செய்திகள் :

"திமுக, அதிமுக இணைவதில் எங்களுக்கு பிரச்னை இல்லை" - மு.வீரபாண்டியன் சொல்லும் காரணம் என்ன?

post image

நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் 'மார்க்ஸ் மாமணி விருது' விருதை பெற்றார்.

அதன் பிறகு, அந்த விழாவில் அவர் பேசியதாவது...

"தமிழக அரசியல் சூழலில், யாரும் எதிர்பாராத சூழலில் தவெக வெற்றி பெற்றபோது, அவர்கள் ஆட்சி அமைக்க இடதுசாரிகளையும் விடுதலை சிறுத்தைகளையும் அணுகினார்கள்.

திமுக, அதிமுக இணைவதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவை ஜனநாயக இயக்கங்கள்.

எனவே அவை எப்போது வேண்டுமானாலும் இணையலாம் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.

திருமாவளவன் - மு.வீரபாண்டியன்
திருமாவளவன் - மு.வீரபாண்டியன்

திமுக அல்லது அதிமுக ஆட்சி அமைக்க வாய்ப்பில்லாத சூழலில், ஒரு ஜனநாயக சக்திக்கான வாய்ப்பை நாம் மறுத்துவிட்டால், அது ஆளுநர் போன்றவர்கள் மக்கள் அதிகாரத்தின் மீது அமர்வதற்கு வழிவகுத்துவிடும் என்கிற வரலாற்றுப் பழியைத் தவிர்க்கவே ஆழமாக விவாதித்து இந்த அரசியல் முடிவை எடுத்தோம்.

மக்கள் முன்மொழிந்ததை நாங்கள் வழிமொழிந்திருக்கிறோம். இதில் தனிப்பட்ட நிபந்தனை என்று எதுவுமில்லை, முழுக்க முழுக்க இது அரசியலாக எடுக்கப்பட்ட முடிவு.

ஆளுநர் காய் நகர்த்துவதைத் தடுத்து, ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

எங்கள் ஆதரவிற்கு நிபந்தனை என்று ஒன்று இருக்குமானால், அது மதச்சார்பின்மை மட்டுமே.

இந்தியாவைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் மதச்சார்பின்மையே அடிப்படை.

அதைச் சிதைக்கப் பார்க்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தான் எங்கள் முதன்மையான அரசியல் பகை.

அவர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதே எங்களின் கடும் முயற்சி.

ஜனநாயகத்தில் வெற்றியையும் தோல்வியையும் சமமாக மதிக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் கூறியுள்ளார். வெற்றி பெற்றவர்கள் தோல்வியுற்றவர்களை எள்ளி நகையாடக் கூடாது".

Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தி.மு.க கவனம் செலுத்திவரும் நிலையில், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், அறிவாலய வட்டாரங்களில் நாமும் விசாரித்... மேலும் பார்க்க

’ஓமந்தூர் ராமசாமி முதல் விஜய் வரை’ - முதல்வர்கள் போட்டோ பிரச்னைக்கு கோவை மாநகராட்சியில் நூதன தீர்வு!

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது. மேயர்ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா,துணைமேயர்வெற்றிச்... மேலும் பார்க்க

கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது.மேயர்ரங்கநாயகிதலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?" - அப்பாவு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்ச... மேலும் பார்க்க

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. 'World Leaks' என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோட... மேலும் பார்க்க