செய்திகள் :

தந்தையின் இறுதி சடங்கில் மோதல்! சடலத்தை இரண்டாக பிரிக்கக் கோரிய மூத்த மகன்!

post image

மத்தியப் பிரதேசத்தின் திகம்கார் மாவட்டத்தில் தந்தையின் இறுதி சடங்கில் ஏற்பட்ட மோதலில் அவரது உடலை மூத்த மகன் இரண்டாக பிரிக்கக் கோரிக்கை விடுத்தார்.

திகம்காரின் லிதோராட்டால் கிராமத்தைச் சேர்ந்த தயானி சிங் கோஷ் (வயது 84), நீண்ட நாள்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு அவரது இளைய மகனான தாமோதர் சிங் என்பவருடன் வசித்து வந்த நிலையில், கடந்த பிப்.2 அன்று காலமானார்.

இந்நிலையில், அவரது இறுதி சடங்கு செய்வது குறித்து தாமோதருக்கும் அவரது மூத்த சகோதரரான கிஷன் சிங் என்பவருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. மூத்த மகனான கிஷன் தனக்கு தான் இறுதி சடங்கு செய்யும் உரிமை உள்ளது என்று கூறியுள்ளார்.

ஆனால், தயானி சிங் தனது இளைய மகனான தாமோதரர் தான் தனக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டும் என ஆசைப்பட்டதாக தாமோதரன் கூறியுள்ளார். இதனால், சகோதரர்கள் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தேர்தல் விதிமீறல்: தில்லி முதல்வர் மீது வழக்குப்பதிவு!

இந்த வாக்குவாதம் தொடர்ந்தபோது குடிபோதையில் இருந்த கிஷன் தங்களது தந்தையின் உடலை இரண்டாக வெட்டி இருவரும் தனித்தனியாக இறுதி சடங்கு செய்துக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். இந்த கோரிக்கையால், அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல் துறையினர் இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின்னர், அவரது ஊர் மக்கள் மற்றும் உறவினர்களுடன் விசாரணை நடத்திய போலீஸார் தயானி சிங்கின் இறுதி காலத்தில் அவரை கவனித்துக்கொண்ட அவரது இளைய மகானான தாமோதரருக்கு இறுதி சடங்கு செய்யும் உரிமையை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, அவரது தந்தையின் இறுதி சடங்குகளை தாமோதரர் மேற்கொள்ள, அதற்கு ஒத்துழைக்குமாறு கிஷனுக்கு அறிவுறுத்தப்பட்டது. குடிபோதையில் இருந்த மூத்த மகனின் இந்த செயலினால் அவர்களது கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தனிப்பட்ட பயணத்திற்கு அரசு வாகனத்தை பயன்படுத்திய அமைச்சர் ராஜிநாமா!

ஆஸ்திரேலியா நாட்டில் அரசினால் தனக்கு வழங்கப்பட்ட காரை தனது சொந்த பயணத்திற்கு பயன்படுத்திய விவகாரத்தில் அந்நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.ஆஸ்தி... மேலும் பார்க்க

நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் 3 வீரர்கள் படுகாயம்!

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படை வீரர்கள் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பிஜப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதி... மேலும் பார்க்க

அமெரிக்க கைதிகளை சிறையில் அடைக்க முன்வரும் எல் சால்வடார்!

அமெரிக்க கைதிகளை குறைந்த கட்டணத்திற்கு தங்களது நாட்டு சிறைச்சாலைகளில் அடைத்துக்கொள்ளும் திட்டத்தை எல் சல்வடார் அரசு முன்வந்துள்ளது.அமெரிக்க அரசின் செயலாளர் மார்க்கோ ரூபியோ அரசுமுறைப் பயணமாக லத்தீன் அம... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் பதுங்கு குழிகள் வெடி வைத்து தகர்ப்பு!

பாகிஸ்தானின் குர்ராம் மாவட்டத்தில் மோதல்காரர்களின் 30க்கும் மேற்பட்ட பதுங்கு குழிகள் அதிகாரிகளால் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.வடமேற்கு பாகிஸ்தானின் குர்ராம் மாவட்டத்தில் தொடர் மோதல்களிலும் தாக்குதல்கள... மேலும் பார்க்க

மெட்ரோ பணிகள்: மாதவரம் எம்.எம். காலனியை காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக மாதவரம் எம்.எம். காலனியை காலி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்காக மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள எம்.எம். காலனியை 4 மாதங... மேலும் பார்க்க

சங்கத்தமிழ் நாள்காட்டியினை வெளியிட்ட முதல்வர்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப். 4) தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் ... மேலும் பார்க்க