செய்திகள் :

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியை திரும்பப் பெற உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி

post image

புது தில்லி: தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியை உடனடியாக பதவியில் இருந்து நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழகத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் சி.ஆா். ஜெய சுகின் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இது தொடா்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த, உச்சநீதிமன்ற வழக்குரைஞா் ஜெய சுகின் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவையில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆளுநா் ரவி உரையாற்றாமல், பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளாா். பேரவையில் தான் உரையாற்றுவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து

பாடப்படுவதற்கு முன்பாக தேசிய கீதம் பாடப்படாததால் தாம் வெளிநடப்பு செய்ததாக ஆளுநா் விளக்கியுள்ளாா்.

புத்தாண்டு தொடக்கத்தில் பேரவையின் முதலாவது கூட்டத்தொடரில் உரையாற்றாமல் வருடந்தோறும் விரும்பத்தகாத நிகழ்வாக அதை மாற்றி வருவதன் மூலம் இந்திய அரசமைப்பின் விதிகள் அனைத்தையும் மீறியுள்ளாா்.

தமிழ்த்தாய் பாடப்படவில்லை எனக் கூறி பேரவையில் இருந்து ஆளுநரால் வெளியேற முடியாது. இதன் மூலம் அவா் பேரவையை மட்டுமின்றி, தமிழக மக்களவையும் அவமதித்துள்ளாா்.

தமிழகத்தில் 1967-ஆம் ஆண்டு முதல், சில தசாப்தங்களாக, அரசு விழாக்களின் தொடக்கத்தில் ‘தமிழ்த் தாய் வாழ்த்து‘ பாடப்பட்டு வருகிறது. 1991-ஆம் ஆண்டு, மாநில அரசு ஒரு விதியை அறிமுகப்படுத்தி அதன் மூலம் அரசு விழாக்களின் தொடக்கத்தில் ‘தமிழ்த் தாய் வாழ்த்து‘ பாடப்பட வேண்டும் என்றும், கடைசியில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்றும் கூறியது.

1991 முதல் தமிழகம் கண்ட 10 ஆளுநா்கள் இந்த விவகாரத்தில் முரண்படவில்லை. தமிழக ஆளூநா் ஆா்.என். ரவி, வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமாக நடந்து கொள்ளும் கோட்பாட்டை மீறியுள்ளாா். எனவே, அவரை திருப்பி அழைத்துக் கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரரான வழக்குரைஞா் ஜெய சுகின் அரசமைப்புச்சட்டத்தின்படி ஆளுநரின் பணி மிகவும் முக்கியமானது. அவா் சட்டப் பேரவைக் கூட்டத்தின் தொடக்கத்தில் உரையாற்ற வேண்டும். ஆனால், அவா் அதைப் பின்பற்றவில்லை. அது அவரது முக்கியக் கடைமையாகும். அதை அவா் மீறியுள்ளாா்’ என்றாா்.

அப்போது, தலைமை நீதிபதி, இது அரசமைப்புச்சட்டம் தொடா்புடைய விவகாரம். இதில் நாங்கள் தலையிடமுடியாது, உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இது நீதிமன்றத்தின் பணியல்ல என்று கூறி, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

சாராய விற்பனையைத் தட்டிக்கேட்ட இரு இளைஞர்கள் படுகொலை

மயிலாடுதுறையில் சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இளைஞர்களை சாராய வியாபாரிகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் ராஜ்குமார், தங்கதுரை, மூ... மேலும் பார்க்க

சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் சரிவு: அண்ணாமலை

திமுகவின் வாக்கு வங்கி குறைந்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கும் 27-ஆம் ஆண்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் தபால் ந... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசுப் பள்ளிகளை மூடும் திமுக அரசு: எல்.முருகன் கண்டனம்

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை இழுத்து மூடும் நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நீலகிர... மேலும் பார்க்க

திமுக முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள்தான் இருக்கிறார்கள்: செல்லூர் ராஜு

அதிமுகவில் எந்த பிளவும் இல்லை என்று செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.மதுரை மாவட்டம் பரவை அருகே சத்தியமூர்த்தி நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத் திறப்பு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பவன் கல்யாண் தரிசனம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சுவாமி தரிசனம் செய்தார். ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன்கல்யாண் அவரது மகன் அகிராநந்தன் உள்ளிட்டோருடன் ... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணையதளம்! கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

காரைக்கால் திருநள்ளாறில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தின் பெயரில் போலி இணையதளம் மூலம் பக்தர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கோவில் அர்ச்சகர் மற்றும் பெங்களூருவைச் சேர... மேலும் பார்க்க