செய்திகள் :

`டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு; இனியும் ரூ.10 கூடுதலாகப் பெற்றால்..!' - அமைச்சர் விக்னேஷ்

post image

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் விலைக்கு மேல் ரூ.10 பெறப்படுவதாக கடந்த திமுக ஆட்சியிலிருந்து குற்றச்சாட்டு தொடர்கிறது. தவெக அரசு ஆட்சிப்பொறுப்பேற்றதும் இந்த நடைமுறை நிறுத்தப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், இன்றளவும் பாட்டிலுக்கு ரூ.10 பெறுவது தொடர்கதையாகியிருக்கிறது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர் , ``தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு 25 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்படும். இதுவரை டாஸ்மாக் வரலாற்றிலேயே இந்த அளவுக்கு ஒரே நேரத்தில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டதில்லை. இதன் மூலம் ஊழியர்களுக்கு மாதம் ரூ.3,500 முதல் ரூ.5,000 வரை கூடுதல் ஊதியம் கிடைக்கும்.

டாஸ்மாக் கடை

இந்த ஊதிய உயர்வின் காரணமாக அரசுக்கு கூடுதலாக 110.74 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். மொத்தமாக டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியத்திற்காக 553.72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஊதிய உயர்வு அடுத்த மாதங்களில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.

ஊதிய உயர்வு மட்டுமன்றி, டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ளும் வகையில், கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இ.எஸ்.ஐ (ESI) மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வழங்க முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், ஊழியர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், மதுபானப் பெட்டிகளை இறக்குவதற்கு ஆகும் போக்குவரத்துச் செலவுகளைத் துறையே ஏற்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மின்சாரக் கட்டணம் மற்றும் கடை வாடகை தொடர்பான சிக்கல்களும் விரைவில் முறைப்படுத்தப்படும்.

அமைச்சர் விக்னேஷ்

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்களுக்கு, இந்த ஊதிய உயர்வு மற்றும் சலுகைகள் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஊழியர்களின் நியாயமான தேவைகளை அரசு நிறைவேற்றியுள்ளதால், இனி நுகர்வோரிடம் கூடுதல் பணம் வசூலிப்பதை ஏற்க முடியாது. இதுவரை கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில் 30 முதல் 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இனிமேலும் இந்த விதிமீறல் தொடர்ந்தால், பணியிடை நீக்கத்தைத் தாண்டி பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இதற்கு கடை ஊழியர்கள் மட்டுமன்றி மாவட்ட மேலாளர்களும் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த ஊதிய உயர்வால் மதுபானங்களின் விலை உயர்த்தப்படாது. 21 வயதுக்கு உட்பட்டவர்களை பப்கள் (Pubs) மற்றும் எஃப்.எல்.3 (FL3) உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்களுக்குள் அனுமதித்தால், அந்த நிறுவனங்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்." எனத் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் அதிகரிக்கும் வேலையின்மை... என்ன செய்யப்போகிறது அரசு?

கல்வி தொடங்கி சுகாதாரம் வரைக்கும் வளர்ச்சிப் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது, தமிழ்நாடு. இரண்டு இலக்க விகிதத்தில் வளர்ச்சியை எட்டும் மாநிலம் என்ற பெருமையும் தமிழ்நாட்டுக்கு இருக்கிறது. இத்தனை பெருமி... மேலும் பார்க்க

அரசு வழக்கறிஞர் நியமன விவகாரம்: "நேர்மையாக நடந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்" - நீதிபதிகள் கருத்து

மதுரை மனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதற்கான ந... மேலும் பார்க்க

புதிய EPF திட்டம்: எதற்கெல்லாம், எத்தனை முறை பாதியில் பணம் எடுக்க முடியும்?

சமூக பாதுகாப்புச் சட்டம், 2020-ன் கீழ், புதிய 'ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம், 2026'-ஐ தற்போது அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு. இது EPF திட்டம், 1952-க்கு மாற்றாகும். இந்தப் புதிய திட்டத்த... மேலும் பார்க்க

PF: இனி ரூ.1,800-க்கு மேல் பிடித்தமாக செய்தாலும், உங்க விருப்பம் தேவை! - தெரிந்து கொள்ளுங்கள்

கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு, 'இ.பி.எஃப் திட்டம் 1952'-ஐ மாற்றி, சமூக பாதுகாப்புச் சட்டம் 2020-ன் கீழ் 'ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம் 2026'-ஐ அறிவித்துள்ளது மத்திய அரசு. புதிய திட்ட... மேலும் பார்க்க

அமெரிக்கா: `பிறப்புக் குடியுரிமை' - அதிபரின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்; ட்ரம்ப் அதிருப்தி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதும் அவர் கையெழுத்திட்ட முதன்மை கோப்புகளில் ஒன்று ``அமெரிக்காவில் சட்டவிரோதமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தங்கியிருக்கும் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு பிறப்புரி... மேலும் பார்க்க

சதுரகிரி: 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரோப் கார் சேவை திட்டம்! - நிறைவேற்றுமா புதிய அரசு?

தென் மாவட்டங்களில் பழனிக்கு அடுத்தபடியாக அமைந்துள்ள பிரசித்தி பெற்றது சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி மலைக்கோயில். மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் இந்த தலம் அமைந்துள்ளது. இத்தல... மேலும் பார்க்க