'இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவு' - 3 காரணங்கள் என்ன? இன்னும் எவ்வளவு வரை சரிய...
'துல்கர் சல்மானுக்கும் எனக்கும் பிரச்னையா?'- டொவினோ தாமஸ் விளக்கம்
டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி இருக்கிறார்.
ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (மார்ச்.30) நடைபெற்றது. இதில் டொவினா தாமஸ் கலந்துகொண்டார்.
அப்போது அவரிடம் " நீங்களும் தான் 'லோகா' படத்தில் நடித்திருக்கீர்கள். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டானது. ஆனால் படக்குழு உங்களைப் பற்றி எங்கேயும் பேசவில்லை. துல்கர் சல்மானுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்னை?" என்று கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், " என்ன பத்தி பேசலையா? ஏன் என்ன பத்தி பேசலன்னு கால் பண்ணி துல்கர் கிட்ட கேக்குறேன்" என சொல்லி நகைச்சுவையாக சிரித்தார்.
தொடர்ந்து பேசிய டொவினா, "நான், துல்கர் சல்மான் எல்லாம் ரொம்ப நாளா சேர்ந்து நடிச்சிருக்கோம். நான் அசிஸ்டன்ட் டைரக்டரா வொர்க் பண்ணதே துல்கரோட படத்தில தான்.
அதுக்கு அப்பறம் அவரோட ஒரு படத்தில வில்லனா நடிச்சேன். அப்போ இருந்து இப்ப வரைக்கும் அவர் என்கிட்ட இனிமையாத் தான் நடந்துபாரு.
'லோகா' படத்தில நடிச்ச எல்லாருடனும் சேர்ந்து நடிச்சிருக்கேன். நாங்க எல்லாருமே ப்ரெண்ட்ஸ் தான். இந்த மாதிரி வதந்திகளைப் பரப்பி விடுறது ஈசி தான். பெரும்பாலான நேரங்களில் இந்த மாதிரி வதந்திகளை கேட்டு சிரிப்பேன்.

'லோகா' படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்பறம் கூட துல்கர் தான் எனக்கு கால் பண்ணி துபாய்-ல புரொமோஷன் இருக்குன்னு என்னை டிக்கெட் போட்டுக் கூடிட்டுபோனாரு. ரெண்டு, மூணு நாள் அங்க இருந்து என்ஜாய் பண்ணோம்.
அதனால இந்த மாதிரி வதந்திகளை யார் பரப்பிவிடுறாங்கன்னு தெரியல. அவங்களுக்கு இதில என்ன சந்தோஷம்'னு தெரியல" என்று கூறியிருக்கிறார்.


















