செய்திகள் :

``திருமாவளவன்: பாலுக்கும் காவல் - பூனைக்கும் காவல் என்கிறார்" - நயினார் நாகேந்திரன்

post image

பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது வரவேற்கத்தக்கது. ஆனால், கரூர் சம்பவம் நடந்தபோதே அவர் அங்கிருந்தே ஒரு ஆறுதல் கூறியிருந்தால் இதைவிட இன்னும் நன்றாக, பெரிய மரியாதையாக இருந்திருக்கும். இன்று அவர் முதலமைச்சராக வந்துவிட்டதால் கருணை அடிப்படையில் ஆணை கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அ.தி.மு.க-வைச் சேர்ந்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கும் இந்தச் சூழலில், இப்போது அங்கு போய் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது முழுக்க முழுக்க அரசியல் காரணம்தான்.

விஜய் - திருமாவளவன்
விஜய் - திருமாவளவன்

தேர்தல் முடிந்து 50 நாள்களுக்குள் அம்பாசமுத்திரத்திலோ, கரூரிலோ, விராலிமலையிலோ சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இன்றைய அரசு சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்துகிறது. விஜய் தலைமையிலான தவெக கூட்டணிக்குள்ளேயே ஒரு பெரிய பிரச்னை இருப்பது தெரிகிறது.

முன்பு ‘இந்தியா’ கூட்டணி என்று ஒன்று இருந்தது, இப்போது அது இல்லை. வரும் 2029-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவார்கள்.

திருமாவளவன் "நாங்கள் திமுக-வோடு நட்புறவோடு இருக்கிறோம்" என்று கூறுவது பாலுக்கும் காவல், பூனைக்கும் காவல் என்பது போல இருக்கிறது. இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

காங்கிரஸ் கட்சி காலம் காலமாக காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை என அனைத்திலும் தமிழகத்திற்கு துரோகம் செய்த கட்சி. கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்து மீனவர்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ். கர்நாடகாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சி மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று சொல்கிறது. இங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் அங்குள்ள முதலமைச்சருக்கு போனில் பேசினாலே போதும். ஆனால், மாணிக்கம் தாகூர், பிரதமர் இதில் தலையிட்டு தடுக்க வேண்டும் என்கிறார்." என்றார்.

கரூர்: `தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா தவெக அரசு?'- சிபிஎம் சண்முகம்

நாளை (ஜூலை 10) கரூர் செல்லும் முதல்வர் விஜய், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 நபர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்நிலை... மேலும் பார்க்க

`மாணவர்கள் பற்றாக்குறை' - 3 அரசு பள்ளிகள் மூடல்... உசிலம்பட்டியில் அதிர்ச்சி!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதி பெரும்பாலும் விவசாயம் சார்ந்த மிகவும் பின் தங்கிய பகுதியாக உள்ளது. இந்தப் பகுதி மக்களின் கல்வியை மேம்படுத்த ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்திலேயே ‘கள்ளர் சீரமைப்புத்துறை’ என... மேலும் பார்க்க

விடைபெறுகிறார் ஈரான் உச்சத் தலைவர் காமேனி: இறுதி ஊர்வலத்தின் முக்கிய தருணங்களின் தொகுப்பு!

பிப்ரவரி 28, 2026...ஈரான் உச்சத் தலைவரான அயோதுல்லா அலி காமேனியின் மூச்சை நிறுத்தியது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குண்டுகள். கிட்டத்தட்ட 34 ஆண்டுகளாக, ஈரானுக்கு, ஷியா பிரிவு முஸ்லீம்களுக்கு தலைமை பொறுப... மேலும் பார்க்க

'எம்எல்ஏ-க்களை வாங்குவதில் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து..!'- முதல்வரைச் சாடும் உதயநிதி

‘கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும், ‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் கர்நாடக நீர் பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் ... மேலும் பார்க்க

``முதல்வரின் நேரடிப் பொறுப்பு துறையிலேயே ஊழல் நடைபெறுகிறது" - சு.வெங்கடேசன் ஆவேசம்!

மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனம் பெரும் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அதன் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேச... மேலும் பார்க்க

இபிஎஸ் தலைமையிலான கூட்டத்தைப் புறக்கணித்த ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி; தவெக-வில் ஐக்கியமாகிறாரா?

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சென்னை அதிமுக தலைமையகத்தில் நடந்த கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தை, ஓசூர் எம்.எல்.ஏ பாலகிருஷ்ண ரெட்டி புறக்கணித்தது, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.எடப்ப... மேலும் பார்க்க