செய்திகள் :

`தம்பி ஆதவ், நீ எழுந்தா தான் சண்டை வருது; 8-ம் தேதி வரைக்கும் பேசாதீங்க..!'- பிரேமலதா

post image

சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ ராஜாவுக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே ஏற்பட்ட காரசார வாக்குவாதத்தைக் கண்டித்த பிரேமலதா விஜயகாந்த், "இது சட்டமன்றமா? சண்டை மன்றமா? மானியக் கோரிக்கையை தவிர எல்லா நிகழ்ச்சியும் நடக்கிறது.

அவர் பேச ஆரம்பிக்கும் வரை நன்றாக செல்கிறது. அவர் பேச ஆரம்பித்தாலே சண்டைதான்" என்று ஆதவ் அர்ஜுனாவை நோக்கி பேசினார்.

அதற்கு ஆதவ் அர்ஜுனா, "அண்ணியாருக்கும் எங்களுக்கும் பிரச்னை கிடையாது. எங்களுக்கும் விஜயகாந்த் சாரை ரொம்ப பிடிக்கும். உண்மைக்கு மாறாக பேசும் போதுதான் நாங்கள் எழுந்திருக்கிறோம்.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

எதிர்க்கட்சி என்பது தீப்பெட்டி போன்றது. அதை பற்றவைத்து பால் காய்ச்சினால் அமைதியாக இருப்போம். கேஸை பிடுங்கிவிட்டு பற்ற வைத்தால் வெடிக்கும்" என்றார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், "நான் தம்பி ஆதவ் அர்ஜுனாவிடம் நேரடியாகவே சொல்லிவிட்டேன். 'தம்பி நீ எழுந்தா தான் சண்டை வருது' என்று... செப்டம்பர் 8 ஆம் தேதி வரை பேசாதீர்கள்.

சட்டமன்றம் நல்லபடியாகப் போய் கொண்டிருக்கும். ஆனால் ஆதவ் அர்ஜுனா எழுந்தால் சட்டமன்றம் 4 மணி நேரம் சண்டையில் போய்விடுகிறது. நேரம் வீணாகிறது.

உங்களுக்கு தனிப்பட்ட கருத்துகள் இருந்தால் பொதுக்கூட்டத்தில் பேசுங்கள். இல்லையென்றால் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுங்கள். சட்டமன்றத்தில் பேசாதீர்கள்.

சபாநாயகரிடமும் கூறிவிட்டேன் இனி ஆதவ் அர்ஜுனாவுக்கு வாய்ப்பு கொடுக்காதீர்கள் என்று... ஆதவ் அர்ஜுனா பேசட்டும், அவருக்கு எதிராக நான் இல்லை. நீங்கள் (தவெகவினர்) உங்கள் கருத்தை சொல்லுங்கள். அவர்கள் (திமுகவினர்) கருத்தை அவர்கள் சொல்லட்டும். விவாதம் எல்லாம் முடித்துவிட்டு மக்கள் பிரச்னைக்கு வந்துவிடுங்கள்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

தொடர்ந்து சண்டை... சண்டை... சண்டை தான். இவர்கள் அவர்களைக் குறை சொல்ல அவர்கள் இவர்களைக் குறை சொல்ல இப்படியே நடந்துக்கொண்டிருந்தால் இதற்காகவா சட்டமன்றத்திற்கு வருகிறோம். மக்கள் நம்மை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.

தொகுதிப் பற்றி நாம் என்ன பேசுகிறோம் என்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சட்டமன்றத்தில் தொகுதி எம்எல்ஏக்கள் தொகுதிக்காக எதுவும் பேச மாட்டார்கள் என கவலைப்படுகிறார்கள்" என்று பேசியிருக்கிறார்.

'விமர்சித்த உதயநிதி; மாலையில் திடீரென அவைக்குள் வந்த முதல்வர் விஜய்!' - பின்னணி என்ன?

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வரும் நிலையில், முதல்வர் விஜய் திடீரென மாலை நேரத்தில் அவைக்குள் வந்து செங்கோட்டையன் அருகே அமர்ந்து அமைச்சர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். அவைக்... மேலும் பார்க்க

`அரசுக்கு திமுக பஞ்சபாண்டவர்களாக துணை நிற்கும்!' – புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம்

புதுச்சேரி சட்டப்பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், ``மாநில அந்தஸ்துக்காக அரசு குரல் கொடுக்கும்போது, பஞ்சபாண்டவர்கள் போல தி.மு.க எப்போத... மேலும் பார்க்க

`சட்டமன்றம் தனிநபர் மோதல்கள் நிறைந்த 'டிராமா மன்றமாக' மாறிவிடக் கூடாது!' - அண்ணாமலை

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “சீன அரசின் அனுமதி பெற்று நேபாளம் வழியாக கைலா... மேலும் பார்க்க

'இது சட்டமன்றமா... இல்ல சண்டை மன்றமா?' - திடீரென கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவின் சட்டமன்ற உறுப்பினரான பிரேமலதா அவையில் திடீரென, 'இது சட்டமன்றமா இல்லை சண்டை மன்றமா...' என கொந்தளித்திருக்கிறார்.சட்டமன்றம்சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து கொண்டிருக்கிறத... மேலும் பார்க்க

``மோடி அரசின் பிடிவாதத்திற்குப் பிஞ்சுக் குழந்தைகளின் கல்வியைப் பணயம் வைப்பதா?" - மாணிக்கம் தாகூர்

மத்திய அரசு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியை நிறுத்திவைத்து பிளாக்மெயில் செய்வதாக காங்கிரஸ் தலைவரும், எம்.பி-யுமான மாணிக்கம் தாகூர் விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும்... மேலும் பார்க்க

``இமயமலை பிராந்தியம் ஆபத்தான பகுதி; இந்தியா, சீனா, நேபாளம் இணைந்து செயல்பட வேண்டும்"- நேபாள அமைச்சர்

இதுவரையில் கிடைத்துள்ள தகவல்களின்படி, நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தபட்சம் 160 பேர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அதில் 133 பேர் இந்தியர்கள். நேற்று நடந்த இந்தச... மேலும் பார்க்க