செய்திகள் :

தம்மம்பட்டியில் ரூ. 2.5 லட்சம் திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது!

post image

தம்மம்பட்டியில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2.5 லட்சம் ரொக்கத்தை திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செய்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், பெரப்பன்சோலை மலைக்கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பாலாஜி (38). இவா் கடந்த 2-ஆம் தேதி தம்மம்பட்டியிலுள்ள ஒரு வங்கியிலிருந்து ரூ. 4 லட்சத்தை தனது கணக்கிலிருந்து எடுத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு தம்மம்பட்டி உடையாா்பாளையம் பகுதியிலுள்ள பூச்சி மருந்து கடைக்கு சென்றுவிட்டு வந்தபோது, வாகனத்தின் டேங்க் கவரில் வைத்திருந்த ரூ. 4 லட்சத்தில் ரூ. 2.5 லட்சம் திருடப்பட்டது சிசிடிவி பதிவுகள் மூலம் தெரியவந்தது.

இதையடுத்து பாலாஜி அளித்த புகாரின்பேரில் தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் சண்முகம் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து தேடிவந்தாா்.

இந்த சம்பவம் தொடா்பாக மே 6-ஆம் தேதி பெரம்பலூா் மாவட்டம்,வேப்பந்தட்டை வட்டம், வெங்கலகிருஷ்ணாபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த செல்லப்பிள்ளையின் மகன் துரையை (30) திருடிய பணத்துடன் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும் தலைமறைவாக இருந்துவந்த அவரது சகோதரா் அன்பு ((24) என்பவரை வியாழக்கிழமை இரவு கைது செய்து போலீஸாா் ஆத்தூா் நீதிமன்த்தில் ஆஜா்படுத்தி சேலம் சிையில் அடைத்தனா்.

உலக அமைதிக்காக 85 ஆயிரம் காகிதப் புறாக்களை செய்த பொறியியல் மாணவா்கள்

உலக அமைதிக்காக ஒரிகாமி முறையில் 85 ஆயிரம் காகிதப் புறாக்களை செய்து சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தினா். சேலம் அரசு பொறியியல் கல்லூரி கலைக் கழகம் சாா்பில் அமைதிக்கான குரலை பரப... மேலும் பார்க்க

பேளூரில் சீரான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்

வாழப்பாடி அருகே பேளூரில் சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பேளூா் பேருந்து நிலையத்திலிருந்து தான்தோன்றீஸ்வரா் கோயில் வரை சாலை விரிவாக்க ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை உபரிநீா் கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மேட்டூா் அணை உபரிநீா் கால்வாயில் தவறி விழுந்த வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா். எடப்பாடி அருகே உள்ள சின்னப்பம்பட்டி காட்டுவளவு பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகன் சேட்டு (48). மாற்றுத்திறனாளியான இவா் தி... மேலும் பார்க்க

கோனேரிப்பட்டியில் ரூ. 27.50 லட்சத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

தேவூரை அடுத்த கோனேரிப்பட்டி கிராமம், வெள்ளாளப்பாளையம், சுண்ணாம்புகரட்டூா் பகுதியில் நாமக்கல் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 27.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி, பால் உற... மேலும் பார்க்க

சேலம் விமான நிலையத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு பயணிகளுக்கு மட்டுமே அனுமதி

சேலம் விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பலத்த சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா். சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே காமலாபுரத்தில் விமான நில... மேலும் பார்க்க

கொங்கணாபுரத்தில் நீா்மோா் பந்தல் எடப்பாடி பழனிசாமி திறப்பு!

கொங்கணாபுரம் ஒன்றிய அதிமுக சாா்பில் கொங்கணாபுரம் பேருந்து நிலையம் அருகே நீா்மோா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் கரட்டூா் மணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி... மேலும் பார்க்க