செய்திகள் :

தூத்துக்குடி:`இன்ஸ்டாவில் சக நண்பர்களுடன் பேசக்கூடாது' - சமாதானம் பேச அழைத்து காதலியை கொன்ற காதலன்

post image

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் உமா. இவர், தென்காசி மாவட்டம், பாறைப்பட்டியில் உள்ள தனியார் காவலர் பயிற்சிப்பள்ளியில் படித்து வந்தார். இதே பள்ளியில் திருவேங்கடம் அருகிலுள்ள கொளக்கட்டான் குறிச்சியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரும் படித்து வந்தார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

கொலை செய்யப்பட்ட உமா- ராஜேஷ்

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் இருவரும் பேசாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில், தொலைதூரக் கல்வியில் இளங்கலை படிப்பதற்காக கட்டணம் செலுத்திவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது உமாவை தொடர்பு கொண்ட ராஜேஷ், அவருடன் சமாதானமாக பேசியுள்ளார்.

பின்னர், மாலையில் உமாவை கஸ்தூரிரெங்கபுரம் பகுதியிலிலுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இன்ஸ்டாகிராமில் சக நண்பர்களுடன் பேசக்கூடாது எனவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் ராஜேஷ் வற்புறுத்தினாராம்.

கழுகுமலை

இதற்கு உமா மறுக்கவே அவரை கடுமையாக தாக்கி கழுத்தை நெரித்துள்ளார். இதில், உமா உயிரிழந்துள்ளார். இதனையடுத்து வெம்பக்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்ற ராஜேஷ் நடந்ததைக் கூறி சரணடைந்துள்ளார். கொலைச் சம்பவம் நடந்த பகுதி கழுகுமலை என்பதால், கழுகுமலை போலீஸாரிடம் ராஜேஷை ஒப்படைத்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அளித்துள்ள வாக்குமூலத்தில், “நானும் உமாவும் காதலித்து வந்தோம். இதற்கிடையில் அவர், இன்ஸ்டாகிராமில் சக நண்பர்களுடன் பேசிப் பழகி வந்ததால், எனக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. சமாதானம் செய்யவே அவரை வரச்சொன்னேன். ஆனால், அவர் உடன்படவில்லை. கோபத்தில் கழுத்தை நெரித்ததில் அவர் மயங்கினார்.

கொலைச் சம்பவம் நடந்த காட்டுப்பகுதி

உடனே 108 ஆம்புலன்ஸூக்கு போன் செய்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தேன். ஆனால்,  அவரை பரிசோதித்த நர்ஸ், உமா இறந்துவிட்டாதாகக் கூறினார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் போலீஸில் சரணடைந்தேன்” எனக் கூறியுள்ளார். காதலியை காதலனே கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.  

சபரிமலை கோயில் தங்கம் கொள்ளை வழக்கு: தேவஸ்தான தந்திரி கண்டரரு ராஜீவர் கைது! - என்ன நடந்தது?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலகர்கள் சிற்பம், திருநடை ஆகியவற்றில் பொதிந்த தங்கத்தகடுகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை கேரளா கோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக... மேலும் பார்க்க

சென்னை: நகைக்காகக் பெண் கொலை - இளைஞர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை, அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (55). இவரின் மனைவி அமுதா (53). கடந்த 8-ம் தேதி மாலை சீனிவாசனின் வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. அதோடு வீட்டுக்குள் இருந்து புகையும... மேலும் பார்க்க

திண்டுக்கல்: ஜாமீனில் வந்த 21 நாள்களில் கணவன் - மனைவி வெட்டி படுகொலை; பின்னனி என்ன?

திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 41). மீன் வியாபாரி. இவர் நேற்று கொசவபட்டியில் புதிதாக மீன் கடை வைப்பதற்காக இடம் பார்த்துவிட்டு அவரது மோட்டார் சைக்கிளில் நத்தத்திலிருந்து திண்டு... மேலும் பார்க்க

சேலத்தில் மருத்துவ மாணவி கொலை; காதல் விவகாரமா? தந்தையைத் தேடும் போலீஸ்! - நடந்தது என்ன?

சேலத்தை அடுத்த சித்தர்கோயில் அருகில் தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பாரதி நகரைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகள் வர்ஷின... மேலும் பார்க்க

சேலம்: பட்டா பெயர் மாற்றத்திக்கு லஞ்சம்; ஓய்வுபெற இருந்த வருவாய் ஆய்வாளர் கைது; நடந்தது என்ன?

சேலம் மாவட்டம், ஆத்தூர் மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது தாய் பச்சியம்மாள் பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனு... மேலும் பார்க்க

`திறமையை சோதிக்க வேண்டுமென அழைத்தார்' - 17 வயது வீராங்கனையை வன்கொடுமை செய்த பயிற்சியாளர்

டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில், 17 வயது வீராங்கனை கலந்து கொண்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார். அந்த வீராங்கனைக்கு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுவதில் த... மேலும் பார்க்க