செய்திகள் :

``தனியாக ஒரு பெண் ஏன் அங்க போகணும்?'' - கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பிரேமலதா விஜயகாந்த்

post image

கடந்த நவ. 2ம் தேதி இரவு 11 மணியளவில், 20 வயது மாணவி கோவை விமான நிலையம் பின்புற பகுதியில் தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு 3 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து அவர்கள் காரை அடித்து நொறுக்கியது, காதலனை தாக்கி, அந்தக் கல்லூரி மாணவியை தூக்கிச் சென்று தொடர்ந்தும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாலியல் வழக்கு

இந்தக் குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறை தனிப்படையை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கி, தப்பி ஓட முயன்ற குற்றவாளிகள் மூவரையும் தற்காப்புக்காக துப்பாக்கியால் கால், கையில் சுட்டு உயிருடன் பிடித்தது.

இந்தச் சம்பவம் நாட்டின் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று கோவை சென்றிருந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதுகுறித்துப் பேசுகையில்,

"டாஸ்மாக், போதை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது.

இந்தக் கொடுமையான சூழலில் யாரையும் நம்பாமல் பெண்கள் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அரசு, பெற்றோர்கள், காவல்துறை என எல்லாரும் 24 மணிநேரமும் நம்மைப் பாதுகாக்க மாட்டார்கள். எதாவது நடந்தால் நமது வாழ்க்கைதான் பாதிக்கப்படும்.

பெண்கள் சக்தியின் ரூபம். நாம்தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்."

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

நானும் ஒரு பெண் என்பதால் உரிமையுடன் சொல்கிறேன்: தனியாக யாரையும் நம்பாமல், நள்ளிரவில் தனிமையான, பாதுகாப்பற்ற இடத்திற்குச் செல்லாதீர்கள்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி இரவில் விமான நிலையத்திற்கு பின்னால் இருக்கும் பாதுகாப்பற்ற இடத்திற்கு ஏன் செல்ல வேண்டும்? தனியாக ஒரு பெண் ஏன் அங்க போகணும்? நம்மை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

"என்றைக்கும் ஒரு பெண் தனியாக இரவில் செல்கிறாரோ, அன்றைக்குத்தான் நாடு சுதந்திரம் அடைந்ததாக அர்த்தம்" என்று காந்தியடிகள் காலத்திலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தினமும் நடந்துகொண்டே இருக்கின்றன.

நாம் நாடு பெண்களுக்குப் பாதுகாப்பான நாடாக மாறும் வரை, பெண்களாகிய நாம்தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்," என்று பேசியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.

``டிசம்பர் 15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்'' - நாள் குறித்த ஓ.பன்னீர்செல்வம்

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுகவில் அதிகாரப்போட்டி பல முனைகளில் சூடுபிடித்திருக்கிறது.ஏற்கனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் பழனிச்சாமியை எதிராக நிற்க, இப்போது மூத்த தலைவர் ... மேலும் பார்க்க

``ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி உருவாகிறதா?'' - அதிமுக வைத்திலிங்கம் எச்சரிக்கை

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடுவும் விதித்திருந்தார். அதிமுகவில் இருந... மேலும் பார்க்க

காரைக்குடி: போராட்டத்தால் பூட்டப்பட்ட மதுக்கடை - மீண்டும் திறக்கப்படலாமென மக்கள் அச்சம்!

கடந்த 14 ஆம் தேதி காரைக்குடியில் துணை முதல்வர் உதயநிதி கலந்துகொண்ட அரசு விழாவில் 'டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் துயரம் அடைகிறார்கள்' என்று பள்ளி மாணவி பேசியது பரபரப்பை ஏற்படுத்த, துணை... மேலும் பார்க்க

"பாலாறு 4,730 கோடி மணல் கொள்ளை டு அவளூர் ஏரி" - விஜய் சொல்லும் காஞ்சிபுரம் பகுதி பிரச்னைகள்!

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசுகிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு நடைபெறும் விஜய்யின் இந்த மக்கள் சந்திப்பு என்பதால் பலத்த பாதுகாப்புடன் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: `நீங்கள் ஓட்டை குறைத்தால், நான் நிதியை குறைத்துவிடுவேன்'- அஜித் பவார் எச்சரிக்கை

மகாராஷ்டிராவில் நகராட்சிகளுக்கு வரும் 2ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. மாலேகாவ் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில த... மேலும் பார்க்க

புதிய தொழிலாளர் சட்டம்: ``ரத்தத்தை உறிஞ்சும் கொடூரமான முடிவு" - எதிர்க்கட்சிகள் விமர்சனம்

மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ள 4 தொழிலாளர் சட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம் CPI(M) மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.4 முக்கிய தொழிலாளர் ச... மேலும் பார்க்க