செய்திகள் :

`துப்பாக்கிச்சூட்டில் பலியான குடும்பத்திற்கு அரசு பணி வழங்கியபோது தடுக்காதது ஏன்?' - செங்கோட்டையன்

post image

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கும் விதமாக கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், " இந்தியாவிலேயே இதுவரை நடக்காத நிகழ்வாக கரூரில் நடந்திருக்கிறது. கட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களும் மனிதர்கள் தான். அவர்களின் குடும்பத்தினருக்கும் கருணை அடிப்படையில் உதவி செய்ய வேண்டியது கடமை. தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டது.

அமைச்சர் செங்கோட்டையன்

ஆனால், அதை ஏன் யாரும் கேள்வி கேட்டு தடுத்து நிறுத்தவில்லை. நாங்கள் சாஃப்ட்டாக ஆட்சி நடத்துகிறோம்.‌ அதனால் தான் ஈஸியாக கேள்வி கேட்கிறார்கள். கடந்த காலங்களில் பல்வேறு துறைகளில் முறைகேடாக தகுதியற்றவர்களுக்கு வேலை வழங்கிய நிகழ்வுகளோடு ஒப்பிடும்போது, தற்போதைய அரசு கரூரில் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக தற்காலிக அடிப்படையில் அரசு வேலைகளை வழங்கியிருப்பது அதிகார துஷ்பிரயோகம் அல்ல. கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதில் எந்தத் தவறும் இல்லை. அது ஒரு மனிதாபிமான அடிப்படையிலான நடவடிக்கை" என்றார்.

`தமிழ்நாட்டில் ஒரு வாரம் கோழி இறைச்சி விற்பனை நிறுத்தம்?' - வணிகர்கள் கூட்டமைப்பின் தீர்மானம் என்ன?

தஞ்சையில் கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் ஒரு வார காலத்திற்கு கோழி இறைச்சி விற்பனையை முழுமையாக நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட கோழி வணிக... மேலும் பார்க்க

`3,084 ஏக்கர் கோயில் நிலமா? பாஜக-வின் அப்பட்டமான பொய்; இதுதான் நடந்தது..!'- எம்.பி ஜோதிமணி விளக்கம்

கோவை பீளமேடு பா.ஜ.க அலுவலகத்தில் மாநில பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``கரூரில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நான்கு கோயில்களின் ரூ. 25 ஆ... மேலும் பார்க்க

'ஸ்டார்ட்... கேமரா... ஆக்ஷன்' - முதல்வர் விஜய் பேச்சு குறித்து ஜெயக்குமார் விமர்சனம்

சட்டமன்ற தேர்தல் படுதோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்ட, அதைப் புறக்கணித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீண்ட இடைவெளிக்கு பின், சென்னையில... மேலும் பார்க்க

``வாடகை சக்திகளின் துணையில் ஆட்சி நடத்துகிறார் விஜய்!" - அதிமுக எம்.பி இன்பதுரை காட்டம்

மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதில் தவறு கிடையாது. சுமுகமான உறவுடன் செயல்பட்டு மக்களுக்குத் தேவையான பல நல்ல திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என ஐ.எஸ்.இன்பதுரை எம்.பி தெரிவித்திருக்கிறார்.நெல்லையில் ம... மேலும் பார்க்க

’பாஜகவை எதிர்த்து எந்த கட்சியும் இப்போது பேசுவதில்லை’- மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

கோவை சவுரிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பா.ஜ.க அரசை கண்டித்தும், நீட் தேர்வு பாதிப்புகளை விளக்கியும் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்... மேலும் பார்க்க

"1987 வன்னியர் போராட்டத்தில் உயிரிழந்த 25 பேரின் வாரிசுகளுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும்”- அன்புமணி

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணையை நேற்று(ஜுலை.10) முதல்வர் விஜய் வழங்கியிருந்தார். இந்நிலையில் “வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் பார்க்க