செய்திகள் :

தாக்கி வீடியோ எடுத்து மிரட்டல்; தற்கொலை செய்த அதிகாரி: பஞ்சாப் அமைச்சர் லால்ஜித் சிங் ராஜினாமா!

post image

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் மாநில அரசு கிடங்கில் மாவட்ட மேலாளராக இருந்த ககன்தீப் சிங் நேற்று முன் தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் அமைச்சர் லால்ஜித் சிங் அச்சுறுத்தியதால் நான் விஷம் குடித்துவிட்டேன். இனி நான் பிழைக்கமாட்டேன் என்று அதில் ககன்தீப் குறிப்பிட்டு இருந்தார்.

இத்தற்கொலை குறித்து ஆரம்பத்தில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. நேற்று இரவு அமிர்தசரஸில் உள்ள ரஞ்சித் அவென்யூ காவல் நிலையத்தில் அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர், அவரது தந்தை மற்றும் உதவியாளர் தில்பாக் சிங் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வீடியோ வெளியானது மற்றும் ககன்தீப் தற்கொலை செய்ததை தொடர்ந்து முதல்வர் பகவந்த் மான் அமைச்சர் லால்ஜித் சிங்கை அழைத்து இது குறித்து விசாரித்தார். மேலும் இப்பிரச்னை நியாயமான முறையில் விசாரிக்கப்பட வேண்டியிருப்பதால் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொண்டார். உடனே அமைச்சர் லால்ஜித் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இது குறித்து நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில், அமைச்சர் லால்ஜித் சிங் தனது தந்தை சுக்தேவ் சிங் புல்லருக்கு ஒரு கிடங்கு டெண்டரை ஒதுக்குமாறு ககன்தீப்பிற்கு லால்ஜித் சிங் அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு ககன்தீப் ஒப்புக்கொள்ளவில்லை.

இதையடுத்து கடந்த 13ம் தேதி அமைச்சரின் இல்லத்திற்கு ககன்தீப் வரவழைக்கப்பட்டு, அங்கு அவர் தாக்கப்பட்டதாகவும், துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக"பொய் ஒப்புதல் வாக்குமூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டதாகவும் ககன்தீப் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.ஆனால் இக்குற்றச்சாட்டை லால்ஜித் சிங் மறுத்துள்ளார். நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு தன் மீதான குற்றச்சாட்டு அடிப்படையற்றது மற்றும் பொய்யானது என்று குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,''எங்கள் கட்சி எப்போதும் உண்மைக்கு ஆதரவாக நிற்கிறது. நியாயமான விசாரணையை உறுதி செய்வதில் எனது பதவி தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக எனது ராஜினாமாவை ஏற்குமாறு எனது கட்சியையும் முதல்வரையும் கேட்டுக்கொள்கிறேன். உண்மை வெளிவர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று அவர் கூறினார். ஆனால் இவ்வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் பர்தாப் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "லால்ஜித் சிங் மீது கொலை வழக்கு பதிவு செய்து லால்ஜித் சிங் புல்லரை கைது செய்ய வேண்டும். இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

`நீங்கள் வராவிட்டால் விற்று இருப்பார்கள்'- ஐஏஎஸ் அதிகாரி என கூறி திருமணம்செய்து பெண்ணை விற்க முயற்சி

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் தனது மகளுக்கு மணமகன் தேடிக்கொண்டிருந்தார். அவரிடம் எட்டாவா நகரை சேர்ந்த பிரித்தம்குமார் என்பவர் பெண் கேட்டு வந்தார். பிரித்தம்குமார் தன்ன... மேலும் பார்க்க

பேஸ்புக்கில் மனைவி வெளியிட்ட சிமென்ட், டிரம் பதிவு; மனைவியை காதலனுடன் அனுப்பிய கணவன்- உ.பி அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் முஸ்கான் என்ற பெண் கடந்த ஆண்டு தனது கணவனை காதலன் துணையோடு கொலைசெய்து ஊதா கலர் டிரம்மில் போட்டு சிமென்ட்டால் நிரப்பிய சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத... மேலும் பார்க்க

சேற்றுத்தண்ணீரில் மிதந்தபடி ப்ரீ வெடிங் போட்டோஷூட்; `இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்' நெட்டிசன்கள் ட்ரோல்

திருமணத்திற்கு முன்பு அல்லது திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் புகைப்படக் கலைஞரை வரவழைத்து விதவிதமாக புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம். இது போன்று புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு தம்பதி செய்த காரியம் இ... மேலும் பார்க்க

திடீர் `மர்ம' ட்ரோன்களால் பரபரப்பு: வாஷிங்டன் ராணுவ தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்த திட்டமா?

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது மட்டும் தாக்குதல் நடத்துகின்றன. ஆனால் ஈரான் அண்டை நாட... மேலும் பார்க்க

தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்துக்கள் : போராடி ஏலத்தில் விற்பனை செய்து முடித்த மத்திய அரசு!

மும்பையில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய தாவூத் இப்ராகிம் இப்போது தனது குடும்பத்துடன் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான். அவனுக்கும், அவனது குடும்பத்திற்கும் மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் ரத்னகி... மேலும் பார்க்க