செய்திகள் :

தமிழ்குமரன் காங்கிரஸில் சேர்ந்தது முதல் பாமக-விலிருந்து நீக்கப்பட்டது வரை! - நடந்தது என்ன?

post image

குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிரச்னையால் இரண்டாகப் பிளவுபட்ட பாமக-வில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது.

அன்புமணி, ராமதாஸ், ஜி.கே.மணி

அதே நேரம், டாக்டர் ராமதாஸ் தலைமையிலான அணியோ திமுக, அதிமுக, தவெக என கூட்டணியில் சேர முயற்சித்தும் எதுவும் நடக்காத நிலையில், சசிகலா தொடங்கிய கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

சசிகலாவுடனான கூட்டணிக்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், ஜி.கே.மணி உள்ளிட்ட சில நிர்வாகிகள் ராமதாஸின் முடிவுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் ஜி.கே.மணியின் மகனும், பாமக இளைஞர் சங்கத் தலைவருமான தமிழ்குமரன், காங்கிரஸில் இணந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

தான் வெற்றி பெற்ற பென்னாகரம் தொகுதியில் மகன் தமிழ்குமரனை நிறுத்தலாம் என்று ஜி.கே.மணி திட்டமிட்டிருந்ததாகவும், பாமக பிளவுபட்ட சூழலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் பலமாக உள்ளதால், சசிகலா கட்சிக் கூட்டணியை நம்பி போட்டியிடுவது வெற்றியைத் தராது என்பதால் இந்த தேர்தலில் மகனை நிறுத்தலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

தமிழ்குமரன்
தமிழ்குமரன்

இந்த நிலையில்தான் தன்னுடைய தொடர்புகள் மூலம் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் தமிழ்குமரன். ஐந்து மாதங்களுக்கு முன்புதான் பாமக இளைஞர் சங்கத்தின் தலைவர் பொறுப்பை தமிழ்குமரனுக்கு ராமதாஸ் வழங்கியிருந்தார். ஜி.கே.மணி குடும்பத்தினருக்கு டாக்டர் ராமதாஸ் அதிக முக்கியத்துவம் கொடுத்ததும்தான், பாமக-வுக்குள் பிரச்னை வர காரணம் என்றும் சொல்லப்பட்டது.

தற்போது காங்கிரஸில் இணந்துள்ள தமிழ்குமரன், பென்னாகரத்தில் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து பாமக இளைஞர் சங்க தலைவர் பொறுப்பு உட்பட கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தமிழ்குமரனை நீக்கி, டாக்டர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்குமரன் காங்கிரஸில் சேர்ந்தது, அதன் மூலம் தொகுதியைப் பெறவுள்ளது எல்லாம் ஜி.கே.மணிக்குத் தெரியும் என்று சொல்லப்படும் நிலையில், தற்போது டாக்டர் ராமதாஸ் தன் மகன் மீது எடுத்துள்ள நடவடிக்கையின்போதும் ஜி.ஜே.மணியும் உடன் இருந்துள்ளார்.

இது ராமதாஸ் தலைமையிலான பாமக முகாமில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விதிமுறையை மீறிய வாகனங்களுக்கு பல லட்சம் அபராதம் - புதுச்சேரி போக்குவரத்து போலீசார் அதிரடி!

அதிவேகமாக வரும் வாகனங்களை கண்காணிக்கும் எஸ்.பி. ரட்சனா சிங்எஸ்பி தலைமையில் வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பும் ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டனஅகற்றப்பட்ட ஏர் ஹாரன்களை பார்வையிட்ட எஸ்பி அனுமதிக்கப்பட்ட அளவை விட... மேலும் பார்க்க

'டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு'- தொகுதி மறுவரையறை தோல்வி குறித்து ஸ்டாலின்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதாவது, * பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப... மேலும் பார்க்க

ஓட்டு கேட்க கிளம்பிய நடிகை, கேட்டை திறக்காத தலைவர்; கட்சியில் சேர்ந்ததும் நடிகருக்குக் கிடைத்த கார்

வரும் வியாழக்கிழமை நடக்கவிருக்கிறது தமிழக சட்டசபைத் தேர்தல். ஆளும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒருபக்கமும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்பக்கமும்... மேலும் பார்க்க

கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்! - Drone Clicks

கிணத்துக்கடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கிணத்துக்கடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கிணத... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு; தோல்வியைத் தழுவிய தொகுதி மறுவரையறை மசோதா

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதாவது, * பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப... மேலும் பார்க்க

"தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படாது, நான் கையெழுத்திட்டு தருகிறேன்"- அமித் ஷா வாக்குறுதி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடந்துவரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்தும், தொகுதி மறு சீரமைப்பு குறித்தும் கடந்த இரண்டு நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற விவாதத்... மேலும் பார்க்க