செய்திகள் :

"கவிஞர்கள் ஒரு வரியை இருமுறை ஆழமாக சொல்வது வழக்கம்" - கே.என்.நேருவுக்கு விஸ்வநாதன் பதில்

post image

சட்டமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் விஸ்வநாதன் கவிதை நடையில் பேசினார்.

ஒரே வார்த்தையையும், வரியையும் இருமுறை கூறி வந்தார். அப்போது, "நீங்கள் எவ்வளவு பெரிய கவிஞராக இருக்கலாம், ஆனால் இப்படி ஒரே வார்த்தையை இரண்டு முறை கூறினால் உறுப்பினர்கள் எப்போது பேரவையில் இருந்து கிளம்புவது?" என்று கே.என்.நேரு கேள்வி எழுப்பினார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன.

கே.என்.நேரு
கே.என்.நேரு

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஸ்வநாதனிடம் கே.என்.நேரு கேள்வி எழுப்பியது குறித்து கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், "பொதுவாக தமிழில் கவிஞர்கள் ஒரு வரியை இரண்டு முறை ஆழமாக சொல்வது என்பது வழக்கம். அது மரபும் கூட.

கவிஞர் வாலியில் இருந்து கண்ணதாசன் வரை பல கவிஞர்கள் அந்த ஓரடி கவிதையை இரண்டு முறை உச்சரிப்பது என்பது வழக்கம். ஆனால் நான் கவிஞர் அல்ல.

சட்டமன்றத்தில் படிக்கும்போது அதை நான் முன்மொழிந்தேன் அவ்வளவுதான்.

அண்ணன் கே.என் நேருவுக்கு ஒரு வகையில் அது பிரச்னையாகத் தோன்றுகிறது.

அமைச்சர் விஸ்வநாதன்
அமைச்சர் விஸ்வநாதன்

அதனால் சட்டமன்றத்தில் அவர் கேள்வி எழுப்பினார். ஆனால் எங்களுக்கு அது ஒரு பிரச்னையாகத் தோன்றவில்லை.

நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதை சட்டமன்றத்தில் சொல்கிறோம்" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

"தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என நாங்கள் பேசக் கூடாதா?" - கேட்கிறார் அமைச்சர் விக்னேஷ்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் 'கடையடைப்பு' போராட்டத்தை அறிவித்திருக்கின்றன. இந்தச் சூழலில், தமிழக மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷிடம் துறை சார்ந்த நமது கேள்விகளை முன்வைத... மேலும் பார்க்க

"மோடி, அமித் ஷா அப்பாயின்மென்ட் உடனடியாக கிடைக்க இதுதான் காரணம்.!" - சொல்கிறார் கே.எல்.சுதீஷ்

நாடாளுமன்ற மாநிலங்களவையில், தென் மாநிலங்களிலிருந்து புதிதாக பொறுப்பேற்ற எம்.பி-க்களின் வருகைப்பதிவு, கேள்விகள் மற்றும் விவாதப் பங்கேற்பு உள்ளிட்ட விஷயங்களில் முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறார் தே.... மேலும் பார்க்க

"தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுங்கள்; முதலமைச்சர் விளக்கம் வேண்டும்!" - பெ.சண்முகம் கடிதம்

இடதுசாரி அமைப்புகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுத்து நிறுத்த அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அந்தச் சுற்றறிக்கைக்க... மேலும் பார்க்க

நேபாளம்: "ஈஷாவில் இருந்து யாத்திரை சென்றவர்களையும் காணவில்லை; அவர்களை மீட்க தயார்" - ஜக்கி வாசுதேவ்

நேற்று நேபாளத்தில் வெள்ளம் ஏற்பட்டு, அதில் குறைந்தபட்சம் 160 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 133 இந்தியர்கள் மாயமாகியுள்ளனர். கோவை ஈஷா மையத்தைச் சேர்ந்த குழு ஒன்றும் நேபாளத்திற்குச் சென... மேலும் பார்க்க

Iran: "மொஜ்தபா காமேனி இறந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை; ஆனால்.." - ட்ரம்ப் சொல்வது என்ன?

அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில், பிப்ரவரி 28-ம் தேதி, ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்தார். இதன் பிறகு, அவருடைய மகன் மொஜ்தபா காமேனி ஈரானின் அடுத்த உச்சத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட... மேலும் பார்க்க