பெரிய வெற்றி": பாதுகாப்புப் படையினருக்கு அமித் ஷா பாராட்டு

புதுதில்லி: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் 31 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதற்காக பாதுகாப்புப் படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவித்துள்... மேலும் பார்க்க

உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்தில் சோ்ந்த 16 இந்தியா்களை காணவில்லை: மத்திய அரசின் அதிர்ச்சி பதில்

புது தில்லி: உக்ரைன் மீதான ரஷிய போரில் அந்நாட்டு ராணுவத்தில் சோ்ந்த இந்தியா்களில் 16 பேரைக் காணவில்லை என ரஷியா தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சா் கீா்த்தி வரதன் சிங் தெரிவித்துள்ளாா்.இது த... மேலும் பார்க்க

மக்களை சந்திக்க யோசிக்கும் எடப்பாடி கருத்து சொல்லக் கூடாது: அமைச்சா் அன்பில் மகேஷ்

திருச்சி: மக்களை சந்திக்க யோசிக்கும் எடப்பாடி கே. பழனிசாமி, ஈரோடு இடைத்தோ்தலில் போட்டியிடாமல் கருத்து சொல்வது கூடாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சியில... மேலும் பார்க்க

தில்லியை பாதுகாப்பானதாகவும், தூய்மையானதாகவும் மாற்றுவோம்: கிரண் பேடி

புது தில்லி: "தில்லியை ஆரோக்கியமானதாகவும், பாதுகாப்பானதாகவும், தூய்மையானதாகவும் மாற்றுவோம்" என்று புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார். தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வ... மேலும் பார்க்க

ஆக்கபூா்வமான எதிா்க்கட்சியாக செயல்படுவோம்: பிரியங்கா கக்கா்

புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளாக தில்லி மக்கள் அளித்த ஆதரவிற்கு ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவி... மேலும் பார்க்க

குடியிருப்பு கட்டடத்தில் தீ! பெண் பலி..ஒருவர் படுகாயம்!

மகாராஷ்டிர மாநிலம் தாணேவிலுள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீயினால் பெண் ஒருவர் பலியானார். மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தாணேவின் எனஐபிஎம் சாலையிலுள்ள சன்ஸ்ரீ குடியிர... மேலும் பார்க்க