செய்திகள் :

தீரன் சின்னமலை நினைவு நாள்: சாலைகளில் எல்லை மீறிய இளைஞர்கள், திணறிய காவல்துறை!

post image

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் கொங்கு நாட்டு பாளையக்காரர்களில் ஒருவருமான தீரன் சின்னமலை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படைகளை எதிர்த்து காவிரி கரை போர், ஓடாநிலை போர், அரச்சலூர் போர் ஆகிய போர்களை நடத்தி அதிர வைத்தவர். பிரிட்டிஷாரின் சூழ்ச்சியால் தூக்கிலிடப்பட்டார். அவரின் வீரத்தைப் போற்றும் விதமாக நினைவு நாளை தமிழ்நாடு முழுவதும் அனுசரித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள அவரின் நினைவிடத்தில் நேற்று நடைபெற்ற நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்கள் அமைச்சர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்திய அளவில் போற்றப்படும் விடுதலைப் போராட்ட வீரரின் நினைவு நாளை அனுசரகக்கிறோம் என்கிற பெயரில் சில சாதி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சாலைகளிலும் பொது இடங்களிலும் விதிமுறைகளை மீறி அத்துமீறலில் ஈடுபடுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

விதிமீறல்கள்

குறிப்பாக ஈரோடு, நாமக்கல், சேலம் பகுதிகளில் வாகனங்களின் நபர் பிளேட்களை அகற்றியும் மறைத்தும் பயணிக்கும் இளைஞர்கள், விதிமீறிப் பயணிப்பது, அதிக ஒலியில் ஹாரன் எழுப்புவது, மக்களைப் பார்த்து கூச்சலிடுவது, வாகனங்கள் மீது ஏறி நிற்பது, காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற இந்த அத்துமீறலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியுள்ளனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக பெயருக்கு ஒன்றிரண்டு வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். கொங்கு நாட்டின் மாவீரர் என்று போற்றப்படும் தீரன் சின்னமலை அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலரால் நடைபெற்று வரும் இத்தகைய அத்துமீறல்களை சம்மந்தப்பட்ட சாதி அமைப்புகள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

ஹரியானா: பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியை சரமாரியாகக் குத்திக் கொலை; முகமூடி அணிந்தவரின் வெறிச்செயல்

ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகில் உள்ள சிக்ரோனா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சந்தியா(29) என்ற ஆசிரியைப் பணியாற்றி வந்தார். பள்ளிக்குச் சற்று தொலைவில்தான் போலீஸ் நிலையம் இருக்கிறது. ஆசிரியை ச... மேலும் பார்க்க

"என் மகனை உயிருடன் வைத்திருக்க இதைச் செய்தேன்"- ஐஐடி-யில் தற்கொலை செய்த மகனுக்கு கோயில் கட்டிய தந்தை

கடந்த 2024ம் ஆண்டு அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் அக்ஷித் பூக்யா என்ற இரண்டாம் ஆண்டு மாணவர் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஐ.ஐ.டி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் ஒருக்கி... மேலும் பார்க்க

மும்பை சித்திவிநாயக் கோயில் உண்டியல் பணம் திருட்டு; ஆண்டுக்கு ரூ.18 கோடியை அபேஸ் செய்த 8 ஊழியர்கள்

அயோத்தி ராமர் கோயிலில் உண்டியல் பணம் திருடப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அது போன்று உண்டியல் பணம் திருடப்படும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. மும்பையில் மிகவும் பிரபலமானது சித... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மைனர் பெண்; முகத்தைச் சிதைத்துவிட்டு வீசிய கும்பல்

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஹைலாகண்டி மாவட்டத்தில் 15 வயதேயான மைனர் பெண்ணை மர்ம நபர்கள் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்கள் மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரது முகம் மற்றும்... மேலும் பார்க்க

'மீண்டும் ஒன்று சேரலாம் வா...' - விவாகரத்தான மனைவியை அழைத்துச் சென்று கொன்று புதைத்த கணவன்!

பஞ்சாப் மாநிலம், பாசில்கா மாவட்டத்தைச் சேர்ந்த சரோஜ் (42) என்ற பெண் தனது கணவர் குர்மீத் சிங்கிடமிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று தனது பெற்றோருடன் வசித்து வந்தார். குர்மீத் சி... மேலும் பார்க்க

சிவகாசி: திருமணம் மீறிய உறவு; 3 வயது பெண் குழந்தையை கொன்ற கொடூரன்- நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள சின்னக்கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி என்பவருக்கும் சுவாதி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 வயதில் விஷ்... மேலும் பார்க்க