செய்திகள் :

திருச்சி: 'கஞ்சா அடிக்கப் போறீங்களா?' - அதட்டிய இருவர்; விரட்டி விரட்டி வெட்டிய இளைஞர்கள்!

post image

திருச்சி மாநகரம், கொட்டப்பட்டு பகுதியில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி நாகராஜ் என்பவரின் வீட்டின் அருகில் ஜஃப்ரான், ரோஹித், மெல்வின் மோகன் ஆகிய மூவரும் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டு இருந்துள்ளனர். இதனை நாகராஜ், அவருடைய நண்பர் ஜெகன் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது இருவரும், `கஞ்சா அடிக்கப் போறீங்களா?' எனக் கேட்டுள்ளனர்.

accused

இதில், இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நாகராஜ், ஜெகன் ஆகிய இருவரும் சேர்ந்து ஜஃப்ரான், ரோஹித், மெல்வின் மோகன் ஆகியோரைத் தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மூவரும் அரிவாளை எடுத்துக்கொண்டு சென்று நாகராஜ், ஜெகன் ஆகிய இருவரை வெட்டியுள்ளனர்.

இதில், பலத்த காயமடைந்த நாகராஜ் மற்றும் ஜெகன் ஆகிய இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து ஏர்போர்ட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மாநகரில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

accused

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலக்கரை பகுதியில் கஞ்சா புகைப்பதை தட்டிக் கேட்ட பாலாஜி என்பவரை கஞ்சா கும்பல் தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த பாலாஜி, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில், கஞ்சா விவகாரத்தில் மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது, பொதுமக்களுக்கிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த முகமது ஜஃப்ரான் (19) , ரோகித் ஜான் (22), மெல்வின் மோகன் (20), ரஞ்சிதபுரம் பகுதியைச் சேர்ந்த ஷாருக் கான் (20) ஆகிய நான்கு பேரை பொன்மலை காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், இந்த மோதலின் போது ஷாருக் கான் என்பவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

'விவாகரத்தானவர் எனத் தெரிந்ததால்...' - காதலை முறித்த மாணவி; குத்திக்கொன்ற காதலனின் சகோதரர்

பெங்களூரைச் சேர்ந்த அமிர்தா என்ற சட்டக்கல்லூரி மாணவி தனுஷ் என்பவருடன் காதலில் இருந்துள்ளார். தனுஷ் தனக்கு ஏற்கனவே விவாகரத்தானதையும், தனக்கு ஒரு குழந்தை இருப்பதையும் மறைத்து காதலித்து வந்தார். ஆனால் இத... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: ரூ.70,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ கைது - அதிர்ச்சி பின்னணி!

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவரது கணவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம், இரு சக்கர வாகனத்தை அடமானமாக வைத்து பணம் பெற்றுள்ளார். இத... மேலும் பார்க்க

அமைச்சர்கள் வழங்கிய உதவியை பெற மறுத்த சபரிவர்மன் குடும்பத்தினர்; மரண சந்தேகங்களை தீர்க்க கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு, நாராயணன்புதூரை சேர்ந்த சபரிவர்மன் (35) சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மாற்றுத்திற... மேலும் பார்க்க

Lockup Death: ரூ.192 மதிப்புள்ள குட்காவுக்காக நடந்த கைது; சிறையில் நடந்த கொடூரம் - FIR விவரம்!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன்(35) வீட்டுக்கு அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்ததாக கடந்த 9-ம் தேதி தென் தாமரைக்குள... மேலும் பார்க்க

சென்னை: ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் - டிராவல்ஸ் அதிபர் சிக்கிய பின்னணி!

சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி 15.7.2026-ம் தேதி திருவல்லிக்கேணி, தசூதீன்கான் தெருவில் உள்ள லாட்ஜிக்கு தனிப்படை போலீஸா... மேலும் பார்க்க

சென்னை: குட்கா வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு - காவல் நிலையம் முற்றுகை

சென்னை சேலையூர், ஜானகிராமன் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (44). இவர் மீது சேலையூர் போலீஸார் குட்கா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பாலாஜியின் கூட்டாளியான ராமநாதன் என்பவரும் கைது செய்ய... மேலும் பார்க்க