செய்திகள் :

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு 2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகள்! - விரைவில் டெண்டர்

post image

தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 2,000 மின்சார ஏசி பேருந்துகளை வாங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் நடைமுறைகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்துத் துறையின் வருவாயை அதிகரிப்பதற்கும், பயணிகளுக்கு தரமான மற்றும் நவீன வசதிகளை வழங்குவதற்கும் பல்வேறு செயல்திட்டங்களை தமிழக அரசு கட்டம் கட்டமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பொதுமக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து சேவையை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மின்சார ஏசி பேருந்துகள்
மின்சார ஏசி பேருந்துகள்

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் பார்த்திபன், “ஏசி பேருந்துகளில் பயணம் செய்வது என்பது உயர்ந்த வருமானம் கொண்டவர்களுக்கு மட்டுமே என்ற நிலையை மாற்ற வேண்டும். சாதாரண பொதுமக்களும் ஏசி பேருந்துகளில் பயணம் செய்யும் வசதியை உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அடுத்த மூன்று மாதங்களுக்குள் 2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக விரைவில் டெண்டர் கோரப்படும் என கூறப்படுகிறது.

மின்சார ஏசி பேருந்துகள்
மின்சார ஏசி பேருந்துகள்

புதிய பேருந்துகள் முதற்கட்டமாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையேயான வழித்தடங்களில் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள வழித்தடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மின்சார பேருந்துகள் இயக்கப்படுவதன் மூலம் எரிபொருள் செலவைக் குறைப்பதுடன், கார்பன் உமிழ்வையும் கணிசமாகக் கட்டுப்படுத்த முடியும். மேலும், பராமரிப்பு செலவுகளும் குறைவாக இருக்கும் என்பதால், நீண்ட கால அடிப்படையில் போக்குவரத்து கழகங்களின் நிதி நிலை மேம்பட உதவும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே பல நகரங்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 2,000 புதிய ஏசி மின்சார பேருந்துகளை இணைக்கும் திட்டம், மாநில பொதுப் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய விரிவாக்க நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.!

த.வெ.க. MLA-க்கள் பேர விவகாரம்: செந்தில் பாலாஜி, அசோக் குமார் ஆஜராகவில்லை! - FIRல் அதிர்ச்சி தகவல்?

த.வெ.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி அரசைக் கவிழ்க்க முயற்சித்ததாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகவில... மேலும் பார்க்க

'ஏவுகணைகளை தாருங்கள்; கிடங்குகளில் இருப்பதால் பயன் இல்லை' - உலக நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி கோரிக்கை

ரஷ்யா, உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இன்று (ஜூலை 6, 2026) காலை ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளது. இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் படி, அந்தத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்திரு... மேலும் பார்க்க

’தவெக அரசின் குளறுபடிகளால் நீதித்துறை ஸ்தம்பித்துள்ளது!’ – அதிமுக வழக்கறிஞர் குற்றச்சாட்டு

புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக கோவையை சேர்ந்த அ.தி.மு.க வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “த.வெ.க. அரசினால் நீதித்துறையின் நிர்வாக செயல்பாடுகள... மேலும் பார்க்க

'இந்தியாவில் இஸ்ரேலுக்கு எவ்வளவு பிரமாண்ட ஆதரவு இருக்கிறது தெரியுமா?' - நெதன்யாகு என்ன சொல்கிறார்?

வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், 'இஸ்ரேலுக்கு அமெரிக்காவை தவிர சக்தி வாய்ந்த கூட்டாளி யாரும் இல்லை' என்று பேசியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, Fox... மேலும் பார்க்க