செய்திகள் :

திருப்பத்தூர்: விபத்து வழக்கில் காரை விடுவிக்க லஞ்சம்; கையும் களவுமாகப் பிடிபட்ட எஸ்.எஸ்.ஐ கைது

post image

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவர், கடந்த 19-ம் தேதி தனது காரில் காவலூர் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, காவலூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மஞ்சுநாதனின் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லட்சுமணன் படுகாயமடைந்தார்.

இது குறித்து, காவலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய மஞ்சுநாதனின் காரைப் பறிமுதல் செய்து, ஆலங்காயம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட தனது காரை விடுவித்து தருமாறு மஞ்சுநாதன் ஆலங்காயம் காவல் நிலையத்தை அணுகினார்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை
லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை

அப்போது, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான ஆலங்காயம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் என்பவர், காரை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டிருக்கிறார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மஞ்சுநாதன், இதுபற்றி திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகாரளித்தார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் அறிவுறுத்தலின்பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் மஞ்சுநாதன் ஆலங்காயம் காவல் நிலையத்துக்குச் சென்றார். அங்கு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனிடம் அந்தப் பணத்தைக் கொடுத்தபோது, அவரும் கை நீட்டி வாங்கினார்.

அப்போது, அங்கு மறைத்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், ராமகிருஷ்ணனைக் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவரிடம், தொடர்ந்து துறைரீதீயான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒடிசா டு திருப்பூர்; AC பெட்டியில் வந்த 30 கிலோ கஞ்சா; துப்பாக்கியுடன் 4 பேர் கைதான பின்னணி என்ன?

திருப்பூர் மாவட்டம் சின்னக்கரை சோதனைச்சாவடி பகுதியில் கஞ்சா கடத்திச் செல்வதாக பல்லடம் காவல்நிலைய ஆய்வாளருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இதன் அடிப்படையில் குழுவாகச் சென்ற க... மேலும் பார்க்க

கடலூர்: காதலிக்க மறுத்த மாணவியைக் கத்தியால் குத்திய கொடூரம்; பயத்தில் இளைஞர் எடுத்த முடிவு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் சி.முட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த இவர், பக்கத்து கிராமத்தில் ஒரு வீட்டுக்கு ஒயரிங் வேலைக்குச் சென்றிருக்கிறார். அப்போது அந்த வீட்டில் ... மேலும் பார்க்க

"கணவன் என்னை விவாகரத்தே செய்தாலும் அந்தப் பையன்தான் வேணும்" - மனைவி பிடிவாதம்; கணவன் விபரீத முடிவு

சண்டிகரைச் சேர்ந்த மோனு என்பவர் 8 ஆண்டுகளாக கோமல் என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். எட்டு ஆண்டுக்குப் பிறகு இரு குடும்பத்தின் சம்மதத்தின் பேரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகள் ... மேலும் பார்க்க

Uttar Pradesh: பேண்டில் சிறுநீர் கழித்த 5 வயது சிறுவன்; அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த ஆசிரியை

உத்தரப்பிரதேச மாநிலம் வாரனாசி அருகில் உள்ள பண்டேபூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் கேசரி குமார் என்பவரின் 5 வயது மகன் படித்து வந்தான். அவன் வகுப்பறையில் இருக்கும்போது சிறுநீர் கழிக்க வாஷ்ரூம் ச... மேலும் பார்க்க

100 கோடி கேட்டு கடத்தல்... ₹44 கோடியில் முடிந்த பேரம்; மாலியில் விடுவிக்கப்பட்ட இந்திய வம்சாவளி

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைர வியாபாரி தீரு ரமாணி, சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது விடுதலைக்காக குடும்பத்தினர் சுமார் 4 ... மேலும் பார்க்க

போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய 2 ஆசிரியைகள் - QR Code மூலம் பணம் பெற்ற அதிர்ச்சி பின்னணி!

கேரள மாநிலத்தில் போதைப்பொருட்களை தடுக்கும் நோக்கில் `ஆபரேஷன் தூஃபான்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆபரேஷன் தூஃபான் சோதனையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிஸ்வான் என்பவரை எம்.டி.எம்.ஏ போதைப்பொரு... மேலும் பார்க்க