செய்திகள் :

"திமுக-வை எதிர்க்கும் கட்சிகள் எல்லாம் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள்" - ஜி.கே.வாசன் ஆருடம்

post image

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் கொள்முதல் நிலையங்கள் முறையாக இயங்காததால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். கொள்முதல் நிலையங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை.

விவசாயிகள் வயிற்றில் அடித்த அரசு வென்றதாகச் சரித்திரம் கிடையாது. எஸ்.ஐ.ஆர் தொடர்பாக தி.மு.க கூறும் கருத்துக்களை வாக்காளர்களே ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தி.மு.க, தோல்வி பயம் காரணமாகத்தான் எஸ்.ஐ.ஆரை எதிர்க்கின்றனர். பீகாரில் என்.டி.ஏ ஆட்சி மீண்டும் மலர பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

தமிழக சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாகவே உள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறிக்கொண்டுள்ளதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

கோவையில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். காரணம், போதைப்பொருள்தான். போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

எஸ்.ஐ.ஆர் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிகார வர்க்கத்திற்குப் பயந்துதான் தி.மு.க கூட்டணி கட்சிகள் பங்கேற்றன. தேர்தல் பயத்தின் காரணமாக தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.

வெற்றி பெறும் மாநிலத்திற்கு ஒரு சட்டம், தோல்வி அடையும் மாநிலத்திற்கு ஒரு சட்டம் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அது, நடக்காது. பீகாரில் 60 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள் என்பதை எதிர்க்கட்சிகள் தான் கூறின.

தேர்தல் ஆணையம் கூறவில்லை. பா.ஜ.க - அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் இணைந்து தேர்தலில் வெற்றி பெற வியூகத்தை வகுத்து வருகிறார்கள்.

தி.மு.க-வை எதிர்க்கும் கட்சிகள் எல்லாம் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள். தற்போதைய சூழலில் எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாய் உள்ளது" என்றார்.

நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் ஆவாரா? பரபர பீகார் தேர்தல்

லாலுவின் வீழ்ச்சியும் நிதிஷின் எழுச்சியும்!பீகாரில் 1952 முதல் 1967 வரை காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் அந்தக் கட்சியில் ஆதிக்க சாதியினருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதாகச் சர்ச்சை ... மேலும் பார்க்க

`போலீஸை பொருட்படுத்தாமல் அடிதடி' - பா.ம.க, எம்.எல்.ஏ அருள் மீது அன்புமணி தரப்பினர் தாக்குதல்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வடுகம்பட்டி பகுதியில் கட்சியின் நிர்வாகி துக்க நிகழ்விற்கு, சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்று கலந்து கொ... மேலும் பார்க்க

பீகார் தேர்தல்: 32% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு; 40% பேர் கோடீஸ்வரர்கள்! | Report

பீகார் சட்டமன்றத்திற்கு வரும் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்க... மேலும் பார்க்க

SIR: ``நிச்சயமாக தமிழகத்தில் குறிப்பிட்ட சதவிகித வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள்" - தமிழிசை விளக்கம்!

தோ்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழிசை செளந்தரராஜன் ‘வாக்காளரின் வலிமை’ என்ற புத்தகத்தை எழு... மேலும் பார்க்க

பொன்முடிக்கு மீண்டும் துணை பொதுச்செயலாளர் பதவி; ம.செ ஆகிறார் கதிர் ஆனந்த்!

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இன்று திமுக தலைமைக் கழக பதவி நியமன அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் படி, முன்னாள் அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு செய... மேலும் பார்க்க

கோவை மாணவி பாலியல் குற்ற வழக்கு: 'எந்தக் கடுஞ்சொல்லும் போதாது'- முதல்வர் ஸ்டாலின்

கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 20 வயதான கல்லூரி மாணவியை, 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் தலைவர்கள் பலரும் இந்தச் சம்பவத்... மேலும் பார்க்க