சிறுமி பாலியல் வன்கொடுமை: ``எதற்குமே பொறுப்பேற்காத இந்த தவெக அரசு..." - எம்.பி க...
திருச்சி: சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை? டிரைவரைத் தாக்கிய உறவினர்கள்! - என்ன நடந்தது?
திருச்சி மாநகரம், காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அவருடைய தோழி வீட்டிற்கு சென்றுள்ளார். அபோது, அந்தப் பகுதியில் அவருடைய தோழியின் தாயாரை சிவகங்கைக்கு அழைத்துச் செல்வதற்காக மாரி செல்வன் என்கிற கார் ஓட்டுநர் வந்துள்ளார். இந்த நிலையில், மாரிசெல்வன் இரவு நேரத்தில் அந்த 14 வயது சிறுமியைத் தனியாகப் பேசி அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அந்த சிறுமி கீரை கடை பகுதியில் மதுபோதையில் சுய நினைவின்றி கிடந்துள்ளார். இதைப் பார்த்த பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் வந்த போலீஸார் அந்தச் சிறுமியை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடைய, அந்தச் சிறுமியின் உறவினர்கள் இது குறித்து அப்பகுதியில் விசாரித்ததில் மாரி செல்வன் அந்தச் சிறுமியை அழைத்துச் சென்றது தெரிய வந்தது. அவர் சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து அவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி உள்ளார் எனக் குற்றம்சாட்டி மாரி செல்வனை அவருடைய உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், மாரிச்செல்வன் காயமடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் மாரி செல்வனை மீட்டு அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், அந்த 14 வயது சிறுமியைப் பாலியல் ரீதியாக மாரி செல்வன் துன்புறுத்தி உள்ளாரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் குவிந்த இந்தச் சிறுமியின் உறவினர்கள், 'காந்தி மார்க்கெட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருக்கிறது. அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சிறுமி ஒருவருக்கு மது கொடுத்து பாலியல் கொடுமையில் ஈடுபட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
















