செய்திகள் :

திருமணமான 48 நாளில் தற்கொலை: மனைவியை கண்காணிக்க வீடு முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்திய டாக்டர்

post image

மும்பை அருகில் உள்ள அம்பர்நாத்தில் வசிக்கும் டாக்டர் நிதின் என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி தான் விஷாகா(26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில நாட்களில் நிலைமை மாறியது. திருமணத்தின் போது விஷாகாவின் பெற்றோர் எதிர்பார்த்த அளவுக்கு பணம், கிப்ட்கள் கொடுக்கவில்லை என்று நிதின் பெற்றோர் கருதினர். இதனால் விஷாகாவிடம் அடிக்கடி டாக்டர் நிதின் பெற்றோர் வீட்டில் சென்று நகை, பணம் வாங்கி வரும்படி கூறி நிர்ப்பந்தம் செய்து வந்தனர். அதோடு விஷாகா வீட்டில் உள்ளவர்களை தவிர வேறு யாரிடமும் பேச விஷாகாவிற்கு தடை விகிக்கப்பட்டு இருந்தது.

டாக்டர் நிதின் தனது வீட்டிற்குள்ளும், வீட்டிற்கு வெளியேயும் கண்காணிப்பு கேமரா பொருத்தி மனைவியின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வந்தார்.

விஷாகா யாரிடமாவது பேசினால் கொடூரமாக தாக்கப்பட்டார். டாக்டர் நிதின் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்துவிட்டு யாரிடமாவது விஷாகா பேசி இருந்தால் உடனே அடித்து உதைப்பது வழக்கம் என்கிறார்கள். இது குறித்து விஷாகா தனது பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார்.

இதையடுத்து விஷாகாவை தங்களது வீட்டிற்கு அழைத்து வர அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அதற்குள் விஷாகா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் பேசியதற்காக அவரை நிதின் கொடூரமாக அடித்து உதைத்துள்ளார். விஷாகாவிற்கு எந்த ஒரு சுதந்திரமும் இல்லாமல் சிறையில் இருப்பது போன்று வாழ்ந்து வந்தார். எனவே விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக விஷாகாவின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

விஷாகாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நிதின் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. திருமணமாகி 48 நாட்களில் விஷாகா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை தடுப்பு மையம்

திருவாரூர்: தனியாக நின்ற பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் ஈவ் டீசிங்; தவெக நிர்வாகி கைது

தவெக-வின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த் என்கிற ஆனந்தராஜ் (24). இவரும், இவரது நண்பர் அசோக் என்பவரும் நேற்று இரவு திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்துள்ளார். அங்கு 22 வயது இள... மேலும் பார்க்க

அனுமதி இல்லாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சி; தட்டிக்கேட்ட உதவி ஆய்வாளரைத் தாக்கிய புதிய தமிழகம் நிர்வாகிகள்

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள காமராஜர் நகரில் உள்ள வலம்புரி செல்வ விநாயகர் மற்றும் நாகமாரியம்மன் கோயிலில்திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவின்போது காவல்துறை அனுமதி இல்லாமல் ஆடல் பாட... மேலும் பார்க்க

சூலூர் சிறுமி பாலியல் கொடுமை வழக்கு: 2வது குற்றவாளியிடம் திருமணம் மீறிய உறவிலிருந்த பெண்மீது புகார்!

தஞ்சாவூர் அருகே உள்ள மாரியம்மன் கோவில் கன்னித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு மனைவி தனலட்சுமி. பெருமாள் மனைவி கிருஷ்ணம்மாள். இவர்கள் இருவரும் தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி சுந்தரவதனத்திடம் இன்று புகார்... மேலும் பார்க்க

கோவை: கிணற்றில் வீசிய துர்நாற்றம்; சாக்குப்பையிலிருந்து மீட்கப்பட்ட இளம்பெண் உடல் - போலீஸ் விசாரணை!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் கோபி ராசிபுரம் பகுதியில் செயல்படாத தொழிற்சாலை ஒன்று உள்ளது. தற்போது அந்த தொழிற்சாலையை திருமண மண்டபமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்... மேலும் பார்க்க

கோவை: `மீண்டும் தேர்ச்சி பெற முடியுமா?’ - நீட் மறுதேர்வு பயம்; விபரீத முடிவெடுத்த மாணவி!

கோவைப்புதூர் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் பிரபு. கோவை மாவட்ட டாஸ்மாக் சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாவட்டச் செயலாளராக உள்ள இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் அனுகீர்த்தனா (19) எட்டிமடை பகுதியி... மேலும் பார்க்க

ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணம்... காதலனுடன் சேர்ந்து திட்டம்; மருத்துவமனையில் வைத்து கணவரைக் கொன்ற மனைவி

கர்நாடகா மாநிலம், பெலகாவி என்ற இடத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்தீப், கடந்த மார்ச் மாதம் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது லேசான விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு பெரிய அளவில் காய... மேலும் பார்க்க