செய்திகள் :

திருவள்ளூர்: குடிக்கத் தண்ணீர் கேட்ட வடமாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை - மூவரிடம் போலீஸ் விசாரணை!

post image

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் பகுதியில் உள்ள ராமராஜன் கண்டிகை கிராமத்தில் பெண் ஒருவர் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அந்தப் பெண் வீட்டின் வெளிபக்க இரும்பு கேட்டை வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தட்டியிருக்கிறார். அதனால் வெளியில் வந்து பார்த்த பெண், என்ன வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு இளைஞர், பேசியது அந்தப் பெண்ணுக்கு புரியவில்லை. மேலும் இளைஞரின் கையில் கத்தியும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த பெண், உடனடியாக தன்னுடைய உறவினர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்ததோடு வீட்டுக்குள்ளேயே இருந்திருக்கிறார். ஆனால் அந்த இளைஞரோ இரும்பு கேட்டை தொடர்ந்து தட்டிக் கொண்டே இருந்திருக்கிறார்.

கொலை
கொலை

இந்தச் சமயத்தில் பெண்ணின் உறவினர்கள் அங்கு திரண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள், வடமாநில இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போது சிலர் வடமாநில இளைஞரை சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள். இதில் வடமாநில இளைஞர், மயங்கி விழுந்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதைத் தொடர்ந்து வெங்கல் காவல் நிலையத்துக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வடமாநில இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து வடமாநில இளைஞரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீஸார், கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். முதற்கட்டமாக பெண்ணின் உறவினர்கள் மூன்று பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இது குறித்து வெங்கல் போலீஸார் கூறுகையில், ``புலம் பெயர்ந்த வடமாநில இளைஞரின் பெயர் பிரசங்கிதாஸ் (35). இவர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். வேலைத் தேடி அவர் இங்கு வந்திருக்கிறார். அப்போது அவர் தண்ணீர் கேட்டு அந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறார். மொழி தெரியாததால் இந்த அசம்பாவித சம்பவம் நடந்திருக்கிறது. தொடர்ந்து வடமாநில இளைஞரின் கொலைக்கு காரணமானவர்களிடம் விசாரித்து வருகிறோம்'' என்றனர்.

சென்னை: சிறுவனுக்குப் பாலியல் தொல்லை; பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர்!

வடபழனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் வேலப்பன் என்பவர், சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்... மேலும் பார்க்க

கணவர், அவரின் 2-வது மனைவி உட்பட 4 பேரை கொன்று எரித்த பெண்; கதறி அழுது நாடகம்... சிக்கியது எப்படி?!

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் அருகில் உள்ள ஸ்ரீராம்புரா என்ற கிராமத்தில் வசித்தவர் ராம் சிங் செளதரி. முன்னாள் பஞ்சாயத்து தலைவரான ராம் சிங் 2005ம் ஆண்டு சுனிதா என்பவரை திருமணம் செய்தார். இத்திருமணத்தின் ம... மேலும் பார்க்க

கன்னியாகுமரி சிறுவனுக்குப் பாலியல் தொல்லை: காவலர் கைது; விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்; என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவன், கடந்த 25-ம் தேதி தன் பெற்றோருடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தன் மாமா வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவ... மேலும் பார்க்க

சென்னை: மூதாட்டிக்கு நடந்த கொடூரம் - கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பீகார் இளைஞர்கள்!

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், சற்று மனம் நலம் பாதிக்கப்பட்டவர். அதனால் அவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி சென்றுவிடுவார். அதைப் போல சம்பவத்தன்றும் மூதாட்டி அதிகாலை நேரத்தில் வீட்ட... மேலும் பார்க்க

ஸ்டேஷனில் 8 மணி நேரம்; மருத்துவமனையில் 10 மணி நேரம் - பாலியல் கொடுமை செய்யப்பட்ட சிறுமி அலைக்கழிப்பு

மகாராஷ்டிரா மாநிலம், பீட் என்ற இடத்தைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவரை அவர் உறவினர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். மைனர் பெண்ணை கை, கால்களை கட்டிவிட்டு, கர்ச்சீப்பால் வாயை அடைத்துவிட்டு அந்த நபர்... மேலும் பார்க்க

ஆன்மிகம் டு நட்பு; நோ சொன்ன இளம்பெண்; AI மூலம் ஆபாசமாக சித்திரித்த சொற்பொழிவாளர் - கைதுசெய்த போலீஸ்!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சுமித் சர்மா என்பவருடன் சமூக ஊடகம் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. சுமித் சர்மா ஆன்மிகச் சொற்பொழிவு மற்றும் ஆன்மிகம் தொடர்பாக அந்தப் பெண்ணுடன் சாட்டிங் செய்து வந்... மேலும் பார்க்க