செய்திகள் :

தீப்தி சர்மா நிகழ்த்திய சம்பவம்; பாகிஸ்தானை பந்தாடிய இந்திய பெண்கள் அணி!

post image

இங்கிலாந்தில் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை திருவிழா. குரூப் A, குரூப் B என மொத்தம் 12 அணிகள் களம் காணும் இந்தத் தொடரில், ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற கையோடு இருபது ஓவர் உலகக்கோப்பையையும் வெல்லத் தயாராக இறங்கியிருக்கிறது இந்திய அணி. முதல் போட்டியே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி. அதிலும் சிறப்பாக ஆடி தொடரை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறது இந்திய அணி.

Team India
Team India

ஆடவர் அணியாக இருந்தாலும் சரி, மகளிர் அணியாக இருந்தாலும் சரி, இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது. நேற்று (14.06.2026) நடைபெற்ற இந்தத் தொடரின் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை வீழ்த்தி, வெற்றியுடன் கணக்கைத் தொடங்கியிருக்கிறது இந்திய அணி.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஆரம்பமே அதிரடிதான்! இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா, பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து, 44 பந்துகளில் 68 ரன்கள் குவித்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஜெர்சி நம்பர் 18 களமிறங்கினாலே பாகிஸ்தான் அணியை பந்தாடுவது வழக்கமாகிவிட்டது.

மந்தனாவுடன் சேர்ந்து கேப்டன் ஹர்மன்பிரீத் 36 ரன்களும், ரிச்சா கோஷ் 34 ரன்களும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது.

Deept
Deepti

பேட்டிங்கில் கலக்கிய இந்திய அணி, 171 ரன்களை டிஃபெண்ட் செய்யும் பொறுப்பை பந்துவீச்சாளர்களிடம் கொடுத்தது. ஆரம்பத்தில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்த பாகிஸ்தான் பேட்டர்கள், அடுத்த 68 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்கள்.

இதற்கு முக்கியக் காரணம் தீப்தி சர்மாவின் மாயாஜால சுழற்பந்துவீச்சுதான். அவர் வீசிய 4 ஓவர்களில் வெறும் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

இதன் மூலம் மகளிர் டி20 உலகக்கோப்பையில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் தீப்தி சர்மா.

பேட்டிங்கில் மந்தனாவின் அதிரடி, பந்துவீச்சில் தீப்தியின் சாதனை என முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை வீழ்த்தி, தொடரை மாஸாகத் தொடங்கியிருக்கிறது இந்திய மகளிர் அணி!

மனு பாக்கரை ஒலிம்பிக் நாயகியாக்கிய `குரு' - கோச் ஜஸ்பால் ராணா திடீர் மரணம்; சாம்பியனை இழந்த இந்தியா

இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் ஜாம்பவானும், பாரீஸ் ஒலிம்பிக் நாயகி மனு பாக்கரின் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா (49), உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்ச... மேலும் பார்க்க

Praggnanandhaa: நார்வே செஸ் தொடரில் கெய்மரை வீழ்த்தி பட்டம் வென்ற பிரக்ஞானந்தா; வரலாற்று சாதனை!

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன் வின்சென்ட் கெய்மர்... மேலும் பார்க்க

Praggnanandhaa: நார்வே செஸ் பட்டம் வென்ற முதல் இந்தியர்; வரலாற்று சாதனை படைத்த பிரக்ஞானந்தா! |Live Updates

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன் வின்சென்ட் கெய்மர்... மேலும் பார்க்க

வடகொரிய மகளிர் கால்பந்து அணி வரலாற்றுச் சாதனை! அதிபர் கிம் ஜாங் உன்னுடன் கொண்டாடிய அரிய காட்சி

உலக நாடுகளை எப்போதுமே தனது ராணுவ பலத்தால் அதிரவைக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், முற்றிலும் ஒரு மாறுபட்ட நெகிழ்ச்சியான கோணத்தில் உலகிற்கு காட்டியுள்ளனர் அந்நாட்டு மகளிர் கால்பந்து அணியினர். 'ஏஎப்ச... மேலும் பார்க்க

ஒண்ணு இல்ல, ரெண்டு! ஒரே தொடரில், கார்ல்சனின் சொந்த ஊரில் இருமுறை வீழ்த்தி பிரக்ஞானந்தா செய்த சம்பவம்

செஸ் உலகின் சக்கரவர்த்தி என வர்ணிக்கப்படும் மேக்னஸ் கார்ல்சனை, அதுவும் அவரது சொந்த மண்ணில், ஒரே தொடரில் இருமுறை வீழ்த்துவதெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத சாதனை. அந்த அசாத்திய சாதனையை நிகழ்த்திக்... மேலும் பார்க்க

'காலத்துக்கு ஏத்த மாதிரி மாறனும்!' - 38 வயதில் விராட் கோலி எப்படி சாதித்தார்?

ஆர்.சி.பி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது. விராட் கோலியின் நீண்ட கால கனவு இது. ஆனால், அவருடைய கேப்டன்சியில் இந்த சாதனையை அவரால் நிகழ்த்தவே முடியவில்லை. ரஜத் பட்டிதார் வந்த பிற... மேலும் பார்க்க