செய்திகள் :

திருச்சி: மோதிக்கொண்ட இருச்சக்கர வாகனங்கள்; பலியான காவல்துறை உதவி ஆய்வாளர்; என்ன நடந்தது?

post image

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பெல் மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவன கே செட்டார் குடியிருப்பைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது: 55).

இவர், 1995-ம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்தவர். பிறகு, படிப்படியாக உயர்ந்து தற்பொழுது துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். தட்சிணாமூர்த்தி தற்போது மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றபோது இந்திரா நகரில் இருந்து பூலாங்குடி நோக்கி வந்த இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் தட்சிணாமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதில், துவாக்குடி எம்.டி சாலையைச் சேர்ந்த துரை மகன் அன்பரசன் (வயது 22), ரவி மகன் மூர்த்தி (வயது 21) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.

trichy
trichy

இது குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெல் காவல் நிலைய போலீஸார் தட்சிணாமூர்த்தியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வு செய்வதற்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இருசக்கர வாகனம் மோதி காயம் அடைந்த இரண்டு பேரையும் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் சிக்கி காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Keralam: மூழ்கிய கப்பலில் கால்சியம் கார்பைடு; கடலோர மக்களுக்கு அச்சுறுத்தல்; நீதிமன்றம் கவலை

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 23-ம் தேதி விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா நாட்டு சரக்கு கப்பல், மறுநாளான மே 24-ம் தேதி கொச்சியிலிருந்து 38 நா... மேலும் பார்க்க

Brazil: கவனக்குறைவால் Bungee Jumping விபத்தில் சிக்கிய மாணவி; காப்பாற்ற செவிலியர் நடத்திய போராட்டம்

ஒரு நொடி சாகசம், அடுத்த நொடி மரணம் எனப் பிரேசிலின் பாலத்தில் அரங்கேறிய விபரீதம் ஒட்டுமொத்த உலகையும் உறைய வைத்திருக்கிறது. சா பாலோ மாகாணத்தில் உள்ள லிமேரா நகருக்கு அருகில், "எலும்புக்கூடு பாலம்" என்ற ஆ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: சாலையோரக் கிணற்றில் விழுந்த வேன்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி; பிரதமர் இரங்கல்

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டர்பூரைச் சேர்ந்த 15 பேர் கோயில் ஒன்றுக்குச் சென்றுவிட்டு வேன் ஒன்றில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். வேன் தந்துல்வாடி என்ற கிராமத்தில் வந்த... மேலும் பார்க்க

அஸ்ஸாம்: விமானப்படை விமானம் விழுந்து 5 வீரர்கள் பலி; முதல்வர் ஹிமந்தா சொல்வது என்ன?

அஸ்ஸாமில் மாநிலம் ஜோர்ஹட் விமானப்படைத்தளத்தில் இன்று விமானப்படை விமானம் AN-32தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. விபத்தில் விமானத்தில் இருந்த விமானப்படை வீரர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த... மேலும் பார்க்க

மன்னார்குடி: `அப்பா வந்திருக்கேன் எழுந்திரி ராசா'- கார் மோதி 3 பள்ளி குழந்தைகள் பலி; கதறும் பெற்றோர்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை அரசுப் பள்ளியில் லோகேஷ், ரச்சித் ஆகிய இருவர் சிறுவர்கள் ஆறாம் வகுப்பும், ராஜமுரளி என்ற சிறுவன் ஏழாம் வகுப்பும் படித்து வந்தனர். இன்று மாலை வழக்க... மேலும் பார்க்க

குன்னூர்: மலைப்பாதையில் கவிழ்ந்த ஆந்திர சுற்றுலா வாகனம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் படுகாயம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த குடும்ப உறவினர்கள் 22 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வேன் மூலம் சுற்றுலா சென்றுள்ளனர். குடும்பமாக ஊட்டி, குன்னூரைச் சுற்றிப் பார்த்துவிட்டு நேற்றிரவு குன்னூ... மேலும் பார்க்க