செய்திகள் :

திருச்சி: சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை? டிரைவரைத் தாக்கிய உறவினர்கள்! - என்ன நடந்தது?

post image

திருச்சி மாநகரம், காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அவருடைய தோழி வீட்டிற்கு சென்றுள்ளார். அபோது, அந்தப் பகுதியில் அவருடைய தோழியின் தாயாரை சிவகங்கைக்கு அழைத்துச் செல்வதற்காக மாரி செல்வன் என்கிற கார் ஓட்டுநர் வந்துள்ளார். இந்த நிலையில், மாரிசெல்வன் இரவு நேரத்தில் அந்த 14 வயது சிறுமியைத் தனியாகப் பேசி அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அந்த சிறுமி கீரை கடை பகுதியில் மதுபோதையில் சுய நினைவின்றி கிடந்துள்ளார். இதைப் பார்த்த பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் வந்த போலீஸார் அந்தச் சிறுமியை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடைய, அந்தச் சிறுமியின் உறவினர்கள் இது குறித்து அப்பகுதியில் விசாரித்ததில் மாரி செல்வன் அந்தச் சிறுமியை அழைத்துச் சென்றது தெரிய வந்தது. அவர் சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து அவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி உள்ளார் எனக் குற்றம்சாட்டி மாரி செல்வனை அவருடைய உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், மாரிச்செல்வன் காயமடைந்தார்.

trichy

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் மாரி செல்வனை மீட்டு அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், அந்த 14 வயது சிறுமியைப் பாலியல் ரீதியாக மாரி செல்வன் துன்புறுத்தி உள்ளாரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் குவிந்த இந்தச் சிறுமியின் உறவினர்கள், 'காந்தி மார்க்கெட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருக்கிறது. அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சிறுமி ஒருவருக்கு மது கொடுத்து பாலியல் கொடுமையில் ஈடுபட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருமணம் மீறிய உறவு; வீட்டுக்குள் இருந்தவர்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொன்ற மனைவி!

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம் (60). சோப்பு பவுடர் விற்பனை செய்து வந்தார். இவர் மனைவி அமுதா (50). இவர்களது மகன் சிவராஜ், மகள் சிவரஞ்சனி. இருவருக்கும் ... மேலும் பார்க்க

நெல்லை: மது போதையில் தந்தையை இரும்புக் கம்பியால் அடித்து கொன்ற மகன்! - சந்தேகம் கிளப்பும் உறவினர்கள்

நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம் பகுதியில் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி என்ற மகேஷ் (வயது 43). இவர் பணம் கொடுக்கல், வாங்கல் செய்யும் ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.அவரின் மனைவி கல்யாண... மேலும் பார்க்க

திருச்சி: மேற்கு தொகுதியில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ள இருவர் - போலீஸ் தீவிர விசாரணை

திருச்சி, பொன் நகர் புது செல்வா நகரைச் சேர்ந்தவர் சால்மன் பார்ஷ் (வயது: 37). இவர், கடந்த 17 -ம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்ள சென்னை சர்வதேச விமான நிலையம் சென்றார். அங்கு, அவரது உடமைகளை குடியேற்ற பிரி... மேலும் பார்க்க

"இயற்கை உரம் போட்டு வளர்த்தேன்"- வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்து சட்னி செய்து சாப்பிட்ட ஐடி மேலாளர்

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விஷால் (26) என்பவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் 'டெக்னோபார்க்' வளாகத்தில் உள்ள ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார். ஐடி கம்பெனி மேலாளராகப் பதவி வகிக்கும் அவர்... மேலும் பார்க்க

கேரளம்: ஆண் நண்பருடன் சென்று வந்த மனைவியை கொலைசெய்த கணவன் - சோகத்தில் முடிந்த காதல் திருமணம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(46). வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்தவர் ஹசீனா(38). வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இருவரும் 19 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திரும... மேலும் பார்க்க

91 காயங்களுடன் சிதைந்த பிஞ்சு உடல்: கேரளாவை உலுக்கிய படுகொலை - தாயின் காதலன் வெறிச்செயல்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே ஒன்றரை வயது ஆண் குழந்தை, தாயின் காதலனால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் உடலில் 91 காயங்கள் இருந்ததாக பிரேத... மேலும் பார்க்க