செய்திகள் :

"தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை எக்காரணம் கொண்டும் காலூன்ற விடக்கூடாது!" - அமைச்சர் கே.என்.நேரு

post image

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழகத்தைப் புறக்கணிக்கும் ஒன்றிய அரசு மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய அரசின் குளறுபடிகளால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டினை உடனடியாக நீக்கக் கோரியும், தமிழகத்திற்கு போதிய திட்டங்களை வழங்காமல் வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க (NDA) அரசைக் கண்டித்தும், மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நாளை காலை 10 மணி அளவில் பி.எஸ்.என்.எல் (BSNL) அலுவலகம் அருகே நடைபெறும் என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்பிறகு, இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு,

meeting

"கடந்த நான்கு, ஐந்து தேர்தல்களாக தி.மு.க தலைமையில் உருவான கூட்டணி தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கூட்டணியில் உள்ள அனைவரின் மனமும் புண்படாத வகையில், அனைவரையும் அரவணைத்து இந்த வெற்றிகரமான கூட்டணியைச் சிறப்பாக வழிநடத்திச் செல்கிறார்.

கேஸ் விலை உயர்வு போன்ற விவகாரங்களில் ஒன்றிய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கூடத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். நான்கு ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு, எந்த அதிகார வரம்பில் யார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடத் தெரியவில்லை.

ஒன்றிய அரசு செய்ய வேண்டியதை, முதல்வர் உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கூறுகிறார். தேர்தல் நேரம் என்பதால் நம்மை இழிவுபடுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அவர் பேசி வருகிறார். இந்தத் தேர்தல் தமிழ்நாட்டிற்கு மிக முக்கியமான தேர்தல்.

தமிழ்நாட்டில் பாஜகவை எக்காரணம் கொண்டும் காலூன்ற விடக்கூடாது என்பதில் தி.மு.க கூட்டணி உறுதியாக உள்ளது. இது, தமிழ்நாடு-டெல்லிக்குமான தேர்தல் என்பதை முதலமைச்சர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். இடையில் சிலர் புதிதாகக் கட்சி ஆரம்பித்துச் சில விஷயங்களைக் கூறினாலும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தி.மு.க தலைமையிலான கூட்டணி மீண்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

வரவிருக்கும் தேர்தலிலும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஒரு மகத்தான வெற்றியைப் பதிவு செய்வோம்" என்றார்.

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: தமிழ்நாடு உணவகங்கள், டீக்கடைகளுக்கு 1 மின்சார யூனிட்டிற்கு ரூ.2 சலுகை

இந்தியா முழுவதுமே கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருந்து வருகிறது.இதனால், வணிக சிலிண்டர்கள் விநியோகத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதையொட்டி, டீக்கடைகள், உணவகங்கள் மின்சார அடுப்பிற்கு மெல்ல மெல... மேலும் பார்க்க

விஜய்யை கூட்டணிக்குள் இணைக்க பாஜக முயற்சியா? - நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய்யின் தவெகவை இணைக்க பாஜக முயல்வதாக கடந்த ஒரு வாரமாக செய்திகள் வெளியாகி வருகின்றன.இந்நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் ந... மேலும் பார்க்க

வட கொரியா திடீர் ஏவுகணை தாக்குதல்? -'அலர்ட்' ஆகும் ஜப்பான் - என்ன நடந்தது?

ஒரு பக்கம் ஈரான் போர், உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கிறது.இன்னொரு பக்கம், வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் சொந்த நாட்டில் தயாரித்த ஏவுகணை, துப்பாக்கி போன்றவற்றை சோதித்து வருகிறார்.இந்த நிலையில், ஜப... மேலும் பார்க்க

`20 ஆண்டு அமெரிக்க தோல்வியை ஆய்வு செய்தோம்' - ஈரான் செய்த ராணுவ மாற்றம்; போரில் என்ன நடக்கிறது?

ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடங்கி 2 வாரங்கள் ஆகிவிட்டது. போர் தொடங்கியவுடன் ஈரானின் தலைவர் அல் கமெனி உட்பட முக்கிய தலைவர்களை கொலை செய்ததால் அடுத்த சில நாட்களில் போரை முடித்துவிட்ட... மேலும் பார்க்க

"காங்கிரஸ்,தேமுதிகவுக்கு அதிக இடம் கொடுக்க முடியும்னா, எங்களுக்கு மட்டும் ஏன்.!" - பெ.சண்முகம்

தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.கதர் சட்டைகளுடன் இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்த நிலையில், தற்போ... மேலும் பார்க்க

திருமணம், ஆசைவார்த்தை கூறி மதமாற்றத்தில் ஈடுபடுத்தினால் 7 ஆண்டு சிறை: மகாராஷ்டிரா அரசு புதிய சட்டம்

பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் மதமாற்ற தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ... மேலும் பார்க்க