செய்திகள் :

``இமயமலை பிராந்தியம் ஆபத்தான பகுதி; இந்தியா, சீனா, நேபாளம் இணைந்து செயல்பட வேண்டும்"- நேபாள அமைச்சர்

post image

இதுவரையில் கிடைத்துள்ள தகவல்களின்படி, நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தபட்சம் 160 பேர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அதில் 133 பேர் இந்தியர்கள்.

நேற்று நடந்த இந்தச் சம்பவம் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க, இந்தியா, சீனா, நேபாளம் மற்றும் பூட்டான் இணைந்து செயல்பட வேண்டும் என்று நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிஷிர் கனால் NDTV உச்சிமாநாட்டில் இன்று பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது...

“இமயமலையில் உருகுவது கடலின் நீர்மட்டத்தை உயர்த்துகிறது. நேற்றைய தினம் நமது கண்ணெதிரே நேரலையாக நாம் கண்டதும் அதைத்தான்.

இமய மலை
இமய மலை

சீனா, நேபாளம், இந்தியா, பூட்டான் என நாம் அனைவரும் சூழலியலால் ஒன்றுபட்டிருக்கிறோம். நமது கூட்டு வாழ்வும் எதிர்காலமும் இந்த இமயமலைச் சூழலியலைப் பாதுகாப்பதில்தான் அடங்கியுள்ளது. எனவே நாம் ஒன்றிணைய வேண்டும்.

காலநிலை மாற்றத்தைப் பொறுத்தவரையில், இமயமலைப் பிராந்தியம் மிகவும் ஆபத்தான பகுதிகளில் ஒன்றாகும்.

இந்தப் பனிப்பாறைகள் உருகி, தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அது இதுபோன்று ஒரு பேரழிவாக மாறுவதோடு மட்டுமல்லாமல், இறுதியில் நமது பிராந்தியத்தில் உள்ள சுமார் 200 கோடி மக்களின் நன்னீர் ஆதாரத்தையும் பாதிக்கும்.

எனவே, சூழலியல் ரீதியாக வரவிருக்கும் இந்த நாகரிக ஆபத்தை எதிர்கொள்ள நாம் அனைவரும் எப்படி ஒன்றுபடப் போகிறோம், எப்படி ஒன்றிணைந்து இதற்கான தீர்வைக் காணப்போகிறோம் என்பதுதான் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம்.”

``சட்டமன்றம், காழ்ப்புணர்ச்சியைத் தீர்த்து பழிவாங்கும் இடமல்ல" - சிபிஐ வீரபாண்டியன்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்தும், பதுக்கலைத் தடுக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குப் பின் செய்திய... மேலும் பார்க்க

தளபதி எக்ஸிட்; பி.டி.ஆர் என்டரி? டு `புது நட்பு?' விஜய் - மத்திய மாண்புமிகு ரகசிய சந்திப்பு| கழுகார்

சூடுபிடிக்கும் மதுரை அரசியல்!கோ.தளபதி எக்ஸிட்... பி.டி.ஆர் என்டரி..?சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிடலாம் என நினைத்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் திடீரென முடிவை மாற... மேலும் பார்க்க

முதல்வரும் அவையில் இல்லை; தலைமைச் செயலாளரும் இல்லை - சபாநாயகரிடம் ரிப்போர்ட் செய்த உதயநிதி

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. அவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து மக்கள் பிரச்னைகள் சார்ந்து பல கேள்விகளை எழுப்புகையில் துறை செயலாளர்களான அதிகாரிகள் அவைக்கே வருவதி... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என நாங்கள் பேசக் கூடாதா?" - கேட்கிறார் அமைச்சர் விக்னேஷ்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் 'கடையடைப்பு' போராட்டத்தை அறிவித்திருக்கின்றன. இந்தச் சூழலில், தமிழக மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷிடம் துறை சார்ந்த நமது கேள்விகளை முன்வைத... மேலும் பார்க்க

"மோடி, அமித் ஷா அப்பாயின்மென்ட் உடனடியாக கிடைக்க இதுதான் காரணம்.!" - சொல்கிறார் கே.எல்.சுதீஷ்

நாடாளுமன்ற மாநிலங்களவையில், தென் மாநிலங்களிலிருந்து புதிதாக பொறுப்பேற்ற எம்.பி-க்களின் வருகைப்பதிவு, கேள்விகள் மற்றும் விவாதப் பங்கேற்பு உள்ளிட்ட விஷயங்களில் முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறார் தே.... மேலும் பார்க்க

"கவிஞர்கள் ஒரு வரியை இருமுறை ஆழமாக சொல்வது வழக்கம்" - கே.என்.நேருவுக்கு விஸ்வநாதன் பதில்

சட்டமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் விஸ்வநாதன் கவிதை நடையில் பேசினார். ஒரே வார்த்தையையும், வரியையும் இருமுறை கூறி வந்தார். அப்போது, "நீங்கள் ... மேலும் பார்க்க